China has successfully landed a rover on Mars, joining the U.S. and the former Soviet Union as the only other countries to land on the red planet. CBSN contributor Isaac Stone Fish, the founder of Strategy Risks, spoke with Lana Zak about what this means for the future of space exploration.
Becoming the third country to land a spacecraft on Mars, China’s Zhurong rover has made history where attempts by other countries have failed.
The success of the Tianwen-1 mission makes China the third nation after the U.S. and Soviet Union to land on the red planet
சைனாவின் இரண்டாம் விண்ணுளவி சந்திரனைச் சுற்றியது ! மூன்றாம் விண்கப்பல் முதலாக நிலவில் இறக்கிய தளவுளவி பின்புறம் சோதிக்கிறது ! நகர்ந்த தளவூர்தி தகவல் அனுப்புது. புதிய விண்வெளி நிலையம் கட்டுது. சைனாவின் இரு தீரர் அண்டவெளிப் பயணம் செய்தார். முதன்முதலாய் செவ்வாய்க் கோளில் விண்சிமிழ் இறக்கி தளவூர்தி தவழ்ந்து தகவல் அனுப்பும் தரைப்படம் எடுத்து ! அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் போல் விண்சிமிழில் ஏறி வெண்ணிலவில் தடம் வைக்க பயிற்சிகள் நடக்கும் ! நிலவைச் சுற்றி வந்து மனிதரில்லா விண்சிமிழ் ஒன்று புவிக்கு மீண்டது . இன்னும் ஐந்தாறு ஆண்டுகளில் சாதனை யாகச் சைனத் தீரர் பாதம் பதிப்பர் நிலவின் களத்திலே நீல் ஆர்ம்ஸ் டிராங் போல !
++++++++++++++++++++
இரண்டு வாரத்தில் சைனா வெற்றிகரமாய்ச் செய்து காட்டிய விண்வெளி வரலாற்றுச் சாதனைகள்
2021 பிப்ரவரி மாதத்தில் செவ்வாய்க் கோள் ஈர்ப்புவலையில் சிக்கி, மே 14 இல் சைனாவின் முதல் தியான்வென் -1 விண்வெளிச்சிமிழ்ச் சுற்றி,[Tianwhen -1 Orbiter] பாதுகாப்பாகத் தளவூர்தி சுராங்கை [Zhurong Rover] இறக்கி இப்போது தகவல் படங்கள் அனுப்பியுள்ளது. இந்தச் சிமிழை சைனா 2020 ஜூலை 23 இல் ஏவியது. இந்த அரிய சாதனை புரிந்து, உலக வரலாற்றில் செவ்வாயில் தவழ்ந்த மூன்றாம் நாடாகச் சைனா பெயர் பெற்றது. ரஷ்யா, அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளே முதன்முதலாக இந்தச் சாதனைகளைக் செய்து காட்டியுள்ளன. சமீபத்தில் அமெரிக்க நாசா தனது செவ்வாய் 2020 “விடாமுயற்சி” [Perseverence] தளவூர்தி ஒன்றை செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி, அதிலிருந்த சிறு காற்றாடி ஊர்தி பறந்து காட்டியது. சைனாவின் நிலவுத் தளவுளவி [Lunar Rover] ஏற்கனவே இறங்கி வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது. சைன விண்வெளிப் பயண முயற்சிகளில் ரஷ்யாவின் தொழில் நுணுக்க உதவி காணப் படுகிறது.
செவ்வாய்க் கோளில் சைனாவின் தியாவென் தளவூர்தித் திட்டங்கள்
செவ்வாய்க் கோள் தளவியல், சூழ்வெளி அமைப்பு ஆய்வது
செவ்வாய்க் கோள் எரிமலை, பனிமேடு, துருவ ஆராய்ச்சி
செவ்வாய்க் கீழ்தள நீர்ப்பனி, நீரோட்ட நிலை அறிவது.
செவ்வாய் தனிம, உலோகவியல் இருப்புநிலை தெரிவது.
செவ்வாய்ப் பருவ நிலை, கால நிலை, சூழ்வாயு நிலை அறிதல்.
2030 ஆண்டுக்குள் செவ்வாய் மண் மாதிரி எடுத்து பூமிக்குக் கொண்டு வந்து சோதிப்பு.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
One thought on “சைனாவின் விண்சிமிழ் முதன்முதல் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாக இறக்கிய தளவூர்தி தவழத் துவங்குகிறது.”
One thought on “சைனாவின் விண்சிமிழ் முதன்முதல் செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாக இறக்கிய தளவூர்தி தவழத் துவங்குகிறது.”