
மூலம் : வால்ட் விட்மன்
(1819-1892)
(புல்லின் இலைகள்)
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
ஓ காப்டன் ! ஓ என் காப்டன் !
ஓய்ந்தது நம் பயங்கரப் பயணம் !
கப்பல் தளங்கள் தப்பின சூறாவளி !
தேடிய வெகுமதி கிடைத்தது நமக்கு !
அருகே துறைமுகம், ஆலய மணி ஓசை !
வெற்றிக் கொண்டாட்டம் மக்களிடையே !
ஓ என் நெஞ்சே ! ஓ என் நெஞ்சே !
ஓடுது செந்நிற இரத்தத் துளிகள் !
கப்பல் தளத்தில் கவிழ்ந்து கிடக்கிறார்
காப்டன் மரித்து சில்லிட்டுப் போய் !
ஓ காப்டன் ! ஓ என் காப்டன் !
எழுந்து நின்று மணி ஓசை கேட்பாய் !
எழுவாய் ! கொடி பறக்குது உனக்காய் !
சங்க நாதம் முழங்குது உனக்காய் !
தோரணம், மலர் வளையம் உனக்காய் !
காத்திருக்குது கூட்டம் கடற் கரையில் !
அழைப்பது மக்கள் உன்னைத் தான் !
ஆர்வமாய்த் திரும்பும் அவரது முகங்கள் !
உன் தலைக் கடியே என்னிரு கைகள் !
பாரீர் காப்டன் ! என்னரும் தந்தையே !
கனவு போல் காட்சி கப்பல் தளத்தில் !
சில்லிட்டுக் கிடக்குதும் சிதைந்த உடல் !
மௌன மாகி விட்டார் என் காப்டன் !
வெளுத்த உதடுகள் ! முடங்கிய உடல் !
என் கைத் தொடுகை பிதா உணர வில்லை !
இதயத் துடிப்பில்லை ! எழுதிய உயில் இல்லை !
கட்டினார் நங்கூரம் கப்பலுக்கு ! முடிந்த
பயங்கரப் பயணத்தில் குறிக்கோள் வென்றது !
கொண்டாடும் கடற்கரை ! ஆலய மணி ஓசை !
தடுமாற்றம், துக்கம் என் கப்பல் தளத்திலே !
சில்லிட்டு கிடக்கிறார் வீழ்ந்தென் காப்டன்
செத்த உடலாய்க் கப்பல் தளத்திலே !
++++++++++

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (June 5, 2018) [R-2]


Published by
S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
You made certain good points there. I did a search on the matter and found a good number of people will consent with your blog.
I was examining some of your content on this internet site and I conceive this website is really instructive! Retain putting up.
jayasree shanker
12:25 AM (12 hours ago)
Reply
ஒவ்வொரு வரியும் பாசத்தால் சோகத்தில் இன்னொரு வரியைத் தாங்கிப் பிடித்து இழுத்து வந்து சோகக் காவியத்தை மேடையில் நிமிர்ந்து நிற்க வைத்திருக்க்றது.
பாராட்டுக்கள் .
என்றும் அன்புடன்,
ஜெயஸ்ரீ ஷங்கர்.
தேமொழி via googlegroups.com
2:02 AM (10 hours ago)
Reply
சிறுவயதில் ஆங்கிலத்தில் படித்த கவிதை. உருவகத்திற்காகவும், Elegy என்றும் போற்றப்பட்டு சொல்லிக் கொடுக்கப்பட்ட கவிதையை தமிழில் உங்கள் மூலம் பார்ப்பதில் மகிழ்ச்சி.
எளிமையான வரிகள் அதே உணர்வுகளை அருமையாகப் பிரதிபலிக்கின்றன ஐயா.
உமர் கய்யாமின் வரிகளை இனிமையாக மொழி பெயர்த்த (வெய்யில் கேற்ற நிழலுண்டு; வீசும் தென்றல் காற்றுண்டு) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வரிகளுக்கு இணையானது.
நன்றி
அன்புடன்
தேமொழி
Vannan
2:58 AM (10 hours ago)
Reply to all
நேருவுக்கு பிடித்த கவிஞர் வாழ்த்து விட்மன் .உருக்கமான கவிதைகள் நன்றி.
வண்ணன்