பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும் ! கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும் -2

(Ice Age, Sea-Floor Rise & Fall)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

கலியுகம் விழிக்கும் முன்னே
பதினெட் டாயிரம் ஆண்டுக்கு முன்
பனியுகம் தவழ்ந்தது!
கடல் நீர் சுண்டி,
தமிழகத் தென்கரை நீண்டு
குமரிக் கண்டம்
கூந்தலை விரித்தது!
சூழ்ந்திடும் பரிதிக் கணப்பில்
படிப்படியாய்,
பனிப் பாறை உருகிடும் !
நீர் மட்டம் உயர
நிலத்தின் நீட்சி மூழ்கும்!
கடல் மடி நிரம்பி
முடிவில் புதை பூமியாய்
சமாதி யானது,
குமரிக் கண்டம்!

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறை அரிப்பும், பனிமலைச் சரிப்பும் பூதளத்தின் மேனியைக் கோரமாக்கி அழியாத வரலாற்றுச் சான்றுகளாய் நமக்குக் கற்பாறைகளில் கல்வெட்டு செய்திருக்கிறது! பூகோளத்தில் தோன்றிய பனியுகத்தின் ஆட்சியின் போது, பனித்தாள்கள் [Ice Sheets] கண்டங்களில் படிந்து விட்டுப் போன அடையாளச் சின்னங்கள் அவை

பால் ஃபிரிக்கென்ஸ்

‘யுகம் யுகங்களாய் மெதுவாக பூதளத்தின் முகம் மாறிப் போகும் படைப்பு முடிவு பெறாது நீண்டு சென்றாலும், ஒவ்வொரு பூர்வீகச் சின்னத்தை உண்டாக்கிக் கால வரலாற்றை மாற்றிய தனித்துவ இயக்கம் பிரபஞ்சத்தின் உண்மையான ஓர் ஆற்றல் கதையை நமக்குக் கூறுகிறது ‘.

லோவெல் தாமஸ்

‘தளமட்டம் அதிர்ந்து கோரமாய்ச் சாய்கிறது! பூமி பிளக்கிறது! குன்றில் எரிமலை வெடிக்கிறது! பூதளத்தின் மீது உலவும் மாந்தர், கொந்தளிக்கும் அடித்தட்டு ஆட்டத்தால் குலுக்கப்பட்டு நடுங்குகின்றனர். இயற்கையின் இந்தப் பயங்கரப் பேயாட்டத்தின் காரணத்தை இப்போது நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம் ஆயினும், அவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத தவிப்பு நிலையில் நாம் இருக்கிறோம் ‘.

நோயல் புஷ்

முன்னுரை:    ஒவ்வோர் ஆயிரமாண்டு [Millennium] பிறப்புக்குப் பிறகும் பூதளத்தின் தளப் பண்புகள் மாறி அவற்றின் தனித்துவச் சின்னங்கள் எல்லாம் மாந்தர் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயற்கை அன்னை புதையலாக மறைத்து வைத்திருக்கிறாள்! மலைச் சிகரங்களில் பனிமுடி! பூதளக் கண்டங்களில் படிந்துள்ள புழுதி [Sediments]! கடற் தளங்களில் காணப்படும் அற்பச் சிப்பிகள், பூர்வப் படிவங்கள் [Fossils]! மலைப் பாறைகளில் காலச் சிற்பி பதித்துள்ள மிருகங்களின் கூடுகள்! குமுறிய எரிமலை ஆறோட்டத்தின் ஆறிய குழம்புகள்! 1960 ஆம் ஆண்டு முதலாக கடற்தளங்களில் பலமட்ட அடுக்குகளில் நூற்றுக் கணக்கான துளைகளிட்டுக் காலநிலை மாறுபாடு, கடல் மட்ட வேறுபாடு, பூர்வீக உயிரினங்களின் மலர்ச்சி, மறைவு, பூதளத் தட்டுகளின் பிறப்பு, இறப்பு, பெயர்ச்சி, கண்டங்களின் பண்டைய வயது போன்ற புதிர்களைப் பூதளவாதிகள் விஞ்ஞான ரீதியாக விடுவித்திருக்கிறார்கள்.

18,000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்த பூகோளத்தின் தோற்றமும், சூழ்வெளியும் இன்றைய அமைப்பை விட வேறுபட்டிருந்தன. சூழ்மண்டலத்தின் வாயு உஷ்ணம் சில டிகிரிகள் [2 C to 3 C] சற்று குறைவாக இருந்தது. பனித் திரட்டுகள் உண்டாகிக் கடல்மட்டம் தணிந்திருந்தது. அச்சமயத்தில்தான் பூமியில் பனியுகம் தோன்றி யிருக்க வேண்டும் என்று பூதளவாதிகள் கூறுகிறார்கள். பனியுகத்தின் படர்ந்த உச்சக் கட்டத்தில், வட ஐரோப்பா, கிரீன்லாந்து வட அமெரிக்காவின் வடபுறம் மற்றும் அண்டார்க்டிகா பிரதேசங்கள் பனிமண்டலம் மூடிக் குளிர்ப் பகுதிகளாய் மாறிவிட்டிருந்தன. அப்போது பூதளத்தின் நீர்வளம் சுண்டிச் சுருங்கிக் கடல் மட்டம் சுமார் 300 அடி முதல் 500 அடி வரைத் தணிந்து, உலகக் கண்டங்களின் விளிம்புகள் நீண்டு, ஆசியாவிலிருந்து அமெரிக்காவின் [வடக்கு, தெற்கு] கண்டங்களுக்குப் நிலப்பாலங்கள் [Land Bridges] அமைந்த தென்று கருதப்படுகிறது! அடுத்த 8000 ஆண்டுகள் சூழ்வெளி வெப்பம் படிப்படியாக மிகையாகிப் பனிமலைகள் உருக ஆரம்பித்துக் கடலின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. வட அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகள் [சுப்பிரீயர், மிச்சிகன், ஹூரான், ஈரி, அண்டாரியோ] போன்ற மாபெரும் சுவைநீர் ஏரிகள் அப்போதுதான் நிரம்பின என்று ஊகிக்கப் படுகிறது.

மேலும் பனியுகத்தின் மத்தியில் பனித்திரட்சிகள் மண்டி நீண்ட காலமாக உச்சநிலை ஏறிப் பின் இறங்கி வெப்பமும், குளிர்ச்சியும் சூழ்வெளியில் மாறி, மாறி மீண்டும் சுற்றியதால், பூமி சூரியனைச் சுற்றிவரும் சுழல்வீதி [Earth ‘s Orbit] வேறானது. பூமியின் சுழல்வீதி மாறிய போது, பரிதியால் ஏற்படும் வெப்பமும், காலநிலைகளும், சூழ்மண்டலும் வேறுபட்டுப் போயின! 100,000 ஆண்டுகளுக்கு முன்பு பரிதியை நீள்வட்டச் சுழல்வீதியில் [Elliptical Orbit] சுற்றிவந்த பூமியின் பாதை, பின்னால் ஏறக்குறைய முழு வட்டவீதியாக [Near-Perfect Circular Orbit] மாறிப் போனதாக அறியப்படுகிறது! நீள்வட்டத்தில் பரிதியைக் குவிமையமாகக் [Focus] கொண்டு பூமி சுற்றும் போது, பாதிக் கோளம் ஒரு சமயம் மிக அருகில் சுற்றியும், ஆறு மாதங்களுக்குப் பிறகு வெகு தூரத்திலும் சுற்றியும் வந்துள்ளது! ஆனால் வட்டவீதியில் சுற்றும் போது பாதிக் கோளம் ஏறக்குறைய ஒரே தூரத்தில் ஆண்டு முழுவதும் சுற்றிவரும். தற்போதைய வெப்பச் சூழ்நிலை மாறி ஒருநாள் உஷ்ணம் சில டிகிரிகள் குன்றி மீண்டும் பனியுகம் வரலாம் என்று பூதளவாதிகள் கருதுகின்றனர்.

பூதளக் கண்டங்களில் தோன்றிய பனியுகப் புரட்சி

1960 ஆண்டுகளில் செய்த கடற்தள உளவு ஆராய்ச்சிகளில் 1.7 மைல் ஆழத்தில் தோண்டிய குழி ஒன்றில் 250,000 ஆண்டுகளுக்கு முன்னே புதைந்து போயிருந்த பனிக்கருவை [Ice Cores] எடுத்திருக்கிறார்கள். அது பண்டைய காலத்துச் சூழ்வெளி அமைப்புகள் [Prehistoric Atmospheres], தட்பகால பனிப்பொழிவுகள் [Seasonal Snowfalls], பனிக்குன்றுகள் நொறுக்கிய பாறைகள் [Rocks crushed by Glaciers], எரிமலைச் சாம்பல்கள், காற்றுத் தூசிகள் போன்ற வற்றைக் காட்டும் ‘காலச் சின்னமாய் ‘ [Time Capsule] இருந்துள்ளது! 167 மில்லியன் ஆண்டு களுக்கு முன்னே கடற்பீடக் கருக்கள் [Sea Cores] 1.3 மைல் ஆழம்வரை தொட்டிருக்கின்றன. அவற்றின் மூலம் அந்தக் கால எரிமலைக் குழிகள் [Volcano Trenches], கடலின் அடித்தளம் அமைக்கும் பஸால்ட் துணுக்குகள் [Basalt Pieces], கடற் புழுதிகள் [Marine Sediments], உஷ்ண மாறுதலைக் காட்டும் துருவப் பனிமூட்டம் போன்ற நுண்ணுருச் சிப்பிகள் [Microscopic Shells like Polar Ice] அறியப்பட்டன. 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 4 பில்லியன் ஆண்டுகள் வரை நிகழ்ந்த பூகோள வரலாற்றை அறியக் கடற்தளத்தின் அடித் தட்டுகள், கண்டப்பாறை மையங்களின் அரிப்புகள் [Oceanic Crust & Eroded Centers of Continents] ஆகியவை பயன் படுகின்றன! அதற்கும் அப்பால் என்ன நேர்ந்தது என்பதை அறிய பூகோளத்தில் சின்னங்களோ அல்லது பூர்வப் படிவங்களோ இருப்பதாகத் தெரியவில்லை!

ஆஃப்பிரிக்கா, அண்டார்க்டிகா, ஆஸ்திரேலியா, தென்னமெரிக்கா, இந்தியா ஆகிய கண்டங் களில் ஒரே காலத்தில் பனிக்காடுகள் சூழ்ந்திருந்தன என்னும் கருத்து, அக்கண்டங்கள் யாவும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஒன்றாய்ப் பிணைந்திருந்தன என்னும் கோட்பாடை ஒப்புக்கொள்பவர் புரிந்து கொள்ள முடியும். உலகக் கண்டங்கள் தற்போதுள்ள நில அமைப்பில் இருந்து பனிமண்டலத்தால் மூடிக் கிடந்ததாக அனுமானித்தால், பூமத்திய ரேகைக்கு வடபால் இருக்கும் கண்டங்களிலும் பனிமயம் சூழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்விதம் வடகோளத் தில் பனிமயம் சூழ்ந்திருந்ததற்குப் பூதளவாதிகள் எந்த சான்றுகளும் காணவில்லை. மெய்யாக அச்சமயத்தில் வட அமெரிக்கா கண்டம் வெப்பக் கணப்பு சூழ்ந்ததாக இருந்ததாம்!

18,000 ஆண்டுகளுக்கு முன் எழுந்த பனியுகம், பூகோளத்தின் சராசரி உஷ்ணம் [சிறிதளவு 2 டிகிரி C (4 டிகிரி F)] குன்றி ஒரு காலத்தில் மீளலாம் என்று பூதளவாதிகள் அஞ்சுகின்றனர்! படையெடுக்கும் பனி மண்டலம் பூகோள வெள்ளத்தைச் சுண்ட வைத்து, கடல்நீர் மட்டம் குன்றிக் கண்டங்களின் சரிவுத் தோள்களை [Continental Shelves] தெரியும்படி ஆக்கிவிடலாம்! நியூயார்க் நகரம் பனிமூட்டமாகித் தடித்த பனித்தட்டு மூடி, எம்பெயர் ஸ்டேட் கட்டிடமே மூழ்கிப் போகலாம்! சிகாகோ, டெட்ராய்ட், டொராண்டோ, மாண்டிரியால் ஆகிய நகரங்களும் பனிச் சமாதியில் அடங்கி விடலாம்! ஜப்பான் ஆசியக் கண்டத்தின் நீட்சிப் பகுதியாகலாம்! இங்கிலாந்திலிருந்து பிரான்சு நாட்டுக்கு நடந்தே செல்லலாம். இந்தியாவிலிருந்து பாத யாத்திரை செய்து இலங்கைக்குப் போகலாம். அதே சமயம் மறுபுறம் பார்த்தால், பூமியின் வெப்பச் சூழ்மண்டலத்தில் ஒரு சில டிகிரி உஷ்ண ஏற்றத்தால் [2 C] துருவப் பனிப்பாறைகள் உருகி, உலக மெங்கும் தணிந்த தளப்பகுதிகள் யாவும் கடல்நீரில் மூழ்கிப் போகலாம்!

பூகோளத்தின் தட்ப வெப்ப நிலைகளை ஏற்றி, இறக்கி உலக மக்களைத் தவிக்க வைக்கும், இயற்கையின் யந்திர ஆற்றல்கள் விந்தையானவை! பூகோளச் சுற்று அச்சின் சரிவு [Tilt of Planet Axis], சுற்றிவரும் சுழல்வீதியின் மாறுபாடு [Changes in Earth ‘s Orbit], பரிதியின் தேமல்களால் [Sunspots] திரளும் கதிர்வீச்சின் உக்கிரம் [Swells of Radiation], எரிமலைகள் கக்கும் கரிமண்டல வாயுக்கள் சூழ்வெளியில் கலப்பு [Volcanic Activity Gas Emissions] ஆகியவை அவற்றில் முக்கிய மானவை! காலச் சிற்பி எரிமலைகளால் எழுப்பியுள்ள கடற்தீவுகளும், கண்டங்களில் உயர்த்தி யுள்ள கோபுரங்களும் உலக விந்தைகளாய் இன்றும் காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் வயாமியில் பக்கத்து பெல் ஃபவுச் நதி [Belle Fouche River] மட்டத்திலிருந்து 1253 அடி உயரம் எழுந்துள்ள ‘பிசாசுக் கோபுரம் ‘ [Devils Tower in Wyoming] உலகப் புகழ் பெற்றது! (700-3000) அடி உயரத்தில் ஏகவடிவப் பாறையாய்த் [Monolithic Phonolite Rock] தோன்றிப் பூமியின் உட்தளத்திலிருந்து தலைதூக்கி நிற்கும் அக்கோபுரம், எரிமலைக் குழம்பு நிரம்பிப் பனிப்புயல் அரித்துச் செதுக்கப்பட்ட சிற்பக் கோபுரம்! செந்நிறத்தில் பிரமிட் போல் தோன்றும் அக்கோபுரம் ஐம்புறம் கொண்டு கூம்பிய பல தூண்களை [Columns] உடையது! அதன் வயது சுமார் 40 மில்லியன் வருடம் என்று கணிக்கப்படுகிறது! அதுபோல் 50 அடி உயரமுள்ள ஆஸ்திரேலியாவின் அதிசய ‘அலைப்பாறை ‘ [Australia ‘s Wave Rock] இயற்கையின் பனிப்புயல் கோரப் பற்களால் அரிக்கப்பட்டதாகத் தெரிகிறது!


பூகோளக் கண்டங்களின் இடைப்படும் கடற்தளங்கள்

கடற்தளங்களின் வரைபடத்தைத் தயாரிக்க முதலில் குறிப்பிட்ட இடத்தின் ஆழம் அறியப்பட வேண்டும். ஒருகாலத்தில் கனத்த இரும்புக் கட்டியைக் கயிற்றில் தொங்கவிட்டுக் கடலின் ஆழங்கள் அளக்கப் பட்டன. அப்பணி களைப்பை உண்டாக்கிக் காலத்தை நீடிக்கும் ஒரு கடினப் பணி! தற்போது ஒலிச்சக்தி அதிர்வுகளை [Ultrasonic Pulses] உண்டாக்கி, எதிரொலி மீளும் நேரத்தைப் பதிவு செய்து கடலின் ஆழங்கள் துல்லியமாகப் பதியப் படுகின்றன. தொலைக்காட்சி காமிராகளை கடலில் இறக்கி, எரிமலைப் பீடங்களை படம் பிடித்துக் கொள்ளலாம். விரிந்த பெரும்பான்மையான கடற்தளப் பரப்புகள் சமதள மட்ட முடையவை. கடலின் உச்சத்தணிவுப் பகுதிகளில் [Abyssal Plains] புழுதிகள் மண்டிக் கிடக்கின்றன. ஆனால் கடலின் மற்ற பகுதிகளில் புள்ளி புள்ளியாகத் தெரியும் செத்த எரிமலைப் புண்களும், புகை கக்கிக் கொண்டிருக்கும் ஜீவனுள்ள எரிமலைச் சீறல்களும் காண முடிகிறது! அமெரிக்காவின் ராக்கி மலைத் தொடர் போன்றும், செங்குத்துமலைப் பள்ளத்தாக்குகள் [Canyon like Trenches] போன்றும், கடற்தளங்களிலும் காணப்படுகின்றன.


கண்டத்தின் தோள்சரிப்பு [Continental Shelf] என்றால் என்ன ? எரிமலைகள் உருவாக்கிய தீவுகளின் விளிம்புகள் ஏறக்குறைய செங்குத்தாகச் சரிந்து கடற்தளத்துடன் பிணைக்கப் படுகின்றன. ஆனால் உலகக் கண்டங்களின் கடல் விளிம்புகள் தணிந்த மட்டங்களில் தோள்சரிந்து தெரிகின்றன. இச்சரிவுகள் சுமார் 650 அடி ஆழம்வரை படிப்படியாகச் சரிந்து பிறகுத் திடாரென செங்குத்தான பள்ளமாகின்றன. மெல்லச் சாயும் தோள்சரிவு சுமார் 50 அல்லது 50 மைல் தூரத்துக்கும் குறைவாக கடலுள்ளே செல்லலாம். விதி விலக்காக சைபீரியாவின் தோள்சரிவு 800 மைல் தூரம் வரை ஆர்டிக்கடலில் நீள்கிறது.


உலகத்தின் கடல்கள் எத்தனை விதமான ஆழங்களில் இருக்கின்றன ? எல்லாவற்றிலும் குட்டையான கடல் சராசரி 5000 அடி ஆழமுள்ள ஆர்டிக்கடல். ஆனால் அதிலும் 17,880 அடி ஆழத்தில் உள்ள ஒரு பெரும் மலைத் தொடர் கடல் அரங்குகளைப் பிரித்துக் கொண்டிருக்கிறது. ஆர்டிக்கடலுக்கு அடுத்ததாக உள்ளது, சராசரி 13,000 அடி ஆழமுள்ள இந்துமாக் கடல்! அதில் உச்ச ஆழப்பள்ளம், 25,344 அடி ஆழத்தில் இருக்கும் ஜாவாக் குழி [Java Trench]! அடுத்தது சராசரி 14,000 அடி ஆழமுள்ள அட்லாண்டிக் கடல். அதில் உள்ள போர்டோ ரிக்கோ குழி 28,374 அடி ஆழமானது. எல்லாவற்றிலும் அகண்டதும், ஆழமானதாகவும் இருப்பது பசிபிக் மாக்கடல்! அதன் சராசரி ஆழம் 14,000 அடியே ஆனாலும், உச்ச ஆழம்: 36,198 அடி! அதாவது பசிபிக் மாக்கடலின் உச்ச ஆழம்: 7 மைல். இமயத்தின் உச்ச சிகரமான எவரெஸ்டை உச்சியை விட ஒருமைல் அதிக ஆழத்தில் பசிபிக் மாக்கடல் உள்ளது!



அட்லாண்டிக் கடற்தளத்தில் S-வளைவுபோல் சுற்றிய மைய அட்லாண்டிக் கடற்தட்டுப் பீடம் [Mid-Atlantic Ridge] ஐஸ்லாத்தின் தென்திசையில் ஆரம்பித்து 40,000 மைல் தூரம் மலைப் பாம்புபோல் நீண்டுள்ளது! மைய அட்லாண்டிக் பீடம் கடற்தட்டுப் பிறழ்ச்சியால் எரிமலைகள் ஏற்பட்டுப் பெருத்துக் கொண்டே போகும் நீண்ட மலைத்தொடர்! அவற்றைப் போல் பசிபிக் மாக்கடலும் ஆயிரக் கணக்கான அடிகள் உயர்ந்த கடற் குன்றுகள் [Seamounts] உள்ளன. ‘கையட்ஸ் ‘ [Guyots] எனப்படும் ஆழ்கடல் மலைகள் [Submarine Mountains] வேறு வடிவம் கொண்டவை. அவற்றின் தலை மட்டமாக வெட்டப் பட்டிருக்கும். ஒரு காலத்தில் கடல் மட்டம் தணிந்து அவற்றின் தலை வெளியே நீட்டப்பட்டு, கடல் அலைகள் சீவி விட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.


(தொடரும்)

தகவல்:

1. The Continental Mosaic -Reader ‘s Digest Atlas of the World [1987]

2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

3. Earth ‘s Restless Crust -ABC ‘s of Nature, Reader ‘s Digest [1984]

4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader ‘s Digest Publication [1972]

5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]

9. Everyday Geography By: Kevin McKinney (1993)

10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

11 Our Changing Earth By: Tusco Wilson Ph.D. Frontiers of Science, National Geographic Society [1982]

12 This Changing Earth By: Samuel Matthews, National Geographic Society [Jan 1973]

13 Our Restless Planet Earth Rick Gore By: National Geographic Society [Aug 1985]

14 Fossils, Annals of Life Written in Rocks By: David Jeffery, National Geographic Society [Aug 1985]

15 The Earth ‘s Fractured Surface By: National Geographic Society [1995]

16 Physical Earth By: National Geographic Society [1998]

17 The Shaping of a Continent, North America ‘s Active West [1995]

18 National Geographic Picture Atlas of our World [1990]

19 Differences Between Continental & Oceanic Islands [www.abdn.ac.uk/zoohons/lecture1]

20 The Evolution of the Sumatran Earthquake Fault System, Indonesia, Andy McCarthy. Ph.D. [July 9, 2002]

21 Isotopic Dating of Sumatran Fault System By: Imtihanah & MPhil

22 The Sumatran Fault System By Professor Kerry Sieh & Danny Natawidjaja [Nov 1999]

23 Kumari Kandam & Lemuria [http://en.wikipedia.org/wiki/Lemuria_(continent)

24 Kumari Kandam By: Chitta Ranjan Myilvaganan, Sydney, Australia. [Jan 30, 2005]

25 Reader ‘s Digest Publication: The Living Earth Book of Deserts By: Susan Arritt [1993]

26 Physical Earth, By: National Geographic Society, Millennium in Maps [1998]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (February 23, 2005)]

2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ?


(கட்டுரை – 7)

(ஜூன் மாதம் 8, 2011)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.

தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

மின்சாரத்துக்கு எரிசக்தி இல்லாதது போல் விலை மிக்க எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is so costly as No Energy)

இந்திய அணுசக்திப் பிதா டாக்டர் ஹோமி பாபா.

அணுமின் எரிசக்தி போல் விலை மிகுந்த வேறோர் எரிசக்தி எதுவும் இல்லை. (No Energy is as costly as Nuclear Energy)

கட்டுரை ஆசிரியர்

“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் புகுஷிமாவில் ஆய்வு செய்ய ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”

நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)

நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக் கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.

அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்ற வையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

கடற்கரையில் நிறுவியுள்ள கூடங்குள அணு உலைகளில் புகுஷிமா விபத்துக்கள் போல் நேருமா ?

ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் வெப்பத் தணிப்பு நீரனுப்ப முடியாது மேற்தளங்கள் வெடிப்பதைத் தொலைக் காட்சியில் நேராகக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்களுக்குத் தமிழகத்தின் தென்கோடிக் கரையில் கட்டப் பட்டு இயங்கப் போகும் கூடங்குள ரஷ்ய அணு உலைகளின் அபாயப் பாதுகாப்பு பற்றிப் பல ஐயப்பாடுகள் எழுந்துள்ளன.  இந்திய அணுமின் நிலையங்களைக் கட்டி வரும் நிறுவகத் தலைமையகம் (Nuclear Power Corporation India Ltd – NPCIL) புகுஷிமாவில் சுனாமிப் பேரலைகள் விளைவித்த அணு உலைப் பேராபத்துகள் போல் கூடங்குளத்தில் நேரா என்று அழுத்தமாய் உறுதி அளித்துள்ளது.  இரு நாட்டு அணுமின் நிலையத் தளங்கள் வெகு தூரத்தில் அமைக்கப் பட்டிருந்தாலும் கடற்கரையைச் சுனாமி தாக்கக் கூடிய அபாயத் தளங்களாக அவை இரண்டும் கருதப் படுகின்றன.  அத்தகைய கோரப் பேரலை விபத்துகள் கூடங்குள அணு உலைகளில் நேருமா என்று தனியாகக் கேரளா பொறியியல் குழுவினர் (Kerala State Centre of The Institution of Engineers India) பங்கெடுத்த கருத்தரங்கு மார்ச் 30, 2011 தேதி திருவனந்தபுரத்தில் நிகழ்ந்தது.  அந்த கருத்தரங்கின் முக்கிய முடிவுகளைத் தான் இக்கட்டுரை விளக்கிக் கூறுகிறது.

2001 ஆம் ஆண்டில் அடித்தளம் கட்டக் குழி தோண்டி ஆரம்பமான கூடங்குள அணுமின் நிலையம் பல காரணங்களால் பத்தாண்டுகள் வரை நீடித்து இன்னும் ஓரிரு மாதத்தில் (ஆகஸ்டு 2011) இயங்கத் தயாராகி வருகிறது.  முதன்முதல் இரண்டு பெரிய அன்னிய 1000 மெகா வாட் நிலையம் கட்டப் படுவதால் ஈராண்டுகள் தாமதம் ஆகி விட்டது ! அணுமின் உலை இயக்க ஏற்பாடுகள் அனைத்தும் சோதிப்பாகி ‘அணுசக்தி நெறிப்பாடு ஆணைய கத்துக்கு (Atomic Energy Regulatory Board – AERB) விளைவுகள் சமர்ப்பணம் ஆகியுள்ளன.  அது பச்சைக் கொடி காட்டியதும் கூடங்குளம் முதல் யூனிட் இயங்கத் துவங்கும்.  இரண்டாவது யூனிட் 2012 மே மாதத்தில் இயங்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  சென்னை மாநிலத்துக்கு 2011 இறுதிக்குள் 1000 மெகா வாட் மின்சாரமும், 2012 இறுதிக்குள் அடுத்து 1000 மெகா வாட் மின்சாரமும் (மொத்தம் 2000 மெகா வாட்) பேரளவில் பரிமாறப்படும் என்று அறியப் படுகிறது.

கூடங்குளத்தில் முதன்முறை இயங்கப் போகும் ரஷ்ய இரட்டை VVER அணுமின் நிலையம் 1986 இல் நேர்ந்த செர்நோபில் விபத்துக்குப் பிறகு ‘மூன்றாம் பிறப்பு முறைப்பாட்டில்’ (Third Generation Design) செம்மைப் படுத்தப் பட்ட முற்போக்கு அணுமின் உலைகள் என்று IAEA அறிவிக்கிறது.  2004 இல் அடித்த இந்து மாக்கடல் சுனாமிப் பேரலை விளைவை ஆய்ந்து அணுமின் உலைச் சாதனங்களும், கட்டடமும் கடல் வெள்ளம் மூழ்க்கி விடாதபடி கடல் மட்டத்துக்கு மேல் 25 அடி உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

1.  அணு உலை எரிக்கோல் உருக்கைத் தாங்கும் கும்பா

அபாய வெப்பத் தணிப்பு நீரின்றிக் கூடங்குளம் அணு உலை எரிக்கோல்கள் உருகிப் போனால் அந்த கனல் உலோகத் திரவத்தை ஏந்தி உருக்கை ஏற்றுக் கொள்ள குவளைச் சாதனம் (Core Melt Catcher) ஒன்று அணு உலைக்கு அடியில் அமைக்கப் பட்டுள்ளது.  வெப்பத் தணிப்பு நீரின்றி எரிக்கோல்களின் உருக்குத் திரவம் உண்டாவது ரஷ்யன் VVER அணு உலைகளில் எதிர்பார்க்க முடியாத ஓர் அபூர்வ நிகழ்ச்சியாகும்.

ஹைடிரஜன் வாயு பேரளவில் சேமிப்பாகி வெடிப்பைத் தூண்டாதிருக்க கூடங்குள அணுமின் நிலையத்தில் அது ஆக்சிஜனோடு தீவிரமாய்க் கலந்து வெடிக்காது ஹைடிரஜன் இணைப்பிகள் (Hydrogen Recombiners) என்னும் சிறப்புக் சிமிழ்கள் அமைக்கப் பட்டுள்ளன.  அதில் ஹைடிரஜன் மெதுவாய் ஆக்ஸிஜனுடன் சேர்ந்து நீராகும்படி செய்யப் படுகிறது.  இந்தச் சிறப்புச் சாதனங்கள் அணு உலையில் ஹைடிரஜன் வாயு தீவிர வெடிப்பளவாய்ச் (< 4%) சேராதபடித் தடுக்கின்றன.  நிலநடுக்கம், சுனாமிப் பேரலை அடிப்புகள் சாதனங்களைப் பாதிக்காதபடி கூடங்குளம் ரஷ்ய அணுமின் உலைகள் டிசைனில் மேம்பாடு செய்யப் பட்டுக் கட்டப் பட்டுள்ளன.

2.  கூடங்குள அணு உலை இயக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள்

கூடங்குள அணுமின் நிலையத் திட்டத்தின் பாதுகாப்பு நெறிப்பாடுகள் (Safety Aspects of Kudungulam Power Project) என்னும் தலைப்பில் அணுமின் நிலைய டைரக்டர் காசிநாத் பாலாஜி தலைமையில் ஒரு தனிக் கருத்தரங்கு நடந்தது.  அந்தக் கருத்தரங்கில் நிலநடுக்கத்தைத் தாங்கிக் கொள்ளும் அணுமின் உலை அரண், கட்டடங்கள், துணைச் சாதனங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆட்சி அறை, டர்பைன் ஜனனி, அவற்றின் துணை ஏற்பாடுகள் ஆகியவற்றின் டிசைன் திட்ட அமைப்பாடுகள் அறிவிக்கப் பட்டன.

கூடங்குள அணுமின் நிலைய தளம் ‘குன்றிய அபாய எதிர்பார்ப்பு அரங்கம் : 2 இல் (Zone : 2 – Low Damage Risk Area) இருந்தாலும் கட்டடங்களும் சாதனங்களும் 25 அடி (7.5 மீடர்) உயரச் சுனாமிப் பேரலைத் தாக்குதலும் பாதிக்காதபடி பாதுகாக்கப் படும்.  2004 ஆண்டு தாக்கிய இந்து மாக்கடல் சுனாமி அலை அடிப்புக்கு ஏற்ப சாதனங்கள், கட்டடங்கள் செம்மைப்பாடு செய்யப் பட்டன.

செர்நோபில் விபத்துக்குப் பிறகு ஆழ்ந்து மீளாய்வு செய்யப்பட்டுக் கூடங்குள அணுமின் நிலையம் ரஷ்ய பொறியியல் விஞ்ஞான நிபுணரால் செம்மைப் படுத்தப்பட்டு மேன்மை செய்யப் பட்டது என்று IAEA அறிவிக்கிறது.  அணு உலை நிறுத்தமாகி, அபாய வெப்பத் தணிப்பு வேளை களில் நீரின்றிப் போனால் மாபெரும் 12 நீர் அழுத்தக் கலனிலிருந்து (Huge Water Accumulators) நியூட்ரான் விழுங்கி போரான் (Neutron Absorber Boron) கலந்த நீர் செலுத்தப் பட்டு எப்போதும் எரிக்கோல்களை நிரப்பிச் சூழ்ந்திருக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அத்துடன் வெப்ப வேறுபாட்டாலும், ஈர்ப்பு விசையாலும் மேலும் கீழும் சுற்றும் நீரோட்டம்  (Natural Circulation By Heat & Gravity) நிகழும்படி நீராவி மாற்றிகள் அணு உலைக்கு மேல் மட்டத்தில் இணைக்கப் பட்டுள்ளன.

ஒவ்வோர் அணுமின் உலைக்கும் அபாயத் தேவைக்கு மின்சாரம் அனுப்ப தனிப்பட்ட நான்கு மின்சார டீசல் எஞ்சின் ஜனனிகள் தானாக இயங்கத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கின்றன.  நான்கில் ஒரு டீசல் மின்சார இணைப்பே அபாயத் தணிப்பு நீரனுப்பப் போதுமானது.  டீசல் ஜனனிகள் கடல் மட்டத்திலிருது 30 அடி (9 மீடர்) உயரத்தில் அமைக்கப் பட்டுள்ளன.  டீசல் ஜனனிகள் ஓட்டும் நீரனுப்புப் பம்புகளும் பாதுகாப்பான இடத்தில் நிறுவப் பட்டுள்ளன. ஏதோ ஒரு காரணத்தால் டீசல் எஞ்சின் இயங்க முடியாது போனால், ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems) உடனே இயங்க ஆரம்பிக்கும்.  அவற்றில் முதலில் இயங்கும் 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை அணு உலைக்குள் விரைவாகச் செலுத்தும்.

இரட்டை ஓய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் (Two Passive Heat Removal Systems)

1. 12 நீரழுத்த கலன்கள் போரான் நீரை விரைவில் அணு உலைக்குள் செலுத்துவது.

2. ஈர்ப்பு விசையால் அணு உலை எரிக்கோள்களுக்குத் தானாய் இயங்கும் வெப்பத் தணிப்புச் சுற்று நீரோட்டம் நிகழ்த்துவது.

அணுமின் நிலையம் இயங்குவதற்கு முன்பு இறுதிச் சோதனையாக அபாயப் பாதுகாப்பு பயிற்சிகள் (Emergency Safety Drills) கூடங்குள நகராண்மை மக்களுக்குக் காவல்துறை உதவியோடு நடத்தப்படும்.

விஞ்ஞானி மிசியா காக்கு புகுஷிமா அணு உலை விபத்து பற்றிப் பேசுகிறார்.

2011 ஜூன் 17 இல் விஞ்ஞானி மிசியோ காக்கு (Michio Kaku) புகுஷிமா அணு உலை விபத்தைப் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  பல வாரங்கள் இரும்புத் திரையிட்டு ஜப்பான் டெப்கோ (Tepco) நிறுவகம் இப்போது முன்வந்து சில உண்மைகளை வெளியிட்டுள்ளது என்று கூறுகிறார்.

1.  அமெரிக்க விஞ்ஞானிகள் ஐயுற்றபடி மூன்று அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் அபாய வெப்பத் தணிப்பு நீரின்றி ஏறக்குறைய முற்றிலும் உருகிப் போயிருக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.  இது நேரடியாக அறியப் படாத செய்தி.  உலக விஞ்ஞானிகள் தமது கணினி மாடல் படைப்பில் உருவாக்கி ஜப்பான் அரசாங்கம் இதுவரை அறிவித்த கதிரியக்க விளைவுகளை விடக் கோரமானது என்று முடிவு செய்கிறார்.

2.  மூன்று அணு உலைகளின் எரிக்கோல்கள் முற்றிலும் உருகிப்போயின என்றால் ஏன் மூன்று ‘சைனா பேரழிவு விபத்துகள்’ (China Syndrome*) நேரவில்லை என்ற வினா எழுகிறது !  காரணம் :  நீண்ட நாட்கள் கடல் நீரால் மூன்று அணு உலைகளும் வெப்பத் தணிவு செய்யப் பட்டன.  அதனால் உருகிய யுரேனியும் எஃகு அரணில் துளையிட வில்லை.  ஆயினும் அணுமின் உலை இயக்க மேலதிகாரிகள் வெப்பத் தணிப்புக்குக் கடல் நீர் அனுப்புவதை முற்றிலும் ஆதரிக்க வில்லை.  அப்படிச் செய்வதால் கடல் நீர்த் துருவேற்றும் மிகையாகி அணு உலைச் சாதனங்கள் அனைத்தும் இறுதிச் சமாதி நிலை அடையும்.  மேல்நிலை அதிகாரிகள் அணு உலைக்குள் கடல் நீர் அனுப்புதலைத் தடுத்தும் கீழ்நிலை இயக்குநர் ஆணைக்குக் கீழ்ப்படியாது அதைத் தொடர்ந்து நிறைவேற்றினர்.  மேலதிகாரிகள் ஆணையை மீறிய அவர் யாவரும் மெய்யான தீரர் என்று இப்போது பாராட்டப் படுகிறார்.

3.  வெளியேறிய கதிரியக்கக் கழிவுகளின் மதிப்பளவு 700 டிரில்லியன் பெக்குவரல் என்பதை டெப்கோ நிர்வாகிகள் வற்புறுத்தலுக்குப் பிறகு ஒப்புக் கொண்டனர்.  அந்த அளவு செர்நோபில் விபத்தில் வெளியேறிய அளவில் 20% பங்கு மதிப்பாகும் என்று அறியப் படுகிறது.

4.  பொதுநபர் வெளியேற்றப் பட்ட பகுதியில் தீவிர கதிர்வீச்சுள்ள நான்கு தளங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.  ஒரு மாவட்டத்தில் பள்ளித் தளங்களில் கதிரியக்கம் பரவியதால்  8000 பள்ளி மாணவர் பள்ளிக்கூடத்துக்குப் போகையில் கதிர்மானிகள் அணிவிக்கப் பட்டார்.  அதனால் சிறுவரின் பெற்றோர்கள் அரசாங்கத்தின் மீதும், டெப்கோ மீதும் சீறினார்.

5.  புகிஷிமாவின் நான்கு அணுமின் நிலையச் சிதைவுகளைச் சீராக்கிச் செம்மைப் படுத்த 10 ஆண்டுகள் ஆகலாம் என்று டோஷீபா நிறுவகம் (Toshiba Corporation) மதிப்பீடு செய்தது.  ஹிட்டாச்சி நிறுவகம் (Hitachi Corporation) 30 ஆண்டுகள் ஆகலாம் என்று மதிப்பீடு செய்தது.
திரீமைல் தீவு அணு உலைச் சிதைப்பைச் சீர்படுத்த 14 ஆண்டுகள் எடுத்தன.  25 ஆண்டுகள் கடந்தும் செர்நோபில் கதிரியக்கத் தீங்குகள் இன்னும் தொல்லைகள் தருகின்றன.

6.  புகிஷிமா அணு உலைகளில் 2011 இறுதிக்குள் ‘பூரணத் தணிப்புலை நிறுத்தம்’ (Cold Shutdown State) செய்ய முடியும் என்று நிலைய அதிகாரிகள் கருதுகிறார்.  அதைச் செய்வது கடினம் என்றும் அடுத்த ஆண்டுவரை நீடிக்கலாம் என்று டெப்கோ நிறுவகம் அறிவித்துள்ளது.

(தொடரும்)

**************
China Syndrome* – The China Syndrome is a 1979 American thriller film that tells the story of a reporter and cameraman who discover safety coverups at a nuclear power plant.
The title is a fanciful term – not intended to be taken literally – that describes one possible worst-case result of a nuclear meltdown, where reactor components melt through their containment structures and into the underlying earth, “all the way to China” (</wiki/China_Syndrome>).

***************

தகவல்:

1. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

2 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

3. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

4. Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

5.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

6. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

7. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

8. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

9. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

10. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

11 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

12. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

13. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

14 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

15. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

16. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

17  2011 Fukushima’s Nuclear Accident is not Chernobyl (March 18, 2011)

18 Kudankulam Nuclear Plant Equipped to deal with Tsunami Threats By : Vinson Kurian (April 3, 2011) Kerala State Centre of The Institution of Engieers (India) – IEI

19. Three-Month Update of Fukushima Tragic Accident & Flood of Information Coming Out (June 16, 2011)

************************
S. Jayabarathan  (jayabarat@tnt21.com) July 2, 2011
http:jayabarathan.wordpress.com/

அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !

(கட்டுரை -6)

(ஜூன் மாதம் 8, 2011)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

BBC News (June 23, 2011)

ஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங்களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%).  அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு.  பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்திலும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும்.  ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.

BBC News (May 30, 2011)

 

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)     


“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

 

ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.

கட்டுரை ஆசிரியர்

முன்னுரை:  2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

புகுஷிமா அணுமின் உலைகளின் தற்போதைய நிலை (ஜூன் 20, 2011)

புகுஷிமா : 1  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.

புகுஷிமா : 2  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.  அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கம் பரவி விட்டதாக ஐயப்பாடு.

புகுஷிமா : 3  அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின.  அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது.  அரணில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக ஐயப்பாடு.  கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், இணைக்கப் பட்ட குகையிலும் காணப் பட்டது.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் குறைந்து பிறகு நீர் நிரப்பப் பட்டது.

புகுஷிமா : 4  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்ததால்,
தீயும் வெடிப்பும் நேர்ந்தன.

புகுஷிமா : 5 & 6  அணு உலைகள் சுயமாய் நிறுத்தமாகின.  தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்து எரிக்கோல்களின் உஷ்ணம் ஏறியது.

மொத்தக் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு 110,000 டன் என்று கணிக்கப் படுகிறது.  அது மீள் சுற்றியக்க வடிகட்டு முறையில் நீண்ட காலம் சுத்திகரிக்கப் பட வேண்டும்.

அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு.  அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

அணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்

21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப்படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :

புகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.  இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது.  அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது.  ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.

சென்ற வாரத்தில் எதிர்கல அணுமின் சக்தி உற்பத்தி பற்றிய 10 உலக நாடுகளின் முடிவுகள் :   (1. அர்ஜென்டைனா, 2. பிரேசில், 3. ஆர்மீனியா 4. கனடா, 5. சைனா, 6 பின்லாந்து, 7. பிரான்ஸ், 8. ஜெர்மனி, 9. இந்தியா, 10 ஜப்பான்) தெரிவிக்கப்பட்டன.  இக்கட்டுரையில் மற்ற 11 உலக நாடுகளின் முடிவுகள் கூறப்படுகின்றன.

(முன் வாரத் தொடர்ச்சி)

11. மெக்ஸிகோ :  துணை எரிசக்தி அமைச்சர் கார்லோஸ் பீடர்சன் புகுஷிமா அணு உலை விபத்துகள் மெக்ஸிகோ திட்டமிட்டிருக்கும் அணுமின் நிலைய நிறுவ ஆலோசனைகளை நிறுத்த வில்லை என்று அறிவித்துள்ளார்.

12. நெதர்லாந்து :  டச் அரசாங்கம் திட்டமிட்டுள்ள புதிய அணுமின் நிலைய ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போகிறது.

13. ருமேனியா :  அணுமின் உலைகள் ஆதரவு பற்றி அரசாங்கக் கொள்கையில் மாறுதல் எதுவும் இல்லை.

14.  ரஷ்யா :  ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடிவ் அகில நாடுகளில் சுனாமிப் பேரலைத் தாக்க எதிர்பார்ப்பு உள்ள அணுமின் நிலையங்களின் நீண்ட காலப் பாதுகாப்பு நிலை விதிகளின் தேவையை வற்புறுத்தினார்.  நிலநடுக்கப் பழுதுக் கோடுகளுக்கு (Seismic Fault Line) அப்பால் அமைக்கப் பட்டுள்ள ரஷ்ய அணுமின் நிலையங்களில் உடனடிக் கவனம் செலுத்தும்
அவசியம் இல்லை என்றும் வலியுறுத்தினார்.

15. தென் ஆப்ரிக்கா :  தென் ஆப்ரிக்காவின் அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் கடற்கரையில் அமைந்துள்ள கோபெர்க் அணுமின் நிலையம் நீண்ட கால அபாய வெப்பத் தணிப்பு நீர் வசதி ஏற்பாடுகளை உடையது என்று அறிவித்தது.  ஒன்றே ஒன்றான இந்த இரட்டை அணுமின் நிலையம் 1800 MWe மின்சார உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது.  2011 மார்ச் 16 ஆம் தேதி தென் ஆப்ரிக்க அரசு 2030 ஆண்டுக்குள் 13% தகுதி மின்சாரப் பங்கு ஏற்றுக் கொள்ள 9600 MWe ஆற்றல் உள்ள அணுமின் நிலைய திட்டங்களைக் கட்ட அனுமதி அளித்திருக்கிறது.

16 தென் கொரியா :  2011 மார்ச் 21 ஆம் தேதி தென் கொரியா கல்வி அமைச்சகம் தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையப் பாதுகாப்பு இயக்கங்களை மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  இப்போது 21 அணுமின் நிலையங்கள் 40% பங்கு மின்சாரம் அனுப்பி வருகின்றன. 2020 ஆண்டுக்குள் இன்னும் 35 புதிய அணுமின் நிலையங்களைத் தென் கொரியா நிறுவத் திட்ட மிட்டுள்ளது.

17 சுவீடன் :  2009 ஆம் ஆண்டு செய்த முடிவின்படி தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஆயுட் கால இறுதியில் முற்றிலும் புதுப்பிக்கப் பட்டு மாற்றப் படும்.  2011 ஆண்டு இறுதிக்குள் ஈரோப்பியன் அணுசக்திப் பேரவைக்கு உலோக அழுத்தச் சோதனை விளைவுகளை (Stress Tests) அனுப்ப வேண்டும்.

18. சுவிட்ஜர்லாந்து :  2011 மே மாத இறுதியில் சுவிஸ் அரசாங்கம் ஆயுள் முடியும் அணுமின் நிலையங்கள் மூடப்படும் என்று முடிவு செய்தது.  அதாவது 2034 ஆண்டுக்குள் அனைத்து அணுமின் நிலையங்களும் நிறுத்தம் அடையும் என்றும் அறிவித்தது.

19. டெய்வான் :  டெய்வான் ஜனாதிபதி தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்படும் என்று அறிவித்தார்.  அத்துடன் புதிதாய்க் கட்டத் திட்டமிட்ட அணுமின் நிலையங்கள் தாமதப் படாமல் அமைக்கப் படும் என்றும் கூறினார்.

20. பிரிட்டன் :  பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது.  அவை தேர்ந்தெடுக்கப் படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும்.  அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி.  எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.

21 அமெரிக்கா :  2011 மே மாதம் 17 ம் தேதி அமெரிக்க அணுசக்தி நெறிப்பாடு ஆணையகம் (US Nuclear Regulatory Commission – NRC) இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமெரிக்க அணுமின் உலைகளின் அபாயப் பாதுகாப்பு இயக்க முறைகளை மீளாய்வு செய்து தமக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நியமிக்கப் பட்ட ஆய்வு வினைக் குழுவுக்கு (A Task Force) அறிவித்தது.  ஜப்பான் அணு உலை வெடிப்புகள், அவற்றின் நேரடித் தொலைக்காட்சித் தரிசனம், ஜப்பானி யரின் நீண்ட காலத் தவிப்பு, அணு உலை இயக்க நிபுணரின் கட்டுப்படுத்த முடியாத தடுமாற்றம் அமெரிக்கர் உட்பட உலக மக்களின் வயிற்றைப் பெரிதாகக் கலக்கி இருக்கிறது.  1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் நிறுத்தமான புதிய அணுமின் நிலையத் திட்டங்கள் எல்லாம் மீண்டும் உயிர்தெழும் என்ற நம்பிக்கை மிகவும் தளர்ந்து போயுள்ளது.  அத்தகைய வெறுப்பும், அவநம்பிக்கையும் இருந்தாலும் அமெரிக்கா வில் (2011) தற்போது அணுமின் உலைகள் அவசியத் தேவை என்பதற்கு 43% மக்கள் ஆதரவு அளிக்கிறார்.  இப்போது அமெரிக்காவில் 104 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன.  1977 இல் அணுமின் உலை ஆதரவாளர் 77%.  திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துக்களுக்குப் பிறகு ஆதரவு 59% ஆகக் குறைந்தது.  ஜப்பான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் 2011 இல் அணுமின் நிலைய ஆதரவு 43% ஆகக் குன்றி விட்டது !

முடிவுரை:   பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

(தொடரும்)

***************

தகவல்:

1.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

2. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

3. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

4.  Nuclear {Power in Japan (March 30, 2011)

5. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

6 Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

7. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

8.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

9.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

10. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

11. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

12. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

13. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

14. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

15 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

16. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

17. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

18. BBC News : Europe, French Nuclear Policy  (May 31, 2011)

19 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

20. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

21. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

22 Wikipedea http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors (List of World Nuclear Reactors) (June 8, 2011)

23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

24. Nuclear Watchdog wants new safety checks after Fukushima (June 20, 2011)

25. BBC News : New UK Nuclear Plant Sites Named  (June 23, 2001)

************************
S. Jayabarathan  (jayabarat@tnt21.com) June 26, 2011
http:jayabarathan.wordpress.com/

21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5


(ஜூன் மாதம் 8, 2011)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப் பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை

கட்டுரை ஆசிரியர்

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]



ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் ஆலோசனைகளை வரவேற்க ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”

நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)     

நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

 

முன்னுரை:   2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின.  சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை.  சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத் தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

உலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம்.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை.  ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.


தற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

அணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்

புகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன பொது மக்களின் வெறுப்பும், தீர்ப்பும் வேறு.  அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு !  பொது மக்கள் ஒருமனதாய் எதிர்த்தாலும் உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை.  இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60.  அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155.  எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338.  புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய்.  முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.

இயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும்  இரட்டை அல்லது மூவகை அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும்.  அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும்.  சேமிப்பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும்.  அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும்.  தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும்.  திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம்.  அல்லது புறக்கணிக்கப் படலாம்.

அணுமின் உலைகள் இயக்கம் பற்றி உலக நாடுகள் செய்துள்ள முடிவுகள்  (மே 31, 2011)    

21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.  அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளுவது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப் படும்.  புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணு மின்சக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்த முடிவுகளைக் கீழே காணலாம் :

1. அர்ஜென்டைனா :   தற்போது இயங்கி வரும் இரண்டு அணுமின் நிலையங்களின் ஆயுள் நீடிக்கப்படும்.  அட்டுச்சாவில் (Atucha) இரண்டாவது யூனிட் கட்டுமானம் நிற்காமல் பூர்த்தியாகும்.  அர்ஜென்டைனாவின் நிதி அமைச்சர் அமாடோ பொவ்டோவ் (Amado Boudov), “அர்ஜென்டைனா இதுவரைத் திட்டமிட்ட அணுமின் நிலையத் தீர்மானங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளும்,” என்று கூறினார்.

2. பிரேசில் :   புதிய அணுமின் நிலையங்கள் கட்டப் போவதை நிறுத்த வில்லை.  செனட்டர் ஜோஸ் ஸர்னி என்பவர் “அணு உலைப் பாதுகாப்பு விதிமுறைகளில் கடுமையான மீளாய்வு இருக்கும்” என்று தெரிவித்தார்.

3. ஆர்மீனியா :   நிலநடுக்க இன்னல்கள் நிரம்பிய ஆர்மீனியா 1988 ஆண்டிலேயே தனது ஒற்றை ‘மெட்ஸ்மார் அணுமின் நிலையத்தை’ (Metsmor) நிறுத்தி விட்டது.  ஆனால் அது 7 ஆண்டுகள் கழித்துத் தேவைப் பட்டதால் மீண்டும் இயங்க ஆரம்பித்தது.  மேலும் புதிய அணுமின் நிலையங்களைக் கட்டப் போவதாகத் திட்டங்கள் உள்ளன என்று ஓர் வதந்தியும் நிலவி வருகிறது.  ஆர்மினியாவின் பிரதம மந்திரியும் புதிய அணுமின் நிலையங்கள் கட்டு வதற்கு ஆதரவு அளிக்கிறார்.

4. கனடா :   கனேடியன் அணுவியல் பாதுகாப்பு ஆணையகம் (Canadian Nuclear Safety Authority – CNSC) கனடாவில் இயங்கும் அணுமின் நிலையங்கள், சாக் ரிவர் அணுவியல் ஆய்வு உலை (AECL Chalk River Research Reactor) ஆகியவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளை புகுஷிமா அணு உலை விபத்துகளை அடிப்படையாகக் கொண்டு மீளாய்வு செய்ய ஆணை இட்டது.  1970 ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்த இரண்டு பழைய அணுமின் நிலையங்கள் முன்பே நிரந்தர நிறுத்தம் ஆயின.  முன்பு நிறுத்தமான இரண்டு கனநீர் முற்போக்கு அணுமின் உலைகள் புதுப்பிக்கப் பட்டு விரைவில் மின்சாரம் மீண்டும் அனுப்பப் போகின்றன.  இயங்கும் 16 அணுமின் உலைகள் தொடர்ந்து மின்சாரம் அளித்து வருகின்றன.  எதிர்காலத் திட்டத்தில் புதிய அணுமின் நிலைய அமைப்புகளும் இடம் பெறும்.

5. சைனா :  அரசாங்கம் அணுமின் சக்தி ஆக்கத்தை வரவேற்கிறது.  சமீபத்தில் நேர்ந்த ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துகள் கட்டப் போகும் புதிய 7 அணுமின் நிலையங்களைத் தற்காலியமாக நிறுத்தி வைத்துள்ளது.  இப்போதைய இந்த முடிவு நீண்ட கால அணுமின்சக்தி உற்பத்தியை ஒருபோதும் பாதிக்காது.

6 பின்லாந்து :  பின்லாந்தின் நிதி அமைச்சகம் பின்லாந்து நாட்டில் உள்ள அணுமின் உலைகளில் அபாயப் பாதுகாப்புத் தயாரிப்பு முறைகள் மீளாய்வு செய்ய வேண்டு மென அணுவியல் கதிர்வீச்சுப் பாதுகாப்பு ஆணையகத்துக்கு உத்தரவு இட்டுள்ளது.

7. பிரான்ஸ் :   பிரென்ச் நாட்டின் 70% பங்கு மின்சக்தியைப் பரிமாறி வரும் 58 அணுமின் நிலையங்களின் இயக்கத்தில் எந்தத் தடையும் மாற்றமும் இல்லை.  பிரென்ச் தொழிற்துறை எரிசக்தி அமைச்சர் எரிக் பெஸ்ஸன் கூறியது : “எனக்குப் பாதுகாப்பான எதிர்கால அணுமின்சக்தி உற்பத்தியில் முழு நம்பிக்கை உள்ளது. அதாவது புகுஷிமா விபத்துகள் போல் நேர்ந்தாலும் இந்த நூற்றாண்டில் அந்த உறுதிப்பாடு எனக்கு எழுந்துள்ளது.  ஆயினும் அவற்றை மேலும் செம்மைப் படுத்த இன்னும் ஒரு வாய்ப்பு எமக்குக் கிடைத்துள்ளது.

8. ஜெர்மனி :   2011 மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி ஜெர்மன் அதிபர் ஆஞ்சலா மெர்கெல் பழைய டிசைன் மாடல் 1980 & அதற்கு முந்திய அணுமின் உலைகளை மூன்று மாத நிறுத்தம் செய்ய உத்தரவு இட்டார்.  1984 இல் இயங்க ஆரம்பித்த அடுத்தோர் அணுமின் நிலையமும் நிறுத்தமானது.  வேலும் சமீபத்தில் ஆயுள் நீடிப்புக்கு அனுமதி பெற்ற சில அணுமின் நிலையங்களின் ஆயுள் நீடிப்பு பாதுகாப்புச் சோதனைகளின் முடிவு தீர்ப்பாவது வரை நிறுத்தப் பட்டுள்ளது.  புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு 250,000 அணுசக்தி நிலைய எதிர்ப்பாளர் நாடு முழுவதும் திரண்டு இயங்கும் அணுமின் நிலையங்களை மூடும்படி ஆர்ப்பாட்டம் செய்தார்.  மார்ச்சு மாதம் 30 ஆம் தேதி அதிபர் ஆஞ்சலா மெர்கெல் 2022 ஆண்டுக்குள் இயங்கும் எல்லா அணுமின் நிலையங்களும் நிறுத்தப்பட்டு விடும் என்று அறிவித்தார்.


9. இந்தியா :   புகுஷிமா அணு உலை விபத்துக்கள் இயங்கும் அல்லது எதிர்கால இந்திய அணுமின் நிலையத் திட்டங்களைப் பாதிக்கவில்லை.  இந்திய அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் (Atomic Energy Regulatory Board – AERB) இயங்கும் அல்லது திட்டமிட்ட அணு உலைகளின் டிசைன் அடிப்படை விபத்துகளோ அல்லது அதற்கு அப்பாற் பட்ட இயற்கை தூண்டும் விபத்துகளோ நேர்ந்தால் விளையும் அபாயப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளாய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை நியமித்தது.

10 ஜப்பான் :   ஜப்பானின் அணுமின் & தொழிற்துறைப் பாதுகாப்பு ஆணையகம் (NISA) அணுமின் உலைகள் அனைத்தும் தற்போதுள்ள அபாய விபத்துக் கையாளும் முறைப்பாடுகளை மீளாய்வு செய்து அனுப்பும்படிக் கட்டளை இட்டுள்ளது.  மேலும் அந்த அணுமின் உலைகள் தற்போது அமைக்கப் பட்டிருப்பதைத் தவிர அடுத்தோர் அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடை நிலைநாட்ட வேண்டும் என்றும் ஆணையிட்டது.  2011 மே 6 ஆம் தேதி கடற் கரையில் அமைக்கப் பட்டுள்ள ஹமோகா (Hamaoaka) அணுமின் உலையில் அசுரச் சுனாமிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் புதிதாய் அமைப்பது வரை நிலையத்தைப் பிரதம மந்திரி நிறுத்தம் செய்தார்.  மே 10 ஆம் தேதி பிரதம மந்திரி ஜப்பான் எதிர்கால எரிசக்தி ‘அரசியல் நியதி’ (Govt Policy) திசைமாறப் போவதாகக் கூறினார்.  2030 ஆண்டுக்குள் ஜப்பானின் 50% பங்கு மின்சாரத் தேவையை புதிய அணுமின் நிலையங்கள் பூர்த்தி செய்யும் என்னும் அரசியல் நியதி நீக்கப்படுவது பற்றிப் பேசினார்.  அவற்றுக்குப் பதிலாக ‘புதுப்பித்து மீளும் எரிசக்தி, சிக்கனச் சேமிப்பு எரிசக்தி (Renewable Energy & Conservation) ஏற்பாடுகள் வரவேற்கப்படும் என்றும் கூறினார்.  புகுஷிமா அணு உலைகள் விபத்தாலும், நிறுத்தம் அடைந்த சில அணுமின் நிலைய முடக்கத்தாலும் ஜப்பான் 3473 MWe மின்சார உற்பத்தியை இப்போது இழக்க நேரிடுகிறது.  அது உடனே நிரப்பப்பட வில்லையாயின் பல தொழிற்சாலைகள் மூடப்படும்,  மேலும் பல்லாயிரம் ஊழியர் தமது வேலை இழப்பார்.

முடிவுரை:   உலக நாடுகள் பல 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன.  ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரியவில்லை.  மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன.  அதுபோல் ஓர் அணுமின் நிலை யத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப் பட வேண்டும்.  மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.

(தொடரும்)

***************

தகவல்:

1. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

2. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

3.  IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant   (August 17, 2007)

4.  Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant  (Jan 29, 2009)

5.  Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station  (Nov 14, 2009)

6.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

7. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

8. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

9.  Nuclear {Power in Japan (March 30, 2011)

10. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

10 (a)  Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

11. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

12.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

13.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

14. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

15. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

16. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

17. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

18. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

19 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

20. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

21. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

22 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

21. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

22. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

23 http://www.world-nuclear.org/info/reactors.html (World Nuclear Opeations) (June 14, 2011)

************************
S. Jayabarathan  (jayabarat@tnt21.com) June 16, 2011
http:jayabarathan.wordpress.com/

2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4


(ஜூன் மாதம் 8, 2011)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“புகுஷிமா அணு உலை விபத்துக்களின் தீவிரப் பாதிப்புக்களை யாரும் இன்னும் தெளிவாக ஆழ்ந்து அறியும் நிலைக்கு நெருங்க வில்லை !  வெப்பக் கட்டுப்பாடு இன்னும் அணுமின் உலைகளில் நடந்து கொண்டிருப்பதால், கதிரியக்க வெளியேற்றத்தின் அளவு ஏறத்தான் போகிறது.  அகில நாட்டு அணுவியல் நிபுணர் ஆலோசனைகளை வரவேற்க ஜப்பானியர் அனுமதி அளிக்க வேண்டும்.”

நில்ஸ் போமர், ஆஸ்லோ பெல்லோனா அணுவியல் பௌதிக நிபுணர் (ஜூன் 6, 2011)

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)    


நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல்களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப்பட்டு உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் வாயு மீள் இணைப்பிகள்  போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry)


ரஷ்யாவின் ரோஸாட்டம் குழு (Rosatom Group) ஜப்பான் நாடு அழைத்தால் முடங்கிப் போன அணு உலைகளுக்கு உதவி செய்யத் தயாராய் இருந்தது.  எந்த எந்தத் துறைகளில் உதவி தேவை என்று ஜப்பான் கேட்டால் அந்த அந்தத் துறைகளில் உடனே உதவிட நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.  (ஆனால் மெய்யாக அழைப்பு வரவில்லை).

செர்கி நோவிகோவ் (Sergei Novikov, Head of Communication at Rosatom)

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.

விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author)

முன்னுரை:  2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்ததோடு, புகுஷிமா அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

தற்போது முப்பது உலக நாடுகளில் 430 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  அதாவது 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின் சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.


புகுஷிமா விபத்து அணுமின் உலைகளின் தற்போதைய நிலை

2011 மே 31 இல் அகில நாட்டு அணுவியல் பேரவை (IAEA) ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளின் அப்போதைய நிலையை வெளியிட்டது.  IAEA இன் மூன்று முக்கிய பாதுகாப்பு விதிகளை நிலைய இயக்குநர் பாதிக்கப் பட்ட நான்கு அணு உலைகளிலும் தொடர்ந்தனர்.

1.  உருகிய எரிக்கோல்களால் மீண்டும் பூரணத் தொடரியக்க விபத்து எழாமல் தடுப்பது. (Prevention of Criticality Chain Reaction).

2.  நிறுத்தமான அணு உலை எரிக்கோல்களின் தேய்வு வெப்பத் தணிப்பு ஏற்பாடு தொடர்ந்து இயங்கி வருவது (Removal of Decay Heat of Shutdown Fuel

3.  கதிரியக்க வெளியேற்றம் கவசத்தாலும், கட்டுப்பாடாலும் கூடியவரைக் குறைக்கப் படுவது (Mitigation of Radioactive Releases).

அத்துடன் சேமிப்புத் தடாகங்களில் தீய்ந்த எரிக்கோல்கள் நீரில் மூழ்கப்பட்டுத் தடையின்றித் தணிப்பு நீரோட்டச் சுற்று தொடர வேண்டும்.  டெப்கோ நான்கு யூனிட்டுகளின் சேமிப்பு எரிக்கோல்களுக்கு தடாகத்தில் போதிய நீரை தொடர்ந்து அனுப்பி வருகிறது.

அபாயத் தடுப்பு முறையில் கதிரியக்க வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு வெடித்த யூனிட் 1 அணு உலை மேற் கட்டடத்தைத் தற்காலியமாக மூட டெப்கோ நிறுவகம் முயன்று வந்தது.

கதிரியக்கம் கசியும் பிளவுகள் அடைக்கப் பட்டு கதிர்வீச்சுக் கவசங்கள் (Radiation Shieldings) அமைக்கப் பட்டன.

ஹைடிரஜன் வாயு தீப் பற்றுவதைத் தடுக்க நைட்ரஜன் வாயு யூனிட் 1 அணு உலைக்குள் செலுத்தப் பட்டது.

யூனிட் 1, 2 & 3 அணு உலைக்குள் நீரனுப்புப் பைப்புகள் மூலமும், தீயணைப்புப் பைப்புகள் வழியாகவும் தொடந்து புதிய நீர் அனுப்பப் படுகிறது.  இப்போது அணு உலை எரிக்கோல்களின் வெப்பமும், தணிப்பு நீர் அழுத்தமும் குறைக்கப் பட்டுக் கட்டுப்பாடு நிலை மேவி வருகிறது.

யூனிட் 1 & 3 டர்பைன் கட்டடத்தின் அடித்தள அறையில் சேமிப்பான உயர்நிலைக் கதிரியக்கம் உள்ள நீர் வெள்ளம் கதிரியக்கக் கழிவுச் சுத்தீகரிப்பு ஏற்பாட்டின் (Radioctive Waste Water Treament Facility) குளிர்க் கலன்களுக்கு (Condensers) அனுப்பப் பட்டது.


புகுஷிமா அணுமின் நிபுணர் கதிரியக்கக் கழிவு வெளியேற்ற அறிவிப்பு பாதியே !

2011 மார்ச் ஜப்பான் பேரலைச் சுனாமியில் விபத்துக்குள் சிக்கிய புகுஷிமா அணுமின் நிலையங்களின் உரிமையாளர் நிறுவகம் டெப்கோ (Tepco -Tokyo Electric Power Company) முதன்முதலாக ஜூன் 6 ஆம் தேதி யூனிட் 1, 2, 3 ஆகிய மூன்று அணு உலைகளின் எரிக்கோல்கள் பூராவும் உருகிப் போனதாக ஒப்புக் கொண்டது.  அது இதுவரை வெளியேறிய கதிரியக்க வெளிவீச்சுக் கசிவுகள் அளவை அறிவித்ததை விட இரண்டு மடங்கு என்றும் கூறியது !  அதாவது 1986 செர்நோபில் வெடி விபத்தில் சூழ்வெளியில் பரவிய கதிரியக்க அளவில் 40% புகுஷிமாவில் வெளியேறியதாக இப்போது அறியப் படுகிறது.  இதற்கு முன்பு ஜப்பானிய அரசாங்கம் அணு உலையில் எரிக்கோல்கள் உருகிப் போக வாய்ப்பில்லை என்று மாறாக அறிவித்து வந்தது !  ஜப்பான் தேச அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகமும், அணுசக்தித் தொழில் பாதுகாப்பு நிறுவகமும் (NISA) தமது மதிப்பீட்டின் படி விபத்து நேர்ந்த முதல் வாரத்தில் மட்டும் கதிரியக்க வெளியேற்றம் 770,000 டெரா பெக்குவரல் (tera-becquerels) அளவு இரண்டு மடங்குக்கும் மிகையென்று அறிவித்தது.  அதே சமயத்தில் அந்த ஆணையகம் முன்னால் குறைவாக வெளியிட்டது 370,000 டெரா பெக்குவரல் அளவு ! (one tera becquerel = one trillion becquerel).  மேலும் ஆணையகம் புகுஷிமா கதிரியக்கக் கசிவுகள் செர்நோபில் விபத்தில் நேர்ந்த வெளிவீச்சு போன்று 10% அளவென்று குறைத்து மதிப்பீடு செய்தது !  ஆனால் தற்போதைய மதிப்பீடு 770,000 டெரா பெகுவரல் செர்நோபில் வெளியேற்றத்தில் 40% வெளிவீச்சுக்குச் சமமாகும் !

பெரும்பான்மையான அணுவியல் நிபுணர் செர்நோபில் வெடி விபத்தில் வெளியேறிய கதிரியக்கக் கசிவுகள் சோவியத் ரஷ்யா அறிவித்ததற்கு மேல் ஒன்றரை முதல் இரண்டரை மடங்கு மிகையானவை என்று தற்போது மதிப்பீடு செய்கிறார்.  செர்நோபில் வெளிவீச்சு இரண்டு மடங்கென்று அனுமானித்தால், தற்போது புகுஷிமா கதிரியக்கக் கசிவுகளின் அளவு அறிவிப்பு செர்நோபில் வெளிப்பரவல் அளவுக்கு 20% என்று முடிவு செய்யலாம் !  தற்போதைய புதிய கதிரியக்க அறிவிப்பும் போகப் போக அளவில் அதிகமாகலாம்.  புகுஷிமா அணு உலைகளின் ஜப்பானிய அதிகாரிகள் கூறுவது:  யூனிட் 1 அணு உலையின் வெப்பத் தணிப்புக் கதிரியக்க நீர் 3000 டன் அடித்தள அறை ஒன்றில் சேமிப்பானது.  பெரும்பான்மையான கதிரியக்க வெளிக் கசிவுகள் கடலில் கலந்த நீரகத் திரவங்களே.  அவற்றில் உள்ள கதிரியக்கத் துகள்களின் அரை ஆயுள் சிறிதாக இருப்பதால் உயிரியல் பாதிப்புகள் குறைவே !  ஆயினும் 20 கி.மீ (12 மைல்) ஆர வட்டத்தில் வாழும் 80,000 பேர் புலம்பெயர நேரிட்டது !  அரசாங்கம் அணு உலைக் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு இழப்பீடு செய்ய 100 பில்லியன் டாலர் வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டது.

புகுஷிமா அணு உலைக் கடற்பகுதி வெள்ளத்தில் கதிரியக்கக் கழிவுகள்

2011 மார்ச்சு மாதக் கடைசி வாரத்தில் புகுஷிமா அணு உலைக் கடற்பகுதி வெள்ளத்தச் சோதித்தில் விட்டு விட்டுக் கதிர்வீச்சு எழுச்சிகள் ஏறியது அறியப் பட்டது.  அதற்குக் காரணம் அணு உலை வெப்பத்தைத் தணிக்கும் நீரோட்டம் பிளவு பட்ட அரணிலிருந்து கசிந்து வெளியானதே !  புகுஷிமா அணுமின் உலைகளின் உரிமை நிறுவகம் டெப்கோ (Tokyo Electric Power Company -TEPCO) விதிக்கப் பட்ட பாதுகாப்பு எல்லைக்கு மேல் 1200 மடங்கு ஏறிய உயர்நிலைக் கதிர்வீச்சு (High Level Radition) ஐயோடின், சீஸியம், பேரியம், டெக்னீசியம், லாந்தனம் கடல் வெள்ளத்தில் இருப்ப தாக அறிவித்தது.  ஐயோடின்-131 கதிரியக்க அளவு 29 பெக்குவரல், சீஸியம்-134 இன் அளவு 5 பெக்குவரல், சீஸியம்-137 இன் அளவு 5.1 பெக்குவரல்.  அத்தகையச் சிறிய கதிரியக்கக் கலப்புகள் கடல் பெரு வெள்ளத்தில் நீர்த்துப் போய் சிறுப்பதால் (Diluted Profusely) பொது மக்களுக்கு ஏதும் திடீர் தீங்குகள் விளையா.  ஐயோடின்-131 இன் அரை ஆயுள் 8 நாட்கள். சீஸியம்-134 இன் அரை ஆயுள் 2 ஆண்டுகள், சீஸியம்-137 இன் அரை ஆயுள் 30 ஆண்டுகள். கடல் வெள்ளத்தில் இவற்றின் கலப்பு அளவு மிகச் சிறியதால் திடீர் தீங்குகள் உடனே பொது மக்களைப் பாதிக்கா.  புகுஷிமா அணு உலைப் பகுதி மீன்வளம் ஒரு சில ஆண்டுகள் பாதிக்கப் படலாம்.

(தொடரும்)

***************

தகவல்:

1. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

2. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

3.  IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant   (August 17, 2007)

4.  Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant  (Jan 29, 2009)

5.  Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station  (Nov 14, 2009)

6.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

7. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

8. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

9.  Nuclear {Power in Japan (March 30, 2011)

10. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

10 (a)  Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

10 (b)  Radiation Spikes in Seawater Near Fukushima Reactor By : Jesse Emspak (March 30, 2011)

10 (c)  Fukushoma Radiation Comparison (March 30, 2011)

11. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

12.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

13.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

14. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

15. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

16. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

17. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

18. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

19 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

20. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

21. BBC News – Japan Nuclear Crisis : Fukushima Cold Shutdown for January 2012 (May 17, 2011)

22 BBC News – Fukushima Lessons may take 10 years to Learn By : Richard Black (June 8, 2011)

21. Environment News Service – Analysis: Japan Underestimated Fukushima Radiation Releases By Half – Author Charles Diggs (June 8, 2011)

22. IAEA Briefing on Fukushima Nuclear Accident (June 2, 2011)

************************
S. Jayabarathan  (jayabarat@tnt21.com) June 10, 2011
http:jayabarathan.wordpress.com/

2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3

(மே மாதம் 31, 2011)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவதில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன.  ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.”

நிக்கோலை லாவெராவ் (President, Russian Academy of Sciences)

“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”

பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert)     

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து.  அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

ரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.

ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.

அணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் குறைக்க வழிகள் உள்ளன என்னும் பாதுகாப்பு உறுதிலும் பொது மக்களின் உடன்பாடு காணப்பட வேண்டும்.  பாதுகாப்பாக எப்படி அணுமின் உலையில் நேரும் விபத்தின் தீவிர விளைவுகளோடு மனிதர் வாழ முடியும் என்பது ஒருபுறம் இருக்க, செர்நோபில் போன்ற கோர விபத்துகளை எப்படித் தடுக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இன்னும் தெரிய வில்லை !

இயற்கை விஞ்ஞானப் பதிப்பு [Nature]

 

மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928]

முன்னுரை:  2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து  நாடு, நகரம், வீடுகள், தொழிற் துறைகள் தகர்ந்ததோடு, புகுஷிமா அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன.  அத்துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன.  அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார்.  நான்கு  அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.

தற்போது முப்பது உலக நாடுகளில் 430 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகிய வற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.  அதாவது 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்தி ருக்கிறது !  ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.

புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின்சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்ப்பு.

1.  1986 செர்நோபில் அணு உலை விபத்தில் பாடங்கள் கற்றக் கொண்ட ரஷ்ய அணுசக்தித் துறை வல்லுநர் சிலரின் அரிய கருத்துக்கள் கீழே எழுதப்பட்டுள்ளன.


1.1  ரஷ்ய விஞ்ஞானக் கழகத்தின் அதிபர் நிக்கோலை லாவெராவ் (Nikolai Laverov President, Russian Academy of Sciences) கூறுகிறார் :

“இயற்கை அபாய நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்காமல் நாங்கள் பயங்கரத் தொழிற்சாலைகளை அமைத்து விருத்தி செய்யப் போவதில்லை.  சமீபத்தில் நேர்ந்த கோர விபத்துக்களில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நீரடிப்பால் நேர்ந்துள்ளன.  ஆதலால் புதிய அணுமின் நிலையங்களும் பெரிய எரிசக்தி ஆயில் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகளும் கடற்கரைத் தளங்களில் நிறுவகம் ஆவதற்கு முன்பு நாமெல்லாம் பத்து முறை ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  ஜப்பான் பூகம்ப விபத்தில் (2011 மார்ச்சு) பெரிய எரிஆயில் சுத்திகரிப்புத் தொழிற்சாலை எப்படி எரிந்தததென்று பார்த்தோம். ஜப்பானில் நிதிவள விரையத்தோடு சூழ்வெளி, கடல் நீர் தூய்மைக்குக் கேடு விளைந்ததையும் கண்டோம்.  நாம் அம்மாதிரி ஒரே தவறுகளை ஏன் மீண்டும் மீண்டும் செய்கிறோம் ?”

1.2 விலாடிமிர் குபரேவ் (Vladimir Gubarev, Chernobyl Burial Drama Author) கூறுகிறார்

“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார்.  முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து.  எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப்புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.  அது முதல் பிரச்சனை.  இரண்டாவது செர்நோபில் விபத்தின் போது ரஷ்யாவில் தலைமை அரங்கை உடனே ஏற்படுத்தி அரசாங்க அமைச்சகங்கள் அத்தனையும் ஒத்துழைத்தன.  ஜப்பானில் அப்படிக் கூட்டுறவு நிகழவில்லை.  புகுஷிமா அணுமின் உலைகளின் உரிமையாளர் (Tokyo Electric Power Company -Tepco) ஒரு தனியார் நிறுவகம்.  டெப்கோ தனியாகப் பல்வேறு பாதுகாப்புப் பணிகளை உடனே செய்ய முடியவில்லை.  இதற்கு ஓர் உதாரணம் : புகுஷிமா தளத்தில் மின்சக்திப் பரிமாற்றம் அறுபட்ட பிறகு, உதவிக்கு அடுத்த தனியார் மின்சார வாரியத்திலிருந்து கொண்டு வர டெப்கோவுக்குப் பல நாட்கள் ஆயின !”


1.3 செர்கி நோவிகோவ் (Sergei Novikov, Head of Communication at Rosatom) கூறுகிறார்

ரஷ்யாவின் ரோஸாட்டம் குழு (Rosatom Group) ஜப்பான் நாடு அழைத்தால் முடங்கிப் போன அணு உலைகளுக்கு உதவி செய்யத் தயாராய் இருந்தது.  எந்த எந்தத் துறைகளில் உதவி தேவை என்று ஜப்பான் கேட்டால் அந்தத் துறைகளில் உடனே உதவிட நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.  (ஆனால் மெய்யாக அழைப்பு வரவில்லை).  ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெத்வெதேவ் (President Dimitri Medvedev) & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் (Prime Minister Vladimir Putin) இருவரும் (புகுஷிமா விபத்துக்குப் பின்) ஒருங்கே அழுத்தமாக இப்படி அறிவித்தார்:  ரஷ்யாவில் எரிசக்தியும் ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறை இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை..”

1.4 லியோனிட் போல்ஸோவ் (Director, Institute of Safe Development of Nuclear Power Industry) கூறுகிறார்

“இப்போது ரஷ்ய அணுமின் நிலையங்களைப் பொருத்த வரையில் பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் முற்றிலும் வேறுபட்டவை.  ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையங்களில் சில 40 வருடங்களுக்கு முன்பு கட்டப் பட்ட பழைய மாடல்கள் என்னும் குறைபாடு ஒருபுறம் இருக்கட்டும்.  அதற்குப் பிறகு சில மேம்பாடுகளை அவற்றில் ஜப்பானியர் செய்தனர் என்பது மெய்தான்.  அவற்றின் தகுதிப்பாட்டை நான் எடை போடப் போவதில்லை.  நவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவ தென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப் பட்டுள்ளன.  அணு உலை எரிகோல்கள் வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்திருக்கிறோம்.  எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் தயார் முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை அபாய நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக் கோல்களின் வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டை அரணுக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன.  அத்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைப்பாகி உள்ளது.  மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் [(1) Passive Air Heat Exchanger, (2) Long Term Fission Product Filtering System,  (3) Hydrogen Recombiners)] போன்றவையும் அமைக்கப் பட்டுள்ளன.  செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.

1.5 பேராசிரியர் அதனாஸ் தஸேவ் (Bulgarian Nuclear Forum, Energy Expert) கூறுகிறார்

ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகள் சில காலம் கடந்த பிற்போக்கு முறையில் கட்டப் பட்டிருந்தாலும் அவை 9 ரிக்டர் அசுர அளவு நிலநடுக்கத்தில் கூடப் பழுதாக வில்லை என்பது அழுத்தமாகக் குறிப்பிடத் தக்கது.  40 வருடங்கள் கடந்தும் டிசைன் முறைப்படி அவற்றில் பாதுகாப்பு இயக்கங்கள் சுயமாக நிகழ்ந்தன.  ஆனால் விபத்துக்கள் நேர்ந்ததற்குக் காரணங்கள் டிசைன் எல்லைக்கு அப்பாற் பட்டவை. 30 அடி (10 மீடர்) உயரச் சுனாமித் தாக்கல் இதுவரை எதிர்பாராது.  8 அடி (2.5 மீடர்) உயர அணையைத் தாண்டி அபாயப் பாதுகாப்புச் சாதனங்களைச் சுனாமிப் பேரலை அடிப்பு மூழ்க்கி விட்டு முடமாக்கியது.  எதிர்பாராத சுனாமியால் நேர்ந்த புகுஷிமா விபத்தால் உலக நாடுகளின் அணுசக்தி உற்பத்தித் திட்டங்கள் பாதிக்கப்பட வேண்டிய தில்லை.  ஆனால் ‘அவசியப் பன்முக அமைப்பு’ பற்றி ஒரு விதி (Law of Necessory Diversity) உள்ளது.  இது மர்·பி நியதி (Murphy’s Law) என்றும் அழைக்கப்படுகிறது.  அதாவது “சிந்தனைப்படி ஏதோ ஒரு தவறு நிகழலாம் என்று எதிர்பார்க்கப் பட்டால், நிச்சயம் அது நேர்ந்திடும்.”

இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை.  புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை.  இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.

1.6  அலெக்ஸாண்டர் பைக்கோவ் (Deputy Director General IAEA) கூறுகிறார்

புகுஷிமாவின் நிறுத்தமான அணு உலைகளின் வெப்பக் கட்டுப்பாட்டை ஜப்பான் நிபுணர் பல நாட்கள் செய்ய முடியாது கதிரியக்கம் வெளியேறித் தீவிர விபத்தானது.  இறுதியாக ஜப்பானிய பொறியியல் வல்லுநர் வெப்பத்தைக் கட்டுப் படுத்த முடிந்தது.  எங்கள் கணிப்பின்படி அணு உலைகளில் ஓரளவு எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி சிதைவடைந்தன என்று கூறுகிறோம்.  ஆனால் அவை உஷ்ணம் மீறி அறிவிக்கப்பட்டது போல் உருகிப் போய்விட வில்லை (No Meltdown) என்பது எமது கருத்து.  அப்படி எரிக்கோல்கள் உருகிப் போயிருந்தால் உள்ளே பரவிய / வெளியே சூழ்ந்த கதிரியக்க வெளிவீச்சும் உக்கிரமும் பெரு மடங்காய் முற்றிலும் வேறுபட்டிருக்கும்.  அதாவது திரிமைல் தீவு விபத்து போல் எரிக்கோல்கள் புகுஷிமாவில் உருகிப் போகவில்லை !  ஹங்கேரியன் பாக்ஸ் அணுமின்சக்தி நிலைய விபத்து போல் (Hungarian Paks Atomic Power Plant Accident – Level 3) எரிக்கோல்களில் சிதைவுகள் நேர்ந்துள்ளன.

(தொடரும்)

***************

தகவல்:

1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)

2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire

3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)

4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo

5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill

6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)

7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)

8. Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)

9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.

10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants

11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

13.  IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant   (August 17, 2007)

14.  Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant  (Jan 29, 2009)

15.  Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station  (Nov 14, 2009)

16.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

17. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

18. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

19.  Nuclear {Power in Japan (March 30, 2011)

20. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

20 (a)  Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

21. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

22.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

23.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

24. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

25. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

26. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

27. World Nuclear Association Report : Fukushima Accident 2011 (May 30, 2011)

28. World Nuclear Association Report : Policy Responses to the Fukushima Accident. (May 31, 2011)

29 Wikipedea Report : http://en.wikipedia.org/wiki/Paks_Nuclear_Power_Plant (Hungarian Paks Atomic Plant Loss of Coolant Accident) (May 27, 2011)

30. Wikipedea Report :  List of Civilian Nuclear Accidents (June 4, 2011)

************************
S. Jayabarathan  (jayabarat@tnt21.com) June 5, 2011
http:jayabarathan.wordpress.com/

ஜப்பான் புகுஷிமா அணு உலை விபத்துக்கும் செர்நோபில் வெடி விபத்துக்கும் உள்ள வேறுபாடுகள் -2

(மே மாதம் 2011)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

 

 

“தோழர்களே! செர்நோபில் அணுமின் நிலையத்தில் மாபெரும் சீர்கேடான விபத்து நேர்ந்துள்ள தென்று நீங்கள் யாவரும் அறிவீர்!  சோவியத் மக்கள் பேரின்னல் உற்றதுடன், அவ்விபத்து அகில உலக நாட்டினரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி விட்டது!  முதன்முதலாகக் கட்டுக்கடங்காது மீறி எழுந்த அணுசக்தியின் பேராற்றலால் பாதிக்கப்பட்டு நாம் பேரளவு சிரமத்துடன் போராடி வருகிறோம்!”

மிக்கேயில் கார்பச்சாவ், முன்னாள் சோவியத் அதிபர் [1986 ஏப்ரல் உரை]

“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

‘செர்நோபிலில் மெய்யாக நடந்தவை’ என்னும் எனது நூலை வாசிப்போர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்:  செர்நோபில் விபத்து (ஏப்ரல் 1986) உலக நாடுகளைப் பாதித்த ஓர் துன்பமய நிகழ்ச்சி!  அது விளைவித்த தீங்குகள் இப்போதும் (2011) மக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகின்றன.  மில்லியன் கணக்கான மாந்தர் இன்னும் கதிர்த் தீண்டிய தளங்களில் வசித்து வருகிறார்.  அவர்கள் யாவரும் மற்ற உலக மக்களின் உதவியையும், பரிவையும் பெரிதளவு நாடுகிறார்.

கிரிகொரி மெத்வதேவ் [Author The Truth About Chernobyl (July 8, 1990)]

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும்.  அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

“அமெரிக்காவின் விண்வெளிக்கப்பல் “சாலஞ்சர்” எரிந்து போய் அனைத்து விண்வெளி விமானிகள் [1986 ஜனவரி 28] மாண்டதும், அடுத்துச் செர்நோபில் அணுமின் நிலையம் [1986 ஏப்ரல் 26] வெடித்ததும் நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்து, நாகரீக முன்னேற்றத்தின் பெயரால் எழுந்துள்ள நிறுவகங்களின் கோர விளவுகளை மனித இனம் இன்னமும் புரியாமலே இருப்பதை நினைவூட்டுகின்றன.”

மிக்கேயில் கார்பசாவ் [Mikhail Gorbachev (Aug 18, 1986)]

அணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் குறைக்க வழிகள் உள்ளன என்னும் பாதுகாப்பு உறுதிலும் பொது மக்களின் உடன்பாடு காணப்பட வேண்டும்.  பாதுகாப்பாக எப்படி அணுமின் உலையில் நேரும் விபத்தின் தீவிர விளைவுகளோடு மனிதர் வாழ முடியும் என்பது ஒருபுறம் இருக்க, செர்நோபில் போன்ற கோர விபத்துகளை எப்படித் தடுக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இன்னும் தெரியவில்லை!

இயற்கை விஞ்ஞானப் பதிப்பு [Nature]

முன்னுரை:   1986 ஏப்ரல் 26 ஆம் நாள் செர்நோபில் அணுமின் உலைச் சோதனையின் போது வெடித்துப் பேரின்னல்கள் விளைந்ததில் 190 டன் சூட்டு யுரேனிய எரிக்கோல்களின் 5% கதிரியக்கத் துணுக்குகள் காற்றில் மிதந்து உலகெங்கும் படிந்து விட்டன!  செர்நோபிலுக்கு வடக்கே இருக்கும் பெலரஸ் நாட்டில் மட்டும் சுமார் 70% கதிரியக்கப் பொழிவுகள் பெய்து விட்டன!  அவற்றின் தீவிரத்தை ஒப்பிட்டுக் கூறினால், ஹிரோஷிமா அணு ஆயுத வெடிப்புக் கதிர்வீச்சைப் போல் 90 மடங்கு மிகையானது என்று சொல்லலாம். 25 ஆண்டுகளுக்கு முன்பு அந்த விபத்து நேர்ந்தாலும் செர்நோபிலின் கோர விளைவுகளைச் சிறுவர், சிறுமியர், சிசுக்கள் தவிர்க்க முடியாது பேரளவில் பாதிக்கப் பட்டு விடிவை நோக்கிக் காத்திருக்கிறார்கள்!  கதிர்வீச்சு தீண்டப்பட்ட தளங்களில் மக்கள் அனுதினம் உண்டு, உறங்கி, உலவி வருகிறார்!  கதிர்வீச்சு கலந்த நீரை அனுதினம் குடித்து வருகிறார்!  கதிர்வீச்சு சூழ்ந்த காற்றைச் சுவாசித்து வருகிறார்!  கதிர்த்தீண்டிய நிலத்தில் விளைந்த தானியப் பயிரை உண்டு, பலர் வயிறு வீக்க நோயில் [Gastritis] வாதிக்கப் படுவாகத் தெரிகிறது!  குழந்தைகள் சில புற்று நோய்கள், தோல் தொல்லைகள், இரத்த நோய் [Leukaemia], தலைவலி, தலைச்சுற்று, மூக்கில் இரத்தக் கசிவு ஆகியவற்றில் துயர்ப்பட்டு வருகிறார்.  மேலும் கதிரியக்கத் தீங்கு உடம்பின் நோய்ச் சுயத் தடுப்பு ஏற்பாடுகளைத் [Immune Systems] தகர்த்துத் தீரா நோய்கள் தாக்குவதற்கு வழி வகுக்கிறது என்பதும் தெரிய வருகிறது.

முப்பது உலக நாடுகளில் 430 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  2011 ஆண்டு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது !  அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு அடுத்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

1)   சோவியத் ரஷ்யாவில் கிஷ்டிம் [Kyshtym] விபத்து [1957]  (Level : 6.)

2)   பிரிட்டனில் வின்ட்ஸ்கேல் [Windscale] விபத்து [1957]  (Level : 5)

3)   அமெரிக்காவில் திரிமை தீவு [Three Mile Island] விபத்து [1979] (Level : 5)

4)  சோவியத் ரஷ்யாவில் செர்நோபில் விபத்து [1986] (Level : 7)

5)  இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலையத்தில் வெடிப்பு  [1993] (Level : 4)

6)  ஜப்பான் புகுஷிமாவில் நான்கு அணு உலைகளில் விபத்து [2011]         (Level : 6 -7)

எல்லாவற்றிலும் செர்நோபில் விபத்தே உலகலாவிய தீங்குகளை விளைவித்த பேரிடர்ப் பெரு விபத்தாக உச்ச நிலைக்கு உயர்த்தப் படுகிறது!  ஆயினும் அணுமின்சக்தி நிலையமே பேரளவு மின்சார உற்பத்திக்குத் தேவையான தொழிற்சாலை என்று உலகெங்கும் தற்போது நிலை பெற்று விட்டது.  ஆனால் பெரிய விபத்துக்கள் நேராமல் பாதுகாப்பாக இயக்கி மின்சாரம் அனுப்ப முடியும் என்பது இன்னும் அழுத்தமாக உறுதி அளித்துக் காட்டப்படும் வரையில் பொது மக்களின் பூரண வரவேற்பையும், அனுமதியையும் அணுமின் நிலையங்கள் பெறமாட்டா!  அணுமின் நிலையங்களில் விபத்துக்களை எதிர்பார்க்கும் அச்சமும், ஐயப்பாடும், அனுபவமும் மேலும் பொது மக்களுக்கு அவற்றின் தீங்குகளின் தீவிரத்தைப் பன்மடங்கு மிகையாக்குகிறது!

ஜப்பான் புகுஷிமா நான்கு அணு உலை விபத்துக்களில் என்ன நேரவில்லை ?

2011 மார்ச் மாதத்தில் நேர்ந்த நிலநடுக்கச் சுனாமியால் பாதுகாப்பாய் நிறுத்தமான புகுஷிமா அணுமின் உலைகளின் வெப்பத் தணிப்பு நீரனுப்பு ஏற்பாடுகள் (Shutdown Decay Heat Cooling Systems) முடமாகிச் சிறிதளவு எரிகோல்கள் உருகி ஹைடிரஜன் வாயுக் கோளம் பெருகி மேற்தளங்கள் வெடித்தன !  கசிந்த நீராவியில் பேரளவு கதிரியக்க வாயுக்கள் வெளியாகி சூழ்வெளியிலும், சூழ்கடலிலும் ஐயோடின்-131 (அரை ஆயுள் : 8 நாள்) & சீஸியம்-137 (அரை ஆயுள் : 30 வருடம்) பரவின.  அகில நாட்டு அணுவியல் பேரவை (International Atomic Energy Agency – IAEA) புகுஷிமா வெடி விபத்தை விபத்து நிலை 5 லிருந்து 7 விபத்து நிலைக்கு மாற்றினாலும் செர்நோபில் விபத்தின் கோரமும், புகுஷிமா அணு உலை மேற்கட்டட வெடிப்பின் சீர்கேடும் ஒன்றல்ல என்பது கட்டுரை ஆசிரியரின் கருத்து.  பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலைகளில் என்ன நிகழ்ந்தன என்பதைப் பெரும்பாலோர் தொலைக்காட்சி மூலம் அறிந்திருந்தாலும், அவற்றில் என்ன நிகழவில்லை என்பதையும் அறிந்து இங்கு நாம் ஒப்பு நோக்கத் தேவைப் படுகிறது.


1.  7.5 ரிக்டர் அளவு நில நடுக்கப் பாதுகாப்புக்குக் கட்டப்பட்ட புகுஷிமா அணு உலைச் சாதனங்கள், கட்டடங்கள் 9.0 ரிக்டர் அளவு அசுரப் பூகம்பத்துக்கும் சிதையாமல் நிமிர்ந்து நின்றன !  அணு உலை எஃகுக் கோட்டையின் அழுத்தம் நீக்குத் தடாக வளையம் (Reactor Steel containment Suppression Pool Torus) நீராவி அழுத்தத்தால் சற்று பிளந்தாலும், நிலநடுக்கத்தால் சீர்கேடாக வில்லை.  ஓரளவு உருகிப் போன எரிகோல்களும் பாதுகாப்பாக எஃகுக் கோட்டை அரணுக்குள் அடக்கம் ஆயின.

செர்நோபில் அணு உலைக்கு எஃகு கோட்டை அரண் அமைக்கப் படவில்லை.  எரிந்து போன யுரேனியக் கோல்களும், உருகி வழிந்த எரிக் கோல்களும் உள்ளடக்கப் படாமல் வெடிப்பில் சிதறிச் சுற்றிலும் வீசி எறியப் பட்டன.

2.  புகுஷிமா அணு உலைகள் அனைத்தும் நில நடுக்கம் ஆரம்பித்த உடனே சுயமாய் நிறுத்தம் அடைந்து, எஞ்சிய வெப்பத்தைக் குறைக்க அபாயத் தணிப்பு நீர் ஏற்பாடுகள் தானாய் இயங்க ஆரம்பித்தன. நிலநடுக்கம் நின்று ஒரு மணி நேரம் கடந்து சுனாமி அலைகள் எழுந்து டீசன் எஞ்சின்களை நிறுத்தும் வரை வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் சுயமாய் இயங்கி வந்து வந்துள்ளன !




செர்நோபில் அணு உலையில் கட்டுப்பாடுக் கோல்கள் (Control Rods) இயக்குநரால் தவறாக மேலே தூக்கப்பட்டு அணு உலை மீறிய இயக்கத்தில் சீறி எழுந்து, அபாய நிறுத்தக் கோல்களை (Shutdown Rods) இறக்கித் தடுக்க முடியாமல் போய் பேரளவு வெப்பம் உண்டாகி அணு உலை வெடித்துக் கவசச் சாதனங்களும், கட்டடமும் தகர்ந்தன.  சூடான எரிக்கோல்கள் உடைந்து அங்குமிங்கும் சிதறி எறியப்பட்டன !

3.  புகுஷிமா அணு உலைகளில் ஓடிக் கொண்டிருந்த அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பு ஏற்பாடுகள் (டீசல் எஞ்சின் ஜெனனி மின்சாரம்) (Emergency Diesel Generator) சுனாமிப் பேரலையால் மூழ்கப்பட்டு முடங்கிப் போயின.  அதனால் சில எரிக்கோல்கள் உருகிப் போனாலும் அணு உலை அரணை விட்டு அவை அகல வில்லை.  எரிக்கோல் கவசம் ஸிகோனியம் (Fuel Sheath : Zirconium) சூட்டு நீரோடு இணைந்து உண்டான ஹைடிரஜன் வாயுக் கோளம் திரண்டு ‘அழுத்த விடுவிப்புச் சாதனம்’ (Relief Valve) மூலம் கசிந்து வெளியேறி வெடிப்பை உண்டாக்கியது.  ஆயினும் கதிரியக்க எரிக்கோல்கள் உருகி, உடைந்து சூழ்தளத்தில் சிதற வில்லை.  எஃகு அரணுக்குள் அடக்கம் ஆயின !




அணு உலைகளைப் பற்றிப் பயிற்சி அளிக்கப் படாத அப்பாவித் தீயணைப்புப் படையினர் கவச அணிகளின்றித் தீயணைக்கச் சென்று செர்நோபில் அணு உலையிலிருந்து சிதறிய கதிரியக்கத் துணுக்குகள் மீது நடந்து பேரளவு கதிரடி பெற்று ஒரு சில தினங்களில் உயிரிழந்தார்.  புகுஷிமா அணு உலை விபத்தில் அபாயப் பணி புரிந்தோர் அனைவரும் போதிய கவசம் அணிந்து வேலை செய்தார்.  சிறிதளவு கதிரடி பெற்றார்.

4.  புகுஷிமாவின் நான்கு அணு உலைகளில் விபத்து நேர்ந்து கதிரியக்கம் ஓரளவு சூழ்வெளியிலும், சூழ்கடலிலும் பரவினாலும், ஜப்பானியப் பணியாளர் எவரும் தீவிரக் கதிரடி பெற்று உயிரிழக்க வில்லை.  அவரில் பலர் சிறிதளவு கதிரடியே பெற்றார்.  பொது மக்களில் சிலர் சிறிதளவு கதிரடி பெற்றார்.

செர்நோபில் அணு உலை வெடித்த பிறகு ஒரு சில மாதங்களில் உயிரிழந்தோர் 56 பேர்.  அவரில் 28 நபர் ஒரு சில நாட்களில் / வாரங்களில் இறந்தவர்.  மேலும் கதிர்வீச்சு நோயால் (Radiation Sickness) இன்னலுற்ற ஊழியர் & தீயணைப்புப் படையினர் 200 முதல் 300 பேர் என்று தெரிகிறது.  25 வருட இடைவெளியில் 130,000 பேர் பெலாரஸ், யுக்ரேயின், ரஷ்யா, அப்பால் சில பகுதிகளில் / நாடுகளில் சிறிதளவு கதிரடி வாங்கினார்.  தைராய்டு புற்று நோய் வாய்ப்பட்டவரில் 4000 சிறுவரின் தாக்கம் செர்நோபில் விபத்தால் நேர்ந்தது என்று முடிவு செய்யப் படுகிறது.  அந்நோய்களில் பெரும்பான்மை யானவை குணமாக்கக் கூடிய தென்றாலும், 9 சிறுவர் இறந்து விட்டதாக அறியப் படுகிறது.  இரத்த நோய் (Leukaemia) அல்லது வேறு புற்று நோய்கள் எதிர்பார்க்கப் பட்டாலும் அவற்றின் அதிகரிப்பு காணப் படவில்லை.

5.  புகுஷிமாவின் நான்கு அணு உலை விபத்துக்கள் 30 அடிச் சுனாமியால் நேர்ந்ததே தவிர மனிதத் தவறால் தூண்டப்பட வில்லை.  நிறுத்தப் பட்ட மூன்று அணு உலைகளில் விளைந்த மிச்ச வெப்பத்தைத் தணிக்கும் அபாயத் தடுப்பு டீசல் எஞ்சின் ஜெனனி பம்ப் நீரோட்டம் (Shutdown Decay Heat Cooling System) சுனாமியால் நீண்ட காலம் தடைப் பட்டதால் ஏற்பட்டது.  அணு உலை நிறுத்தமானதும் ஒரு சில நிமிடங்கள் வெப்பசக்தி 7% அளவு நிலைக்கும், இரண்டு மணிநேரம் கழித்து 1% ஆகவும், ஒரு நாளில் 0.5% ஆகவும், ஒரு வாரத்துக்குப் பிறகு 0.2% ஆகவும் குறைகிறது.  1000 MWe மின்சாரம் வெளி அனுப்பும் அணு உலையில் 1% வெப்பசக்தி அளவு 350 MWt ஆற்றலாகும் !  நவீன அணுமின் நிலையங்களில் இவ்விதம் வெப்பத் தணிப்புக்குத் தடை ஏற்பட்டால், ஈர்ப்பு விசையில் இயங்கும் ஓய்தொட்டி நீரோட்ட அமைப்பு (Passive Tank Gravity Water Cooling Systerm), நகரும் தீயணைப்பு நீரோட்ட இணைப்பு (Mobile Fire Water System) போன்றவை நீண்ட காலத் தணிப்புக்குத் தயாராக இருக்கும்.  சேரும் கதிரியக்கக் கழிவு நீருக்குத் தொட்டிகள், கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடுகள் (Ion Exchange Filtering System) புகுஷிமா அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட வில்லை.

செர்நோபில் விபத்து திட்டமின்றி துவங்கிய அணு உலைச் சோதனையில் இயக்குநர் புரிந்த மாபெரும் பல்வேறு மனிதத் தவறுகளால் தூண்டப் பட்டது.

முடிவுரை :   நான்கு அணு உலை எஃகு அரண்களில் மூன்றில் எந்தப் பழுதும் ஏற்பட்டதாகத் தெரிய வில்லை.  அரண்களின் கீழிருக்கும் ஒன்று அல்லது இரண்டு ‘அழுத்தம் நீக்குத் தடாக வளையத்தில்’ (Pressure Suppression Pool Torus) மட்டும் பிளவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.  இவற்றைச் செப்பனிட முடியும்.  அணு உலை எரிக்கோல்களின் வெப்பம் பேரளவு தணிக்கப் பட்ட பிறகு, கதிர்த் தீண்டல் தளங்கள் துடைக்கப் பட்ட பிறகு, அணு உலையும், எரிக்கோல்களும் ஆழ்ந்து சோதிக்கப்படும்.  ஓரளவு உருகிப் போன எரிக்கோல்கள் கவசத் தொட்டிகளில் ஓரிரண்டு ஆண்டுகளில் நீக்கப் படும்.  இடிந்து போன நான்கு அணு உலைக் கட்டடங்கள் மீண்டும் கட்டப்படும்.  நவீன முறை அரண்களும், அணு உலைகளும், அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடுகளும் புதிதாய் அமைக்கப்படும்.  அந்தச் செம்மைப்பாடுகளுக்கு நிதிச் செலவு மிகையானால் மூன்று அணு உலைகளும் எரிக்கோல்கள் நீக்கப் பட்டு நிரந்தரமாய் மூடப் படலாம்.  இப்போது ஜப்பானிய நிபுணர் அணு உலைச் சோதனையில் ஈடுபட்டிருப்பதால் அவரது முடிவு என்ன வென்று நிச்சயமாய் தற்போது யாரும் அறிய முடியாது.  புகுஷிமா அணு உலைச் சீரமைப்பில் எந்தப் பணியை ஜப்பான் மேற்கொண்டாலும் அவற்றை செய்து முடிக்க 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகலாம்.

(தொடரும்)

***************

தகவல்:

1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)

2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire

3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)

4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo

5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill

6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)

7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)

8. Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)

9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.

10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants

11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

13.  IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant   (August 17, 2007)

14.  Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant  (Jan 29, 2009)

15.  Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station  (Nov 14, 2009)

16.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

17. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

18. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

19.  Nuclear {Power in Japan (March 30, 2011)

20. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

20 (a)  Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

21. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

22.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

23.  World Nuclear Association Report – Nuclear Power in Japan & Nuclear Safety and Seurity in the wake of Fukushima Accident (Updated in April 2011)

24. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

25. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

26. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

27.  Wikipedia : Chernobyl Disaster Effects  (May 22, 2011)

************************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) May 28, 2011
http:jayabarathan.wordpress.com/

ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1

 (ஏப்ரல் 13, 2010)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


https://www.youtube.com/watch?feature=player_embedded&v=IcGqNM5t28s

 

“அமெரிக்காவின் விண்வெளிக்கப்பல் “சாலஞ்சர்” எரிந்து போய் அனைத்து விண்வெளி விமானிகள் [1986 ஜனவரி 28] மாண்டதும், அடுத்துச் செர்நோபில் அணுமின் நிலையம் [1986 ஏப்ரல் 26] வெடித்ததும் நமக்கு அதிர்ச்சியைக் கொடுத்து, நாகரீக முன்னேற்றத்தின் பெயரால் எழுந்துள்ள நிறுவகங்களின் கோர விளவுகளை மனித இனம் இன்னமும் புரியாமலே இருப்பதை நினைவூட்டுகின்றன.”

மிக்கேயில் கார்பசாவ் [Mikhail Gorbachev (Aug 18, 1986)]

அணுமின்சக்தி நிலையங்களில் விபத்துக்கள் நேரும் என்று எதிர்பார்ப்பதிலும், அதனால் ஏற்படும் தீங்கு விளவுகளைக் குறைக்க வழிகள் உள்ளன என்னும் பாதுகாப்பு உறுதிலும் பொது மக்களின் உடன்பாடு காணப்பட வேண்டும்.  பாதுகாப்பாக எப்படி அணுமின் உலையில் நேரும் விபத்தின் தீவிர விளைவுகளோடு மனிதர் வாழ முடியும் என்பது ஒருபுறம் இருக்க, செர்நோபில் போன்ற கோர விபத்துகளை எப்படித் தடுக்க வேண்டும் என்பது முக்கியமான கேள்வியாக இன்னும் தெரியவில்லை!

இயற்கை விஞ்ஞானப் பதிப்பு [Nature]

நகரிலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ள சிறு அணுமின் நிலையம் ஒன்றில் பெரும் விபத்து நேர்ந்தால், சுமார் 3400 பேர் மரணம் அடையலாம்! கதிரியக்கத்தால் 43,000 நபருக்குத் தீவிரத் தீங்குகள் விளையலாம்! நகரப் புறத்திலும், நிலவளத்திலும் ஏற்படும் பொருட் சேதம் சுமார் 7 பில்லியன் டாலர் நிதி விரையத்தை உண்டாக்கலாம்.

அமெரிக்க அணுசக்திப் பேரவைக் கணிப்பு [US Atomic Energy Commission Brookhaven Report (1957)]

“மேன்மையான படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையும் கோர முடிவுகளின் முழுத் தோற்றத்தை முதலில் உற்று நோக்கிய பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும்”

தாமஸ் ஹார்டி [Thomas Hardy]


முன்னுரை:  2011 மார்ச் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குக் கரையில் 9 ரிக்டர் அளவில் அசுரப் பூகம்பம் ஒன்று உண்டாகி, இதுவரை எழாத 9 மீடர் (30 அடி) உயரச் சுனாமிப் பேரலைச் சுவர் தாக்கிப் பேரழிவை உண்டாக்கியது !  அப்போது அந்தப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த 11 அணுமின் உலைகள் பாதுகாப்பாக சுயநிறுத்தம் அடைந்தன !  7.5 ரிக்டர் நிலநடுக்க அளவைத் தாங்கிக் கொள்ள அமைக்கப்பட்ட அணுமின் உலைகள் 9 ரிக்டர் அளவு பூத நடுக்கத்தைப் பொறுத்துக் கொண்டு நிலைகுலையாது நிமிர்ந்து நின்று ஆச்சரியம் விளைவித்தது !  ஆனால் 30 அடி உயர அசுரச் சுனாமி அலையை அணு உலைகள் தாங்கிக் கொள்ள முடியாது அவற்றின் அபாயப் பணி அவசிய மின்சாரச் சாதனங்கள் முடமாக்கப் பட்டு நிறுத்தப் பட்டன.  அணு உலை எருக்கோல்களின் மிச்ச வெப்பத்தைத் (Residual Heat of the Shutdown Fuel Rods) தணிக்க நீரனுப்ப முடியாமல் ஓரளவு உருகிப் போயின.  மேலும் நீரில் மூழ்காத எருக்கோல்களின் உஷ்ணம் மிகையாகி அவற்றின் கவச ஸிர்கோனியம் (Zirconium Fuel Sheath) நீரோடு இணைந்து ஹைடிரஜன் வாயுக் கோளம் வெளியேறி ஆக்ஸிஜனுடன் கலந்து யூனிட் -1, -2, -3 அணு உலைக் கட்டங்களின் மேற்தளங்கள் வெடித்தன !  யூனிட் -1 இன் எஃகு கோட்டைக் கீழ் வளையத்தில் (Torus) நீராவியின் அழுத்தம் மிகையாகிப் பிளவு ஏற்பட்டு கதிரியக்க கசிவு தொடர்ந்தது.  வெப்பத் தணிப்புக்குக் குழாய் நீரனுப்ப வசதியற்று, கடல் நீரைப் பயன் படுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது,  அணு உலை வெப்பத் தணிப்பு நீர் போக்குக்குத் தேக்குமிடம் இல்லாமல் டர்பைன் கட்டடத்தில் சேமிப்பாகிக் கதிரியக்கம் கடல் வெள்ளத்தில் கலந்தது !  வெளியேறும் நீராவியில் கதிரியக்கத் தூள்களும் வாயுக்களும் சுற்றுப் புறங்களில் பலமடங்கு வீரியத்தில் பரவின !

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு 1979 இல் நேர்ந்த அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்தில் வெப்பத் தணிப்பு நீரனுப்ப முடியாது பேரளவு எருக்கோல்கள் உருகிப் போயின.  வெப்ப மிகையில் நீரும் எருக்கோல் கவச ஸிர்கோனியமும் இணைந்து பேரளவு ஹைடிரஜன் வாயுக்கோளம் அணு உலைக்குள் திரண்டு வெடித்து மூடிய கோட்டையைத் தகர்த்து விடும் என்றோர் அச்சத்தை உண்டாக்கியது.  அவ்விதம் எச்சரிக்கை செய்து 30 ஆண்டுகள் கடந்து ஜப்பான் புகுஷிமாவில் மூன்று அணுமின் உலைகளில் நிலநடுக்கத்தால் நிறுத்தமாகி, சுனாமியால் டீசல் எஞ்சின்கள் முடக்கமாகி வெப்பத் தணிப்பு நீரனுப்பு ஏற்பாடுகள் தடைப்பட்டு ஓரளவு எருக் கோல்கள் உருகி விட்டன என்று தெரிய வருகிறது !  அதை விடக் கோரமாய் அணுமின் உலைக்குள் பேரளவு ஹைடிரஜன் வாயுக்கோளம் திரண்டு வெடித்து மூன்று அணுமின் உலைகளின் கட்டட மேல்தளம் சிதைந்து அங்கிருந்த யந்திர சாதனங்களும் சிதறிப் போயின !  நான்காவது அணு உலையின் மேற்தளம் நீர்த் தொட்டியில் சேமிப்பான எருக்கோல்கள் தணிப்பு நீரின்றி, ஹைடிரஜன் வாயு சேர்ந்ததால் வெடித்தது !  விபத்து நேர்ந்த திரிமைல் தீவின் விளைவு களிலிருந்து ஜப்பான் அணுவியல் துறை நிபுணர்கள் என்ன பாடங்கள் கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை ! என்ன செம்மைப்பாடுகளைத் தமது அணுமின் உலைகளில் நிறுவினர் என்பதும் ஆழ்ந்து அறிய வேண்டிய உளவுகள் !

அணு உலைகளின் சிதைவாலும், அசுரச் சுனாமியாலும் ஜப்பானியருக்கு விளைந்த பாதிப்புகள் (ஏப்ரல் 25, 2011)

புகுஷிமா பூகம்பச் சுனாமி விபத்தால் நேர்ந்த மரணங்கள், சிதைந்த நகரங்கள், வீடுகள், தொழிற்துறைகள் அவற்றால் ஏற்பட்டப் புலப்பெயர்ச்சிகள், இடக்கடத்தல், கதிரியக்கத் தீண்டல்கள் ஆகியவற்றை நோக்கினால் இந்த நிலநடுக்க விபத்து உலகப் பெரு விபத்துகளில் ஓர் உச்ச இடத்தைப் பெறுகிறது ! இந்தப் பேரிழப்பின் நிதி மதிப்பு சுமார் 235 பில்லியன் டாலர் என்று உலக வங்கி மதிப்பீடு செய்கிறது !  ஜப்பான் அரசாங்கம் இவற்றைச் சீராக்க 3 பில்லியன் டாலர் நிதித் தொகை ஒதுக்குத் திட்ட ஏற்பாட்டை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 25, 2011 தேதி வரை பூகம்பம், சுனாமி, கதிரியக்கத் தாக்குதலால் ஜப்பான் பகுதிகளில் நேர்ந்த முக்கியச் சீர்கேடுகள், இன்னல்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன :

1.  ஜப்பான் தேசீயக் காவல்துறை அறிக்கைப்படி மரணம் அடைந்தவர் எண்ணிக்கை : 14,358. இன்னும் காணாமல் இருப்பவர் எண்ணிக்கை : 11,889.

2.  பூகம்பத்தாலும், சுனாமியாலும், கதிரியக்கத்தாலும் இடங் கடத்தப்பட்டு தற்காலியப் பாதுகாப்பு இடங்களில் தங்கி இருப்போர் எண்ணிக்கை : 130,904.

3.  புகுஷிமா அணு உலை விபத்தால் கதிரியக்கப் பொழிவிலிருந்து 20 கி.மீடருக்குள் அப்பால், 30 கி.மீடருக்குள் வசிக்கும் 136,000 பேர் அரசாங்க ஆணையால் புலப்பெயர்ச்சி ஆக்கப் பட்டுள்ளார்.

4.  தொகூக்கு மின்சார வாரியத்தின் (Tohuku Electric Power Co) அறிவிப்புப்படி 12,485 வட ஜப்பான் இல்லங்களில் மின்சாரம் அனுப்பு வசதிகள் இல்லை.

5.  ஐந்து நகர்ப் புறத்தில் குறைந்தது 79,000 இல்லங்களில் குழாய் மூலம் குடிநீர் அனுப்பு வசதிகள் முடங்கி உள்ளன என்று உடல்நல அமைச்சகம் அறிவித்துள்ளது.

6.  குறைந்தது 95,100 வீடுகள் தகர்ந்து போயின, அல்லது சுனாமியால் இழுத்துச் செல்லப் பட்டன, அல்லது எரிந்து சாம்பலாயின என்று தெரிய வருகிறது.

7.  புகுஷிமாவுக்கு அருகிலுள்ள கடல் நீரைச் சோதித்ததில் கதிரியக்க சீஸியம்-134 இன் அளவு பாதுகாப்பு அனுமதி நிலைக்கு மீறி 18,000 மடங்கு ஏறி விட்டதாக அறியப்படுகிறது.

8. புகுஷிமாவைச் சுற்றியுள்ள நிலவளம், நீர்வளம், பயிர்வளம் கதிரியக்கப் பொழிவுகளால் ஓரளவு தீண்டப்பட்டு பொது மக்களின் வேளாண்மை, தொழில்கள், ஊழியங்கள், உணவு வகைகள், பால்வளம், மீன்வளம் பாதிக்கப் பட்டுள்ளன.  அவற்றின் மொத்த இழப்பீடுத் தொகை இப்போது முழுமையாகத் தெரியாவிட்டாலும், சுமார் 100 பில்லியன் டாலர் என்று பொருளாதார நிபுணர் மதிப்பீடு செய்கிறார்.

9.  பூகம்பத்தாலும், சுனாமியாலும் நேர்ந்த இழப்புக்கள் மட்டும் 300 பில்லியன் டாலர் நிதித் தொகை எண்ணிக்கையை எட்டும் என்று அறியப் படுகிறது !  இதுவரை நேர்ந்த உலக இயற்கைத் தீங்குகளில் உச்ச நிலை இழப்பாக மதிப்பீடு செய்யப் படுகிறது !

10.  ஜப்பானின் இந்தப் பேரிழப்புக்கு உதவி செய்ய இப்போது 146 உலக நாடுகள், 39 அகில நாட்டு ஆணையகங்கள் முன்வந்துள்ளன என்று ஜப்பன் வெளிநாட்டு அமைச்சம் அறிவித்திருக்கிறது.

11.  புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் வெடிப்பும், கதிரியக்க வெளியேற்றமும், சுற்றுப் புறத்தில் வாழும் மக்களுக்கு அளித்த இடர்ப்பாடுகளையும் எடைபோட்டு அகில நாட்டு அணுவியல் துறைப் பேரவை (International Atomic Energy Agency – IAEA) விபத்து நிலை அளவை ஐந்திலிருந்து ஏழுக்கு உயர்த்திச் செர்நோபில் விபத்துக்கு நிகராக ஏற்றியுள்ளது !

12.  சுனாமியால் பெருஞ் சேதமடைந்த புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளும் நிரந்தரமாய் முடக்கமாகிச் சுத்தமாக்கப் பட்டுச் சில ஆண்டுகளில் மூடப்பட்டுவிடும் !  அதனால் ஜப்பானில் மின்சாரப் பரிமாற்றம் 2720 MWe குறைந்து போய் சில இடங்களில் மின்வெட்டும், மின்தடையும் உண்டாகும்.  இந்த நான்கு அணுமின் உலைகளின் சிதைந்த எருக் கோல்கள் நிரந்தரமாய் நீக்கப்பட்டுக் கதிரியக்கத் தீண்டல் யாவும் துடைக்கப்பட்டுச் சுத்தமாக்க குறைந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகலாம் !

ஜப்பானின் எதிர்கால மின்சக்தி உற்பத்தித் திட்டங்கள் (2011 மார்ச் 30) :

ஜப்பானுக்குத் தேவையான எரிசக்தியில் 80% பங்கை மற்ற நாடுகளிலிருந்து அது இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.  இப்போது இயங்கிவரும் 50 அணுமின் உலைகள் 30% மின்சக்தியைத் தொடர்ந்து பரிமாறி வருகின்றன.   2017 இல் அணுமின்சக்தி உற்பத்தி அளவு 40% ஆகவும், 2030 இல் 50% ஆகவும் உயரும் என்று முந்தைய திட்டப்படி எதிர்பார்க்கப் படுகிறது. ஜப்பான் இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு வெடிப்பால் கதிரியக்கப் பாதிப்புகளில் பேரின்னல் உற்றாலும், நிலநடுக்கம், சுனாமி அடிப்புகள் நித்தியப் பேரிடர் கொடுத்தாலும், புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் வெடித்துக் கதிரியக்கம் வெளியேறி மக்கள் பெரு வேதனைப் பட்டாலும், ஜப்பான் தேசத்துக்குத் தொடர்ந்து பேரளவில் மின்சக்தி உற்பத்தி செய்யத் தற்போது அணுசக்தியைத் தவிர எரிசக்தி வேறில்லை என்பது நாம் அறிந்து கொள்ளும் மெய்ப்பாடு ! 7.5 ரிக்டர் அளவுக்கு டிசைன் செய்த புகுஷிமா அணுமின் உலைச் சாதனங்கள். கட்டங்கள் 9 ரிக்டர் அளவுப் பூதப் பூகம்பத்தால் சிறிதளவு கூடச் சிதைவாக வில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.  30 அடி உயரச் சுனாமி அலைகளால் அணுமின் உலைகளில் சீர்கேடுகள் நிகழாமல் தடுப்பு அரண்களும், பாதுகாப்புச் சாதனங்களும் எதிர்கால ஜப்பானில் சுறுசுறுப்பாக உருவெடுக்கும் என்று நாம் நம்பலாம். அணுசக்தியால் ஓடும் ஜப்பானின் யந்திரச் சக்கரத்தை எல்லாம் பெரு நில நடுக்கமும், பேரலைச் சுனாமிகளும், கதிரியக்க அச்சமும் நிரந்தரமாய்த் தடுத்து நிறுத்திவிடும் என்று உலக மாந்தர் எதிர்பார்க்கக் கூடாது !

(தொடரும்)

***************

தகவல்:

1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)

2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire

3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)

4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo

5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill

6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)

7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)

8. Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)

9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.

10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants

11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

13.  IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant   (August 17, 2007)

14.  Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant  (Jan 29, 2009)

15.  Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station  (Nov 14, 2009)

16.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

17. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

18. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

19.  Nuclear {Power in Japan (March 30, 2011)

20. Russia & India Report –  Lessons of Fukushima – Expert Opinions.  (March 28, 2011)

20 (a)  Macleans Magazine – Japan Fearing the Fallout  (March 28, 2011)

21. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

22.  Fukushima & Chernobyl Compared (April 11, 2011)

23.  World Nuclear Association – Nuclear Power in Japan (April 2011)

24. Fukushima : What Happened and What Needs to be done ? (April 10, 2011)

25. Japan Fukushima Damaged Nuclear Reactors’ Status (April 13, 2011)

26. Setbacks at Japan (Fukushima) Nuclear Plants (May 12, 2011)

************************
S. Jayabarathan  (jayabarat@tnt21.com) May 20, 2011
http:jayabarathan.wordpress.com/

ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து

(1999 Accident at Japan ‘s Tokaimura Nuclear Fuel Factory)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


முன்னுரை: 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி, ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் [Uranium Enrichment Factory] ஏற்பட்ட விபத்தில் தீவிரக் கதிரடி பெற்ற மூன்று பணியாளிகளில் இருவர் சில மாதங்களில் உயிரிழந்தனர்! விபத்துக்கு முன் ஜோயோ ஆராய்ச்சி அணு உலை எருவுக்காக [Fuel for Joyo Research Reactor] செறிவு யுரேனியம்235 தயாரிக்கும் ரசாயன வேலையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர். மேற்பார்வை அதிபதிகளின் கூர்ந்த கண்காணிப்பின்றி, தான் என்ன செய்கிறோம், அதனால் என்ன விளையப் போகிறது என்ற விபரம் அறியாமல் பாதிக்கப் பட்ட அப்பாவிப் பணியாளிகள், அம்மூவரும்! 20% செறிவு யுரேனியத்தை மிஞ்சிய அளவில் கொப்பரையில் அறியாது ஊற்றி விட்டதால், பூரணத் தொடரியக்க விபத்து [Criticality Accident] தூண்டப்பட்டு, 20 மணி நேரமாக விட்டு விட்டு அபாய நிலை தொடர்ந்தது! விபத்தின் போது மேலும் 119 பேர்கள் 100 மில்லி ரெம் [100 mRem] (1 Sievert = 100 Rem)கதிரடி வாங்கினர்! ‘அகில நாட்டு அணுவியல் பேரவை ‘ [International Atomic Energy Agency (IAEA)] ஆழ்ந்து உளவு செய்து டோகைமுரா விபத்து மனிதத் தவறுதாலும், பாதுகாப்பு நெறிகளை மீறியதாலும் ஏற்பட்டது என்பதாய் அறிவித்தது! மேலும் IAEA விபத்தின் விளைவு வீரியத்தைக் குறிப்பிடும் போது, தகுதிநிலை:4 [Level:4 Accident Category] என்ற பிரிவில் வகுத்தது. அந்த அளவுக் கோலின்படி டோகைமுரா விபத்தை வெளிமண்டலக் கதிர்த்தீண்டல் மிகுதியாகப் பரவாத, வெறும் கதிரடி விபத்து எனக் காட்டியது!

1986 இல் நேர்ந்த செர்நோபிள் பெரு வெடிப்புக்கும், 1979 இல் நிகழ்ந்த திரி மைல் தீவு விபத்துக்கும் அடுத்தபடி மூன்றாவதாகக் கருதப்படுகிறது, ஜப்பான் டோகை முராவில் விளைந்த கதிரடித் தீங்குகள்! விபத்தின் போது போராடிய 439 நபர்கள் [இயக்குநர், தீப்படை ஆட்கள், மற்றவர்], 228 வட்டார மக்கள் கதிர்வீச்சுக் கதிரடியின் கைவசப் பட்டனர்! தொழிற்கூடத்திற்கு 1150 அடிக்கு அருகில் வாழ்ந்த 161 பேர் 48 மணி நேரம் வேறிடத்துக்குக் கடத்தப் பட்டார்கள்! ஆறு மைல் சுற்றளவில் வசித்த 310,000 நபர்கள் 16 மணி நேரங்கள் தமது இல்லங்களை விட்டு வெளியேறக் கூடாது என்று உத்தரவு இடப்பட்டனர்! டோகைமுராவில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன! வீதிகள், தெருக்கள் மறிக்கப் பட்டு வாகனங்கள் தடுக்கப் பட்டன! ரயில் போக்குவரத்துக்கள் யாவும் நிறுத்த மாயின!

டோகைமுராவில் பூரணத் தொடரியக்க அபாயம் எவ்விதம் ஏற்பட்டது ?

டோகைமுரா டோக்கியோவிலிருந்து நேர் வடகிழக்கே சுமார் 87 மைல் தூரத்தில் உள்ளது. மிகச் சிறிய டோகைமுரா செறிவு யுரேனியத் தொழிற்கூடம் ஜப்பான் அணுஎரு மாற்றுக் கம்பெனிக்கு [Japan Nuclear Fuel Conversion Co.(JCO)] உரிமை யானது. அது சுமிடோமோ உலோகச் சுரங்கக் கம்பெனியின் [Sumitomo Metal Mining Co.] கிளை நிறுவகம். டோகைமுரா யுரேனியத் தொழிற் கூடம் அணுமின் நிலையங்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய நிறுவப்பட வில்லை. அல்லது பயிற்சி பெற்ற பணியாளர் பங்கு கொண்டு அணு எருவைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் வாணிபத் தொழிற் சாலையும் அன்று. ஆராய்ச்சி அணு உலைகளுக்கு மட்டும் வேண்டிய சிறிதளவு செறிவு [18.8%] யுரேனியத்தை அவ்வப்போது தயாரிக்கும் நோக்கம் கொண்டுள்ளதால் சிறப்புத் திறமையோ அன்றி போதிய அணு விஞ்ஞான அறிவோ எதுவும் இல்லாத சாதாரண நபர்களே டோகைமுரா தொழிற்கூடத்தில் வேலைக்கு அமர்த்தப் பட்டனர்!

ஆண்டுக்கு 3 டன் செறிவு யுரேனியம்235 [20% Enriched U235] தயாரிக்கும் மிகச் சிறிய டோகைமுரா தொழிற்கூடம் 1988 ஆண்டு முதல் இயங்க ஆரம்பித்தது. ஜப்பானின் ஏனைய செறிவு யுரேனியச் சாலைகள் யாவும் பாதுகாப்பான திரவ மற்ற ‘வரட்சி முறையைப் ‘ [Dry Process] பின்பற்றும் போது, டோகைமுரா மட்டும் அபாயம் மிகுந்த திரவம் பயன்படும் ‘ஈர முறையைக் ‘ [Wet Process] கையாள டிசைன் செய்யப் பட்டது! 1980 இல் கிடைத்த இயக்க லைஸென்ஸ் விதிப்படி டோகைமுரா ‘ஒரு சமயத்தில் 18.8% செறிவு யுரேனியம் 5.3 பவுண்டு கூடத்தில் உற்பத்தி செய்யலாம் ‘. அதற்கு மிகையான எடைச் செறிவு யுரேனியம் தயாரித்தால், ‘பூரணத் தொடரியக்க விபத்து ‘ [Criticality Accident] நேர வாய்ப்புள்ள தென்று தடுக்கப் பட்டுள்ளது!

அணுஎரு மாற்றல் முறையில் யுரேனியம் ஆக்ஸைடு [U3 O8] திரவம் அடுத்து ஒரு திரவக் கலனில் நைட்டிரிக் அமில ரசாயத்துடன் கலந்து யுரேனில் நைட்ரேட் திரவமாக [Uranyl Nitrate Solution] மாறுகிறது. இறுதியில் திடவத் துணுக்குகள் ‘கீழ்த்தங்கு கொப்பரை ‘ [Precipitation Tank] அடியில் சேர்ந்தபின் திரவம் மட்டும் மேலே நிற்கும்.

அமில ரசாயனச் சேர்க்கையால் எழும் புறவீச்சு வெப்பத்தைத் [Exothermic Chemical Reaction] தணிக்க கீழ்த்தங்கு கொப்பரையைச் சுற்றிலும் நீரோடும் பைப்பு போர்வை போல் [Water Cooling Jacket] அமைக்கப் பட்டிருக்கும்.

அணுக்கருப் பூரணத் தொடரியக்க அபாயம் [Criticality Danger Event] நேராமல் தடுக்கக் கீழ்த்தங்கு கொப்பரையில் நுழையும் திரவத்தில் யுரேனியக் கலவை நிறை, கொள்ளளவு இரண்டும் கட்டுப்படுத்தப் பட்டு [Enriched Uranium Mass & Volume Limitation] குறிப்பிட்ட வரையரை அளவை மீறவே கூடாது! மீறினால் அணு உலைபோல் தொடரியக்கம் உண்டாகி வெப்பமும், கதிர்வீச்சும் ஏற்பட்டு மனிதருக்குத் தீங்குகள் விளைவிக்கும்! அவ்விதம் திரவ அளவைக் கட்டுப்படுத்த கீழ்த்தங்கு கொப்பரைக்கு முன்பு ஓர் ‘இடைவிலக்குக் கிணறு ‘ [Buffer Column] அமைப்பாகி உள்ளது.

எதிர்பாராமல் யுரேனியம்235 நிறையோ, கொள்ளளவோ வரையரை மீறி பூரணத் தொடரியக்கம் நேர்ந்தால், அணுக்கரு இயக்கத்தைத் தடுப்பதற்கு ‘நியூட்ரான் விழுங்கிகள் ‘ [Neutron Absorbers] தயாராக அமைக்கப் பட வேண்டும்! அணுக்கரு இயக்கத்தால் எழும் வீரிய கதிர்வீச்சைக் குறைக்கக் கவசங்கள் [Radiation Shieldings], பணியாளிகளை எச்சரிக்கை செய்ய கதிர்வீச்சு மானிகள் [Radiation Monitors with Alarms] இருக்க வேண்டும். அவ்விதத் தடுப்பு ஏற்பாடுகள் இல்லா விட்டால், ‘அணுவியல் நெறியாட்சி ஆணையகம் ‘ [Nuclear Regulatory Authories] அந்தத் தொழிற்சாலைக்கு இயக்க லைஸென்ஸ் [Operating License] தராது.

ஜப்பானில் லைஸென்ஸ் பெறும் போது, எப்படியோ டோகைமுரா யுரேனியத் தொழிற்கூடம் தப்பி விட்டது! கூடத்தின் உள்ளே கதிர்வீச்சை எச்சரிக்கக் கூச்சல் ஒலி இருந்ததே தவிர, பாதுகாப்புக்கு வேறு நியூட்ரான் விழுங்கிகளோ அன்றிக் கதிர்க் கவசங்களோ எதுவும் வைக்கப் பட வில்லை!

போதிய விஞ்ஞான அறிவற்றுப் பணி செய்வோரும், எந்த வித மேற்பார்வையும் இன்றிப் பயங்கரமான செறிவு யுரேனிய திரவத்தைக் கையாண்டு கலன்களில் மாற்றி வந்தார்கள்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோகைமுரா கூடத்தில், அணுவியல் நெறியாட்சி ஆணை யகத்தின் அனுமதியின்றி, திரவ மாற்று முறையில் ஒரு திருத்தம் செய்யப் பட்டது! அம்முறையில் இடைவிலக்குக் கிணறில் கலக்கப்பட வேண்டிய யுரேனியம் ஆக்ஸைடு, தனியாக ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளிகளில் கரைக்கப் பட்டது! பிறகு வாளிகளிலிருந்து யுரேனியம் ஆக்ஸைடு நேராக கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றப் பட்டது! அப்படி ஊற்றும் போது செறிவு யுரேனியத்தின் நிறை, கொள்ளளவு தெரியாமல் மிஞ்சி விட வாய்ப்புள்ளது! அப்போது நீர்ப் பைப்புகள் சுற்றியுள்ள கொப்பரை, ஓர் அணு உலை போல் இயங்குகிறது! அவ்விதமே டோகைமுராவில் அன்று விபத்து தூண்டப் பட்டுப் பெருந் தீங்கு விளைந்தது!

மூன்று நபர்கள் அன்று வேலையை விரைவில் முடிக்க ஒரு வாளி அளவு ஊற்றுவதற்குப் பதிலாக ஏழு வாளி செறிவு யுரேனிய ஆக்ஸைடு திரவத்தைக் கொப்பரையில் கொட்டினார்கள்! ஏழாவது ஸ்டெயின்லஸ் ஸ்டால் வாளியில் உள்ள திரவத்தை 18 ‘ விட்டம், 27 ‘ உயரமுள்ள 100 லிட்டர் கொப்பரையில் ஊற்றியதும் சரியாக 40 லிட்டர் [35 lb 20% Enriched U235] சேர்ந்து, அங்கே பூரணத் தொடரியக்கம் ‘நீல ஒளி வீசி ‘ [செரன்கோவ் கதிரொளி (Cherenkov Radiation)] துவங்கியது! இடைவிலக்குக் கிணறு வழியாகத் திரவம் அனுப்பப் பட்டிருந்தால், அளவு கட்டுப்படுத்தப் பட்டு அன்று அபாயமே நிகழ்ந்திருக்காது! மேற்பார் வையாளர் ஒருவர் அருகில் நின்று ஏழாவது வாளி திரவத்தை ஊற்றாமல் தடுத்திருந்தால் அன்று பயங்கர விபத்தே நேர்ந்திருக்காது!

செறிவு யுரேனியத் திரவச் சேர்க்கையால் பூரணத் தொடரியக்க விபத்து!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக ‘ஜோயோ வேகப் பெருக்கி ஆய்வு அணு உலைக்கு ‘ [JOYO Experimental Fast Breeder Reactor] வேண்டிய 18.8% யுரேனியம்235 அணு எருவைத் தயாரிக்க டோகைமுராவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது! ஆனால் அப்பணியை செவ்வனே செய்ய பயிற்சி பெற்ற பணியாளிகள் இல்லாவிடினும் தயாரிக்கும்படி JCO மேலதிகாரியிடமிருந்து உத்தரவு வந்தது! அந்த வேலையைச் செய்யப் போன மூவர் 1999 செப்டம்பர் 30 ஆம் தேதி 40 லிட்டர் யுரேனிய திரவத்தை கீழ்த்தங்கு கொப்பரையில் ஊற்றிய போதுதான் யுரேனி யத்தில் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Criticality or Nuclear Chain Reaction] பொங்கி எழுந்தது! உடனே அணுக்கருப் பிளவுகளால் வெப்பமுடன் காமா, நியூட்ரான் கதிர்வீச்சுக்களும் வெளியேறின!


ஆயினும் கொப்பரையில் எவ்வித வெடிப்பும் ஏற்படவில்லை! அணுக்கருப் பிளவுத் துணுக்குகள் மட்டும் கட்டிடத்தின் உள்ளே பரவின! யுரேனிய ஆக்ஸைடு திரவமாக ஈர முறையில் இயங்கியதால் [Wet Process] அணுக்கருத் தொடர்ப் பிளவுகள் விட்டு விட்டு 20 மணி நேரங்கள் நீடித்தன. ஆனால் வரட்சி முறையில் [Dry Process] ஆக்கப்படும் மற்ற செறிவு யுரேனியத் தொழிற்கூடங்களில் அவ்விதப் பயங்கர அபாயம் கிடையாது. யுரேனிய ஆக்ஸைடு திரவ நீர் தொடரியக்கத்தின் போது வெப்ப சக்தியில் கொதித்து ஆவியாகி, வெற்றிடம் [Voids] விளைந்ததும் தொடரியக்கம் நின்று போனது! திரவம் குளிர்ந்து வெற்றிடம் நிரம்பியதும், மறுபடியும் பூரணத் தொடரியக்கம் துவங்கியது! அவ்விதம் 20 மணி நேரங்கள் பூரணத் தொடரியக்கம் விட்டு விட்டு நிகழ்ந்து டோகைமுரா தொழிற்கூடத்தின் அகத்திலும், புறத்திலும் கதிர்வீச்சுகள் பரவின! கதிர்மானிகள் தொடர்ந்து கூச்சலிட்டன! தவறு செய்த மூன்று நபர்களும் உடனே ஓடிச் செல்லாமல் உள்ளே நின்று தொடர்ந்து கதிரடி பெற்றார்கள்! உள்ளே ஓடி வந்த மேலதிகாரிகளும் என்ன நிகழ்ந்து விட்டது என்று முதலில் அறியாமல் திகைத்து நின்று அவர்களும் கதிர்வீச்சில் தாக்கப் பட்டனர்!

கீழ்த்தங்கு கொப்பரையைச் சுற்றியுள்ள தணிப்பு நீர் ஓட்டத்தை நிறுத்தியதும் [Precipitation Tank Jacket water cooling] தொடரியக்கம் நின்றது. போர்வை நீரே வேக நியூட்ரான்களை மிதமாக்கி முதலில் யுரேனியத்தில் அணுக்கருப் பிளவுகள் ஆரம்பித்தன! அடுத்தும் தொடர்ந்தன! இயக்குநர் போர்வை நீரை நிறுத்தி, நியூட்ரான் விழுங்கியான போரிக் ஆஸிட் திரவத்தைக் [Boric Acid Solution] கொப்பரைத் திரவத்தில் கலந்ததும், பூரணத் தொடரியக்கம் நிரந்தரமாய் நின்றது. அடுத்து நியூட்ரான் துகள்களை நிறுத்திக் காமாக் கதிர்களின் வீரியத்தைக் குறைக்க கவசத் தகடுகள் [Radiation Shieldings] கொப்பரையைச் சுற்றிலும் வைக்கப் பட்டன! அப் பணிகளை வரிசையாக நின்று அடுத்தடுத்துச் செய்த 27 நபர்களும் கதிரடி சிறிதளவு பெற்றார்கள்.

விபத்தின் விளைவில் பணியாளர் பட்ட வீரிய கதிரடிகள்

 IAEA இன் ‘அகில நாட்டு அணுக்கரு நிகழ்ச்சியின் தகுதிநிலை ‘ [International Nuclear Event Scale (INES)] விதிப்படி டோகைமுரோ விபத்து தகுதிநிலை:4 [Level:4] என்று தீர்மானம் ஆனது! தகுதிநிலை:4 என்றால் ‘அது ஓர் கதிரடி விபத்து, கதிர்த்தீண்டு விபத்தன்று [An Irradiation Accident, not a Contamination Accident] ‘ என்று மதிப்பீடு பெறும். செர்நோபிள் விபத்து தகுதிநிலை:1, திரி மைல் தீவு விபத்து தகுதிநிலை:3.

கொப்பரை அருகில் வேலை செய்த கூடத்தின் மூன்று பணியாளர் பேரளவு நேரடிக் கதிரடி [Severe Acute Dose] பெற்று ஜப்பான் பல்கலைக் கழகத்தின் மருத்துவ மனைக்கு அனுப்பப் பட்டனர்! 1000-2000 Rem கதிரடி வாங்கியவரின் உள்ளுடல் உறுப்புகள் பல சிதைவாகின! அவரது குருதியில் வெள்ளைச் செல்கள் [White Blood Cells] எண்ணிக்கை பூஜிய அளவுக்குப் போய் விட்டது!

மூன்று மாதங்களில் அவர் மாண்டார்! அடுத்து 600-1000 Rem கதிரடி பட்ட இரண்டாவது நபர் 7 மாதங் களுக்குப் பிறகு மரித்தார். முன்றாவது நபர் 100-500 Rem கதிரடி பெற்று நல்ல வேளை உயிர் பிழைத்துக் கொண்டார்! சாதாரணமாக 800 Rem கதிரடித் தாக்கல் மனிதரின் மரண அளவைக் குறிக்கிறது!

மற்றும் 119 பணியாளர் 100 மில்லி ரெம்முக்கும் மிகையாக [over 100 mRem] பெற்றதாக அறியப் படுகிறது. 56 பணியாளர் எதிர்பாராமல் 2.5 mRem கதிரடி வாங்கினர். பிறகு கீழ்த்தங்கு கொப்பரையைக் காலிசெய்த 21 நபர்கள் வரை யரைக்கு அதிகமான கதிரடியைப் பெற்றனர். அடுத்து புறத்தே வாழ்ந்த 436 நபர்களைச் சோதித்ததில் எவரும் வரையரைக்கு மிஞ்சிய கதிரடியை [5 mRem/year] வாங்கியதாக அறியப்பட வில்லை. கூடத்திற்கு அருகில் வெளியே இருந்த 7 பேர் 1.5 mRem கதிரடி பட்டதாகத் தெரிய வருகிறது.

விபத்து நிகழ்ந்த போது கூடத்தின் காற்றோட்ட ஏற்பாடுகளை நிறுத்த மறந்து விட்டதால், கட்டிடத்தின் உள்ளிருந்த ஐயோடின்-131 [Radioactive Iodine-131] கதிர்வீச்சுத் தீண்டிய வாயுக்கள் பல நாட்கள் வெளியே அனுப்பப் பட்டுப் பரவின. 4300 curie நோபிள் வாயுக்கள், 54 curie கதிர் ஐயோடின் வெளியேறி யிருக்கலாம் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. 5 மணி நேரங்களுக்குப் பிறகு கூடத்துக்கு அருகில் [1150 அடி தூரத்திற்குள்] 39 வீடுகளில் வாழ்ந்த 161 மாந்தர் வேறு இடத்துக்குக் கடத்தப் பட்டனர். கவசங்களும், மணற் பைகளும் வைத்து கதிர்வீச்சுகளைக் குறைத்து இரண்டு நாட்கள் கடந்து, அவர்கள் மீண்டும் வீடுகளுக்கு அழைத்து வரப் பட்டனர்! விபத்து நடந்து 12 மணி நேரங்கள் கழித்து, 5 மைல் வட்டாரத்தில் வாழ்ந்தோர் எச்சரிக்கையின் பொருட்டு, வீட்டுக்குள்ளேயே தங்கும்படி உத்தரவிடப் பட்டனர்! அந்தக் கட்டுப்பாடு அடுத்த நாள் நீக்கப் பட்டது. IAEA பூதள மண்ணையும், விளைந்த காய்கறிகளையும் சோதித்ததில் ஐயோடின்-131  கதிர்மூலகம் எதுவும் பாதுகாப்பளவை மீறியதாகக் காண வில்லை.

ஜப்பான் விபத்து போல் பாரத யுரேனியச் சுத்தீகரிப்புச் சாலைகளில் நிகழுமா ?

2000 ஆம் ஆண்டு ஜப்பான் அணுவியல் கட்டுப்பாடு ஆணையகம் டோகை முராவின் இயக்க லைஸென்ஸை நிராகரித்தும் தொழிற்கூடம் மூடப்பட்டது! அணுமின் உலைகளுக்குத் தேவையான செறிவு யுரேனியத்தை உற்பத்தி செய்யும் பொதுவான அணுஎருத் தொழிற்சாலைகள் 5% செறிவு அளவைப் மிஞ்சிய தில்லை! அவை யாவும் விஞ்ஞான அறிவுள்ள இயக்கு நர்களால் முறையாகக் கண்காணிக்கப் பட்டு பாதுகாப்பாகச் செயல் புரிந்து வருகின்றன! யுரேனிய எருத் தொழிற்சாலைகள் முழுவதும் சுயக் கண்காணிப்பு முறைகளில் இயங்குவதால், ‘பூரணத் தொடரியக்க விபத்து ‘ ஏற்பட்டுத் தீங்கிழைக்க வழியில்லை! நியூட்ரான் பிறப்பதை விரைவில் கண்டு பிடித்து, நியூட்ரான் விழுங்கிகளை கண்ணிமைப் பொழுதில் கலத்தினுள் உட்செலுத்தும் சுய ஏற்பாடுகள் அவற்றில் அமைக்கப் பட்டுள்ளன!

ஜப்பான் தேச மின்னாற்றலில் 36 சதவீதம் 53 அணுமின் நிலையங்கள் பரிமாறும் அணு மின்சக்தியால் உற்பத்தி செய்யப்படுகிறது! அத்துடன் வேறு ஆராய்ச்சி அணு உலைகளும் வேகப் பெருக்கி அணு உலைகளும் இயங்கி வருகின்றன. அந்த அணு உலைகளின் வயிற்றுக்கு (5%-20%) செறிவு யுரேனிய எருக்கள் தொடர்ந்து ஊட்ட வேண்டும்! டோகைமுராவில் மட்டும் JCO வுக்குச் சொந்தமாக 15 அணு எருத் தொழிற் கூடங்கள் உள்ளன. அமெரிக்காவின் NRC [Nuclear Regulatory Commission] போன்று, ஜப்பானில் தனித்தியங்கும் அணுத்துறைக் கட்டுப்பாடுப் பேரவை இல்லாது ஒரு பெருங் குறையே! டோகைமுரா விபத்துக்கு ஒரு காரணம், அணுவியல் தொழிற்கூடத்தில் உள்ள குறைபாடுகளை அடிக்கடி உளவி அறிந்து கட்டுப்படுத்த மேற் குறிப்பிட்ட பேரவை அதிகாரி ஒருவர் டோகைமுராவில் இல்லாமல் போனது!

டோகைமுராவில் நடந்தது ஜப்பானின் முதல் தீவிர விபத்து! 1958 முதல் 1964 வரை அமெரிக்கா, ரஷ்யாவில் இது போல் பல அணுஎரு தொழிற்சாலைகளில் விபத்துகள் நிகழ்ந் துள்ளதாக அறியப் படுகிறது! ஆனால் அந்த விபத்துகளால் வெளி மண்டலத்தில் எந்தக் கதிர்வீச்சுகளும் பரவியதாகத் தெரியவில்லை! பாரதத்தில் மூன்று யுரேனியக் கழிவுச் சுத்தீகரிப்புத் தொழிற்சாலைகள் உள்ளன. அங்கே பூரணத் தொடரியக்க விபத்துகள் [Criticality Accident] எதுவும் இதுவரை ஏற்படாத வண்ணம் நன்கு பயிற்சி பெற்ற எஞ்சினியராலும், இயக்குநராலும் அவை வேலை செய்து கொண்டு வருகின்றன. ஆனால் மனிதத் தவறுகள், கவனக் கோளாறுகள், யந்திரப் பழுதுகள், முறையான பராமரிப்பின்மை, நெருங்கிய மேற்பார்வை யின்மை ஆகிய ஏதாவது ஒரு பிழையால் விபத்து நிகழ வழி பிறக்கலாம் என்பதை வலியுறுத்தாமல் இருக்க முடியாது!

தகவல்:

1. Tokaimura Accident ‘s Third Anniversary By: Dr. Najmedin Meshkati [Sep 24, 2002], Los Angeles, California.

2. Tokaimura Criticality Accident, Nuclear Issues Briefing Paper #52 [June 2000]

3. The Tokaimura Accident: Nuclear Energy & Reactor Safety By: Michael E. Ryan, University of Buffalo, New York [October 2002].

4. The Tokaimura Accident http://www.joewien.de/tokaimura.htm

5. Nuclear Accident in Japan, Tokaimura Accident, The Energy Advocate

6.  Japan’s Nuclear Criticality Accident at a Fuel Conversion Facility, Japan Atomic Industrial Forum, Inc ((Dec 9, 1999)

7.  Safety of Nuclear Power Reactors   (March 29, 2011)
8.  Wikipedia – Tokaimura Nuclear Accident  (May 5, 2011)

ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது

[1995 Sodium Fire in Japan ‘s Monju Fast Breeder Reactor & Restart]

(1995 – 2010)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


‘மேன்மையான படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையும் கோர முடிவுகளின் முழுத் தோற்றத்தை முதலில் உற்று நோக்கிய பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும் ‘

தாமஸ் ஹார்டி [Thomas Hardy]

முன்னுரை: ஜப்பானின் அணுத்துறை விபத்துகளில் இரண்டாவதாகக் கருதப்படும், 1995 டிசம்பர் 8 ஆம் தேதி ஏற்பட்ட இந்த நிகழ்ச்சி, ஒரு முன்னோடி வேகப் பெருக்கி அணுமின் உலையில் நேர்ந்தது! அணு உலை 40% ஆற்றலில் இயங்கும் போது இரண்டாம் கட்ட வெப்பத் தணிப்பு ஏற்பாட்டில் சிறு பைப்பு உடைந்து ஸோடியத் திரவம் 5 டன் வெளியேறி, காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் மூர்க்கமாய்ச் சேர்ந்து வெடித்துத் தீப்பற்றியது! இந்த கோர விபத்து நிகழ்ந்த மஞ்சு அணுமின் உலை பல்லாண்டுகள்  மூடப் பட்டதோடு, ஜப்பானின் பிற்கால வேகப் பெருக்கி அணு உலை முயற்சிகள் யாவும் ஒருங்கே கைவிடப் பட்டன! 280 MWe மின்னாற்றல் உள்ள மஞ்சு வேகப் பெருக்கி, உலகின் இரண்டாவது பெரிய நவீன அணுமின் உலையாக 5.9 பில்லியன் டாலர் நிதிச் செலவில் [1995 நாணய மதிப்பு] 12 ஆண்டுகளாகக் கட்டப் பட்டது! ஆயினும்  விபத்துக்குப் பிறகு செப்பமிடப் பட்டுப புத்துயிர் பெற்று 14 ஆண்டுகள் கழித்து மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை மீண்டும் இயங்க ஆரம்பித்தது, ஜப்பான் தேசத்தின் விடா முயற்சியைக் காட்டுகிறது.   அத்துடன் ஜப்பானில் வேறு வழியற்றுப் பேரளவு மின்சக்தி பரிமாறும் அணுமின் உலைகள் மீது  தொழில் துறைஞர்  கொண்டுள்ள விடாப் பிடிப்பும் தெளிவாகிறது.

மஞ்சு வேகப் பெருக்கியை இயக்கி வரும், அரசுக்குச் சொந்தமான PNC அணுமின் உலை, அணுஎரு வாரியம் [Power Reactor & Nuclear Fuel Corporation] விபத்தைப் பற்றிப் பொது மக்களுக்குப் பொய்த் தகவல்களைத் திரும்பத் திரும்ப அறிவித்ததுடன், விபத்தின் காரணத்தைப் படமெடுத்த வீடியோப் பகுதியை வெட்டி எடுத்துத் தன் மதிப்பையும் பெயரையும் கரையாக்கிக் கொண்டது! மெய்யான காரணத்தை மூடி மறைத்தது தெரிந்த பின், அவமானம் தாங்காது PNC இன் பெரும் அதிபதி, ஷிகியோ நிஷிமுரா [Shigeo Nishimura, Deputy General Manager] மாடி உயரத்திலிருந்து கீழே குதித்துத் தன் இனிய உயிரை மாய்த்துக் கொண்டார்!

ஜப்பானில் 53 வாணிபத்துறை அணுமின் நிலையங்கள் இயங்கி தேசத்தின் 34% மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன. அவை அனைத்தும் அழுத்த எளியநீர் அணு உலைகள் [Pressurized Light Water Reactors]. 1960 ஆண்டு முதல் ஜப்பான் வேகப் பெருக்கி அணு உலைகளை ஆக்க ஆராய்ச்சி செய்து வருகிறது. மஞ்சு வேகப் பெருக்கி ஜப்பானின் முதல் முன்னோடி அணுமின் உலை [Prototype Fast Breeder Reactor]! ஆரம்பத்திலிருந்தே ஜப்பான் வேகப் பெருக்கி அணு உலையில் ஸோடியக் கசிவு ஏற்பட்டு விபத்து உண்டானால் எப்படி அபாயத்தைக் கையாள்வது என்பது ஆழமாகச் சிந்திக்கப் பட்டு பாதுகாப்பு முறைகள் சரியாக வகுக்கப்பட வில்லை!

மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலையின் விபரங்கள்

மஞ்சு முன்னோடி அணுமின் நிலையம் டோக்கியோவிலிருந்து 210 மைல் மேற்கே சுருகா [Tsuruga] என்னும் இடத்தில் அமைக்கப் பட்டுள்ளது. அணு உலை 1983 இல் அனுமதி பெற்று, 1985 முதல் கட்ட ஆரம்பிக்கப் பட்டு 1995 ஆகஸ்டு முதல் இயங்க ஆரம்பித்தது. அதன் மின்னாற்றல் 280 MWe [714 MWt Thermal Power]. பயன்படும் அணுஎரு: புளுடோனியம், யுரேனியம் கலப்பு ஆக்ஸைடு [Plutonium-Uranium Mixed Oxide (MOX)] 5.9 டன். இயற்கை யுரேனிய உலோகக் கவசம் [Natural Uranium Metal Blanket]: 17.5 டன். அணுக் கலனின் வடிவம் 6 அடி விட்டம், 3 அடி உயரம். உலைக் கலன் கொள்ளளவு 2340 லிட்டர். அணு உலை எருவிலிருந்து உண்டாகும் வெப்பத்தைக் கடத்தி நீராவியாக்க தனித்தனியே மூன்று சுற்று ஏற்பாடுகள் அமைப்பாடாகி யுள்ளன.

முதல் வெப்பக் கடத்திச் சுற்றும், இரண்டாம் வெப்பக் கடத்திச் சுற்றும் ஸோடியத் திரவத்தால் செயல்படுபவை. மூன்றாம் சுற்று நீரால் இயங்குவது. சராசரி 1 டன் அணு எருவின் ஈனுசக்தி: 80,000 மெகாவாட்நாள் [Fuel Burnup: 80,000 MWdays/ton]. அதாவது 714 MWt ஆற்றல் உற்பத்தி செய்யும் மஞ்சு நிலையம் 1 டன் எருவை 80,000 MWdays/714 =112 நாட்கள் வரைத் தீர்த்துக் கொள்ளும்!

புளுடோனியம் பெருகும் பின்னம்: 1.2 [Breeding Ratio: 1.2]. எரிகோல்கள்: உட்புறம் 108, புளுடோனியம் செறிவு 16%. எரிகோல்கள்: வெளிப்புறம் 90, புளுடோனியம் செறிவு 21%. யுரேனியக் கவசக் கோல்கள் 172.

முதல் சுற்றில் அணு உலையில் நுழையும் ஸோடிய திரவத்தின் உஷ்ணம் 397 டிகிரி C [745 F] வெளியேறும் போது 529 டிகிரி C [985 F] அதிக மாகிறது. இரண்டாவது சுற்றில் போய்வரும் ஸோடியம் 325 டிகிரி C [620 F] இல் வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நுழைந்து வெளியேறும் போது 505 டிகிரி C [940 F] இல் உஷ்ணம் ஏறுகிறது. மூன்றாவது சுற்று நீர் நுழைவு உஷ்ணம்: 240 டிகிரி C [465 F], வெளிவரும் நீராவியின் உஷ்ணம்: 369 டிகிரி C [695 F]. மஞ்சு நிலையத்தின் ‘உஷ்ண ஏற்றியில் ‘ [Superhearter] நீராவியின் உஷ்ணம் 397 டிகிரி C யிலிருந்து 487 டிகிரி C [745-910 F] அளவுக்கு அதிகமாகிறது.

வேகப் பெருக்கி அணுமின் உலையில் எப்படி ஸோடியம் கசிந்தது ?

மஞ்சு வேகப் பெருக்கி 1994 ஏப்ரலில் முதல் பூரணத் தொடரிக்கம் [First Criticality] அடைந்தது. 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டில் மின்சாரம் பரிமாற ஆரம்பித்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு டிசம்பரில் தீவிர ஸோடிய திரவக் கசிவு இரண்டாம் வெப்பக் கடத்திச் சுற்றியில் உண்டானது. டிசம்பர் 8 ஆம் தேதி விபத்தின் போது மஞ்சு நிலையம் 40% [110 MWe] மின்னாற்றலில் இயங்கிக் கொண்டிருந்தது. இரவு 7:47 மணிக்குத் தீ எச்சரிக்கை மணி அலறியதும், ஆட்சி அறை இயக்குநருக்கு ஸோடியக் கசிவு ஏற்பட்டது முதலில் தெரியாது.

உடனே கவச அணிகளை மாட்டிக் கொண்டு, இயக்குநர் சோதித்ததில் இரண்டாம் வெப்ப நீக்கி அறையில் [Secondary Heat Exchanger Room] பெரும் புகை மூட்டமுடன் தீப்பற்றி எழுந்துள்ளதைக் கண்டார்கள்! அடுத்து 9:20 P.M. அணு உலை மெதுவாக நிறுத்தம் செய்யப்பட்டு, மேலும் கசிவைக் குறைக்க 80 டன் ஸோடியம் இரண்டாம் சுற்றிலிருந்து நீக்கப் பட்டது!

தீயணைப்புச் செய்தபின், உளவு செய்ததில் ஸோடிய திரவத்தின் உஷ்ணத்தைக் காட்டும் கருவி ஒன்று இணைக்கப் பட்ட சிறிய பைப் உடைந்து ஸோடியம் வெளியேறி யுள்ளது தெரிய வந்தது! அதே பைப்பில் முன்பு 1991 இல் ஒரு முறைப் பழுது ஏற்பட்டு, அது 20 அங்குல பிரதமப் பைப்பில் வெல்டிங் செய்யப் பட்டுச் செப்பனிடப் பட்டது! அந்த பழுதான துண்டுப் பைப்புதான் 5 டன் ஸோடிய திரவக் கசிவுக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டது!

இரண்டாம் சுற்று வெப்ப நீக்கியில் ஸோடியக் கசிவின் அறிகுறி உஷ்ணம் மிகையானதால் தெரிய வந்தது! அடுத்து உடனே தீ எழுச்சி எச்சரிக்கை மணி 7:47 P.M. அலறியது! ஆனால் கசிவு ஏற்பட்டு ஒரு நிமிடம் கழித்துத்தான் ‘ஸோடியக் கசிவு ‘ எச்சரிக்கை மணி அடித்தது! ஆயினும் அறையில் நிரம்பி யுள்ள புகை மூட்டத்தால், ஸோடியந்தான் கசிந்துள்ளது என்று தெரிந்து கொள்ள இயக்குநருக்கு 12 நிமிடங்கள் ஆயின! நிலையம் பரிமாறிக் கொண்டிருந்த 112 MWe மின்னாற்றலை இரவு 8:00 மணிக்குப் படிப்படியாகக் கையாட்சி முறையில் குறைக்கத் துவங்கி, 80 நிமிடங்கள் கடந்து 9:20 மணிக்குத்தான் அணு உலை நிறுத்தமானது! அது மனிதர் செய்த மாபெரும் தவறு! தீப்பற்றிய விபரம் தெரிந்தவுடன், அணு உலை உடனே நிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.

அடுத்து இயக்குநர் கவச உடுப்புகளை அணிந்து தீ விளைவுச் சிதைவுகளைக் காட்சிப் படமாக [Video Pictures] எடுத்து மேலதிகாரிகளுக்கு அனுப்பினார்கள். காட்சிப் படம் எடுத்த குழுவினர் உளவின் போது கண்ட சில சிதைவுக் காட்சிகள்:

1.  ஸோடியம் ஆக்ஸைடு, ஸோடியம் ஹைடிராக்ஸைடு [Sodium Oxide, Sodium Hydroxide] தூள்கள் பழுதாகி உடைந்த இடங்களில் தொத்திக் கொண்டிருந்தன. அவை 20 அங்குல பிரதமப் பைப் நீளத்திலும் பல இடங்களில் ஒட்டிக் கொண்டிருந்தன! அதாவது ஸோடியம் கசிந்ததும் முதலில் ஆக்ஸிஜனுடன் மூர்க்கமான வெடியுடன் தீப்பற்றி அருகில் இருந்த வெப்ப நீக்கிச் சாதனங்கள் எரிந்து உருகிப் போய், அடுத்துப் பயங்கர ஸோடியம்-நீர் இயக்கமும் துவங்கிப் பல மணி நேரங்கள் தீ எரிந்து சிதைத்து உள்ளது தெரிந்தது!

2.  இரும்புச் சாதனங்கள், காற்றோட்டப் போக்கிகள் [Ventilation Ducts], காங்கிரீட் தளம் ஆகியவை ஸோடியத் தீயில் வெந்து உருகி, உஷ்ணம் 1500 டிகிரி C [2700 F] ஏறி யிருக்கலாம் என்று அறிய வந்தது!

3.  எதிர்பாராத ஸோடிய இயக்கங்களிலே மிகக் கொடிய ‘துண்டிக்கும் நெருப்பு ‘ [Spay Fire] அறையில் உண்டாகி யிருப்பது கண்டு பிடிக்கப் பட்டது!

அணுமின் உலை விபத்தில் மனிதத் தவறுகள், பழுதுற்ற கருவிகள்

1995 டிசம்பர் 26 ஆம் தேதி ஃபுகுயி ஆட்சி அரசு [Fukui Prefectural Govt] உளவு செய்து வெளியிட்ட அறிக்கையில் ‘மஞ்சு வேகப் பெருக்கியில் போதிய எச்சரிக்கைக் கருவிகளும், தேவையான இயக்க முறை அறிவிப்புகளும் ஒழுங்காக இல்லை என்று குற்றம் சாட்டி பின்வரும் பழுதுகள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளது.

1.  ஸோடியம் கசிவதை உளவிக் கண்டு பிடிக்கும் கருவிகள் எதிர்பார்த்தவாறு ஆட்சி அரங்கத்தில் அலறி [Control Room Panels] முன் எச்சரிக்கை செய்ய வில்லை!

2. இரண்டாம் சுற்றுச் ஸோடிய திரவத்தில் 600 டிகிரி C [1110 F] உஷ்ணம் ஏறி, உஷ்ண மானி உடைந்து விட்டதால் உச்சமான உஷ்ண நிலை அறிய முடியாது போனது! ஸோடிய திரவத்தின் உஷ்ணத்தை அறிய வேறு கருவிகளோ அன்றி உதவிச் சாதனங்களோ எதுவும் ஆட்சி அரங்கத்தில் அமைக்கப்பட வில்லை.

3.  ஸோடியத் தீ துவங்கி 1.5 மணி நேரங் கழித்துதான், அணு உலைக் கையாட்சி முறையால் நிறுத்தமானது! அவ்விதம் தாமதமாக அணு உலை நிறுத்தமானது, இயக்க நெறிகளுக்கு முரண்பாடானது! ஸோடியம் கசிந்தால், அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று ‘இயக்கமுறை நூலில் ‘ [Operation Manual] காணப்படுகிறது.

4.  ஸோடியத் தீயை அணைப்பதற்குப் போதிய பயிற்சி இல்லாத தீயணைப்புப் படையினர் இரவில் பணி புரிந்ததால், நிலையத்தில் தீயை அணைக்க அதிக நேரமானது!

5.  அடுத்த நாள் நிலையத்தின் சிதைவை நேராகக் காணச் சென்ற PNC மேலதிகாரிகள் [Power Reactor & Nuclear Fuel Corporation Team] விபத்து நேர்ந்த அறையைக் காட்சிப் படம் [Video Pictures] எடுத்தனர். அக்காட்சிப் படங்கள் முழுவதும், பின்னால் பொது மக்களுக்குக் காட்டப்பட வில்லை. இரண்டு நாட்கள் கழித்துத் தனிப்பட்ட ‘உளவு ஆய்வுக் குழு ‘ [Prefectural Survey Team] சென்று எடுத்த முழுப் படங்கள்தான் பொது மக்களுக்குக் காட்டப் பட்டு உண்மை தெரிய வந்தது.

6.  ஸோடியத் தீ பல மணி நேரங்கள் எரிந்ததால், மெய்யாக இயக்குநர் மறுநாள் காலை [December 9] 6:00 மணிக்குத்தான் சிதைவான அறையை உளவிடச் சென்றனர். ஆனால் PNC மேலதிகாரிகள் நிஜத்தை மறைத்துக் காலை 10:00 மணி என்று ஏனோ ஒரு பொய்த் தகவலைக் கூறினர்.

7.  PNC மேலதிகாரிகள் விபத்து நடந்து ஒரு மணி நேரம் தாமதித்தே நகர, மாவட்ட, மாநில அதிகாரிகளுக்கு அறிவித்தனர்! அந்த புறக்கணிப்புச் செயல் மன்னிக்க முடியாத ஓர் மனிதத் தவறு என்று பின்னால் PNC குற்றம் சாட்டப் பட்டது!

8.  தீ எழுச்சி ஆட்சி அரங்கில் எச்சரிக்கப் பட்டதும், நிலையத்தின் வெப்பத் தணிப்புச் சாதனங்கள், குளிர்க் காற்றோட்ட ஏற்பாடுகள் [Air Conditioning & Ventilation Systems] ஆகிய இரண்டையும் உடனே இயக்குநர் நிறுத்த வில்லை. அதனால் ஸோடியத் தீ பலமடங்கு பரவி இருக்கலாமோ என்ற ஓர் ஐயப்பாடு பின்னால் எழுந்தது!

9. ஸோடியத்தின் கொள்ளளவைக் [Volume] காட்டும் கருவிகள், எச்சரிக்கை ஒலி அரங்கில் அமைக்கப் படாமல், வேறோர் அறையில் வைக்கப் பட்டிருந்தன. இரண்டும் ஒரே இடத்தில் இருந்திருந்தால், இயக்குநர் ஸோடியக் கசிவை உடனே தெரிந்து கொண்டு, கசிவைக் கட்டுப்படுத்தி இருப்பர்.

10. ஸோடியத் திரவம் பைப்புகளில் சுற்றி வரும் அறைகளில், கசிவைக் கண்காணிக்க முக்கியமாகத் தொலைக் காட்சிக் காமிராக்கள் எவையும் அமைக்கப்பட வில்லை!

11. நிலைய நிறுவகத்தின் போது, காற்றோட்டப் போக்கிகள் [Ventilation Ducts], அபாயமான ஸோடியப் பைப்புகளுக்குக் கீழ் அமைக்கப் பட்டது முறையான டிசைன் ஆகாது. தீப்பற்றி எரியும் போது, காற்றோட்ட போக்கிகள் உருகி, வெளியேறும் காற்று ஸோடியத் தீ பெருகுவதற்கு உதவி செய்தது!

12. ஸோடியம் கசிந்தால் உடனே அணு உலையை நிறுத்த, இயக்கமுறை அறிவிப்பு நூல் [Instruction Manual] இயக்குநருக்குப் போதிய அதிகாரம் அளிக்க வில்லை.


விபத்துக்குப் பிறகு நீதி மன்றத் தீர்ப்பும், பொது மக்களின் எதிர்ப்பும்

மஞ்சு வேகப் பெருக்கியில் ஸோடியம் தீப் பற்றியது, புளுடோனிய அணு உலைகளில் ஜப்பான் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் இழக்க வைத்தது! புளுடோனியம் எருவாகவும், ஸோடிய திரவம் வெப்பக் கடத்தியாகவும் பயன்படும் எந்த அணு உலையும் ஜப்பானில் உருவெடுக்கக் கூடாது என்று எதிர்த்துப் பொது மக்கள் ஒன்று திரண்டார்கள்! 1995 டிசம்பர் 12 ஆம் தேதி ஆளுநர், டுகியோ குரிடா [Governor, Tukio Kurita] ஜப்பான் பிரதம மந்திரிக்கு, மஞ்சு அணுமின் நிலையத்தில் புரியும் ஆராய்ச்சிகள் அனைத்தையும் உடனே நிறுத்தும்படி ஓர் எதிர்ப்புக் கடிதத்தை அழுத்த மாக எழுதினார். ஜப்பானில் பொது மக்களிடையே அணுமின் சக்தி நிலைய எதிர்ப்புகள் அதிகமாயின! டிசம்பர் 17 ஆம் தேதி 600 எதிர்ப்பாளிகள் அணு உலை மறுப்பு அறிக்கை களைத் தூக்கிக் கொண்டு, துருகா [Turuga] என்னும் இடத்தில் திரண்டு, பெருத்த ஆரவாரம் செய்தார்கள்!

விபத்தை உளவு செய்ய வந்த ஆய்வாளர்களுக்கு மஞ்சு உரிமையாளர்கள் பொய்த் தகவல்களை அளித்து, சிதைவின் தீவிரத்தை மூடி மறைக்க முற்பட்டார்கள்! மேலும் மஞ்சு அணு உலையைச் செப்பனிடப்பட்டு 2005 இல் அது மீண்டும் இயங்க வேண்டு மெனத் திட்ட மிட்டார்கள்! சிதைந்து போன மஞ்சு நிலையத்தை மீண்டும் செம்மைப் படுத்துவதாய் PNC அதிகாரிகள் கொண்டு வந்த திட்டத்தை, மார்ச் 2000 இல் மாவட்ட நீதி மன்றம் ஏற்று அங்கீகரித்தது. ஆனால் அதற்குப் பிறகு எதிர்ப்பாளிகள் மறுபடியும் மனுப் போட்டு, நகோயா உயர்நீதி மன்ற நீதிபதி ‘எதிர்பார்க்கும் அபாயங்கள் நிச்சயமாய் நிகழ வாய்ப்புள்ளதால், மஞ்சு அணுமின் நிலையம் மீண்டும் இயங்கக் கூடாது ‘ என்று தடை உத்தரவைப் போட்டு மஞ்சு வேகப் பெருக்கி நிரந்தரமாக மூடப்பட்டது!

ஜப்பானில் வேகப் பெருக்கி அணு உலைகளின் எதிர்காலம்

மஞ்சு வேகப் பெருக்கி உலகின் இரண்டாவது பெரிய நவீன அணுமின் உலையாகக் கருதப்படுகிறது! அதன் இரண்டாம் சுற்றிலுள்ள ஸோடியத் திரவம் உடைந்த பைப்பின் வழியாகக் கசிந்து, வெடிப்புடன் வெளியேறினாலும் அணு உலைக்கோ, அன்றி அணு எருக்களுக்கோ எந்த விதப் பாதிப்பும் இல்லாமல் போனது, வேகப் பெருக்கியின் மூல டிசைன் உயர்த்தியைக் காட்டுகிறது! அணு உலை பாதுகாப்பாய் நிறுத்தம் செய்யப் பட்டதால், கதிர்வீச்சுத் தாக்கல் உள்ளே வேலை செய்த பணியாளிகளுக்கும், வெளியே வாழ்ந்த பொது நபர்களுக்கும் நேர வில்லை!

ஆனால் ஸோடியக் கசிவு விபத்து அணு உலை வெப்பத்தைத் தணிக்கும் முதல் சுற்று ஏற்பாட்டில் நேர்ந்திருந்தால், அணுக்கலன் எருக்கோல்கள் பல உருகிக் கதிரியக்கம் உள்ளேயும், வெளியேயும் பரவ வாய்ப்புக்கள் உண்டாகலாம்!

தற்காலியமாக நிறுத்தம் செய்யப் பட்டுள்ள மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் நிலையம் மறுபடியும் மாறுபாடுகள் செய்யப் பட்டு 2005 ஆண்டில் புத்துயிர் பெற்று எழலாம் என்ற ஒரு வதந்தியும் நிலவி வருகிறது!

2002 ஆண்டுத் தகவல் படி, ஜப்பான் நாட்டின் 34% மின்னாற்றலை 53 வெப்ப அணுமின் உலைகள் [Thermal Power Reactors] பரிமாறி வருகின்றன. அவற்றைப் போல் இன்னும் பல அணுமின் நிலையங்கள் நிறுவகமாகி, 2010 ஆண்டுக்குள் நாட்டின் 42% மின்னாற் றலை உற்பத்தி செய்யத் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன. மஞ்சு அணு உலையில் ஸோடியத் தீ விபத்தும், டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற் கூடத்தில் 1999 செப்டம்பர் 30 இல் ஏற்பட்ட பூரணத் தொடரியக்க விபத்தும் ஜப்பான் அணுத்துறைப் பேராசைத் திட்டங்களின் தலைவிதியை மாற்றி, மக்களிடையே எதிர்கால அணுமின் சக்தித் திட்டங்களில் பெருத்த ஐயப்பாடுகளைக் கிளப்பி யுள்ளன! அடுத்து ஜப்பானில் கட்டப் போவதாய் இருக்கும் 600 MWe [1500 MWt] மின்னாற்றல் வாணிப வேகப் பெருக்கி அணுமின் நிலையம் நிச்சயம் வரப் போவதில்லை!

ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணு உலை புத்துயிர் பெற்றது

பதினான்கு ஆண்டுகள் முடக்கமாகி புதிய மாறுதல் சாதனங்கள் இணைக்கப் பட்டு மஞ்சு வேகப் பெருக்கி அணு உலை 2010 மே மாதம் 8 ஆம் தேதி மீண்டும் துவங்க ஆரம்பித்தது.  அது தொடர்ந்து 2013 ஆண்டு வரை சோதனை முற்பாட்டில் இயங்கி மின்சாரம் அளித்து வரும். மஞ்சு வேகப் பெருக்கி ஓய்வாகி ஜப்பானில் ஒரு பூத வேகப் பெருக்கி அணு உலை மாடல் 2025 ஆண்டில் நிறுவப் போவதாகப் புதுத் திட்டம் ஒன்று உள்ளது.

இந்திரா காந்தி அணுத்துறை ஆய்வுத் தளத்தில் வேகப் பெருக்கி அணு உலைகள்

பாரதத்தின் கல்பாக்க இந்திரா காந்தி அணுத்துறை ஆய்வுக் கூடத்தில் முதலாகத் தோன்றிய ஆய்வு வேகப் பெருக்கி பல பதுகாப்புக் காரணங்களால் 10 MWt ஆற்றலாகக் குன்றி 25% தகுதிநிலையில் இயங்கி வருகிறது! அதன் பிரச்சனைகளைத் தீர்த்து, முழு ஆற்றலில் அதை இயக்க முற்படுவதற்கு முன்பே, அடுத்து முன்னோடி பூத வேகப் பெருக்கி 1240 MWt [500 MWe] ஒன்று டிசைன் செய்யப் பட்டு கல்பாக்கத்தில் உருவாகி வருகிறது! உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் முதல் பிரச்சனை ஸோடியக் கசிவுகளே! காற்றையும், நீரையும் நெருங்கினால் மூர்க்க வெடியுடன் தீப்பற்றும் ஸோடியக் கசிவுகளை எப்படிக் கையாள்வது என்பது, கல்பாக்க அணுவியல் நிபுணர்களுக்கும் தீராத ஒரு போராட்டமாக இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்!

***********************

தகவல்:

1.  Prototype Fast Breeder Reactor Monju, Japan http://www.jnc.go.jp/jncweb/

2.  Fast Breeder Reactors of the World.

3.  High Court Overturns Decision, Nullifies Approval of Fast Breeder Reactor Monju [Feb 7, 2003]

4.  Monju Campaign By: Green Action http://www.greenaction-japan.org/

5.  Japan puts FBR reactor program on back burner

6.  The Serious Accident of ‘Monju ‘ [Dec 25, 1995]

7.  Japan ‘s Nuclear Safety Review Process Needs Overhaul

8.  Monju Reactor Shutdown after Sodium Leak [December 15, 1995]

9.  The Monju Accident Fall-out [Jan 14, 1996]

10.  Plutonium Production as Energy Source By Arjun Makhijani  (Feb 1997)

10. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

11.  Safeguarding Breeder Reactors By Jeffrey  (January 24, 2006)

12.  Fast Breeder Safety &  Problems  By : Charles Barton  (May 13, 2009)

13.  Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

14.  The Japan Times – Troubled Monju Reactor Revived in Fukui, Japan By Eric Johnston (May 7, 2010)

15.  Monju Fast Breeder Restarts after 14 years of Suspension  (May 12, 2010)

************************

S. Jayabarathan  (jayabarat@tnt21.com)   May 7, 2011

http:jayabarathan.wordpress.com/