யாரந்த நீதிபதி ?

சி. ஜெயபாரதன், கனடா

cover-saddams-death.jpg

எவன் உங்களில் தூயவன்,
அவன் மட்டும்
முன்வந்து
இந்தக் கல்லை எடுத்து
வேசியின் மீது
வீசட்டும் என்று
ஏசு பெருமான்
வேண்டிக் கொண்டார்!
வெள்ளை மாளிகை வேந்தர்
பேரழிவுப் போராயுதம்
வேராக உருவாக்கி விழுதாக்கி
விற்றுப் பணமாக்கி
நேராகப் பிணமாக்கும்
பேராற்றல் பிதா,
ஆயிரம், ஆயிரம்
பிரளயக் கணை பெருக்கி
பிறருக்குப்
பாதை காட்டிய
பார்த்த சாரதி!
ஹிரோஷிமா, நாகசாகி மீது
கோரக்
குண்டுகள் வீசியப்
பூதப் பேரரசு!
துச்சக் காசுக்கு
நச்சு வாயுப்
பிச்சு வாக்களை
சதாமுக்கு விற்ற நண்பன்!
வியட்நாம் மாந்தர் மேல்
விஷ வாயு
வில்லைகளை
விமானத்தின் மூலம் கொட்டிய
விடுதலைக் காப்பாளிகள்!
இந்த அரக்க வம்சம்
எப்படிக்
கட்டளை இடலாம்,
கயிற்றைக் கொடுத்துச்
சதாம்
கழுத்தை நசுக்க?

***********

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

15 thoughts on “யாரந்த நீதிபதி ?”

  1. அன்புள்ள ஜெயபாரதன்,

    தமிழ்மணத்தில் உங்களைக் காண மகிழ்ச்சி! தமிழ்மணத்தில் அன்றாடம் உலவும் ஏராளமான தமிழ்ப் பதிவர்களும் வாசிப்பாளர்களும் உங்கள் ஆக்கங்களாலும் அறிவியல் கட்டுரைகளாலும் பயனடையும் நாள் இதோ விரைவில்!

    அடுத்த கட்டமாக, உங்கள் வலைப்பதிவுகள் ஒவ்வொன்றும் புதிய இடுகைகள் பட்டியலில் வரச் செய்யலாம். ஒவ்வொரு பதிவையும் எழுதியபின்னும், தமிழ்மணம் முகப்பில் சிவப்பு நிறத்தில் தெரியும் “யு.ஆர்.எல். இடுக” என்பதன் அருகில் உள்ள பெட்டியில் உங்கள் வலைப்பூ முகவரியான https://jayabarathan.wordpress.com என்பதை இட்டு “அளி” என்ற பொத்தானை அழுத்தி ஒவ்வொரு இடுகையையும் வகைப்படுத்தினால் (category தெரிவு செய்தால்) இந்தக் கட்டம் வெற்றி பெறும். அனைவரையும் சென்றடையும்.

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    சேதுக்கரசி

  2. வலைப்பதிவுலகிற்கு வந்தமைக்கு வரவேற்புகள்!

    தெளிவான கேள்வி! என்றாவது ஒரு நாள் பதில் சொல்லித்தானாக வேண்டும்!
    அதுவரை உலகத்தோரை விட்டுவைக்க எண்ணமிருப்பதாக தெரியவில்லை!

  3. அன்பு ஜயபரதன் வலைப்பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.சில நாடுகள் தம்மிடம் இருக்கும் அழுக்கைத் துடைக்காமல் மற்றவர்களின் அழுக்கைக் கண்டு தண்டனையும் கொடுக்கிறார்கள் மனது
    வருந்துகிறது அன்புடன் விசாலம்

  4. I really enjoyed reading the history of personalities and their unique contributions. I have known the author for a long time. He has proved that creativity has no limits. V.P.Velu

  5. I was very happy to search out this web-site.I wanted to thanks in your time for this glorious learn!! I definitely having fun with every little bit of it and I have you bookmarked to check out new stuff you weblog post.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.