மனிதா ! நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்
சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.
The New Shepard Rocket Lifts off the Launching Site near Van Horn, Texas, USA
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng [Nuclear], Canada
From left: Mark Bezos, Jeff Bezos, Oliver Daemen, Ms Wally Funk
2021 ஜூலை 20 ஆம் தேதி அமெரிக்கக் கோடீஸ்வரக் கோமான், அமேஸான் தொழில் அதிபர் : ஜெஃப்ரி பெஸாஸ் [Jeffry Bezos] முதன்முதல் தன்னுடன் மூன்று பொது நபரைச், சுய இயங்கு ராக்கெட் விண்சிமிழில் ஏற்றிக் கொண்டு, விண்வெளியில் 62 மைல் [100 கி.மீ] உயரம் ஏறி, பூஜிய ஈர்ப்பு [Zero Gravity] மிதப்பு நிலை உணர்ந்து, பாதுகாப்பாக மீண்டு, பூமியில் வந்திறங்கினர்.விண்வெளிச்சிமிழ், பூமியைச் சுற்றாது, உயரத்தை எட்டியதும் இறங்க ஆரம்பித்தது. அப்போது பளு தூக்கிய ராக்கெட் பிரிந்து, தானாக முன்குறித்த இடத்தில் செங்குத்தாகக் கீழே இறங்கியது.முன்பு இவ்வாறு இறங்கிய இந்த ராக்கெட், இப்போது மூன்றாம் தடவை மீண்டும் பயன்படுகிறது.
விண்வெளி விமானிகள் விண்சிமிழில் நுழைகிறார் The New Shepard Rocket Reaches The Zero Gravity Limit 62 miles (100 km) [The Karman Line]
The New Shepard booster performed an autonomous landing, the third consecutive landing for this booster.
ஜெஃரி பெஸாஸ் பயணத் தலைவர், வயது : 57 , சகோதரர் மார்க் பெஸாஸ் வயது :52 முன்னாள் நாசா விண்வெளி விமானி மிஸ் வாலி ஃபன்க் வயது : 82, வாலிபன் ஆலிவர் தேமன் வயது : 18. அந்த மூவரையும் தன்னுடன் சேர்த்து விண்சிமிழில் ஏற்றிக் கொண்டு, வான் ஹார்ன், டெக்ஸஸ் பாலைவனத்தில் [Van Horn, TX, USA] ஜூலை 20 ஆம் தேதி புதிய சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட், காலை 9 : 11 மணிக்கு ஏவப் பட்டது. எந்த சிக்கலும் நேராமல், ராக்கெட் செங்குத்தாக ஏறி, 250,000 அடி [75 km ] உயரத்தில் விண்சிமிழ் பிரிந்து, [கார்மன் எல்லை ] [Karman Line Zero Gravity Limit] 62 மைல் [100 கி.மீ.], பூஜிய ஈர்ப்பு [Zero Gravity] அரங்கில் சில நிமிடங்கள் உடல் மிதப்பு நிலையை விமானிகள் உணர்ந்தனர். பிறகுசுய இயங்கு ராக்கெட் தானாகக் குறிப்பிட்ட வட்டத்துள் கீழே இறங்கியது. விண்சிமிழ் பூமியைச் சுற்றுப் பாதையில் சுற்றாமல் புவிக்குப் பாராசூட் குடைகள் மூலம் மீண்டது. ராக்கெட் இறங்கிய தளத்துக்கு இரண்டு மைல் தூரத்தில் விண்சிமிழ் தானாக பாதுகாப்பாக நான்கு விமானிகளை இறக்கியது.வியக்கத் தக்க இந்த விண்வெளிக் காட்சி அனைத்தும் சுமார் 10 நிமிடங்கள்தான் நீடித்தன.
முதன்முதல் அப்பொல்லோ 11 ராக்கெட் 1969 ஜூலையில் நிலவை நோக்கிச் சென்று, நீல் ஆர்ம்ஸ்டிராங் சந்திரனில் கால் வைத்த நினைவு நாளில், ஜெஃரி பெஸாஸ் குழுவினர் நால்வர் 2021 ஜூலை 20 இல் பூஜிய ஈர்ப்பு விண்வெளி எல்லைக்குப் பயணம் செய்து பாதுகாப்பாக மீண்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
2 thoughts on “சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.”
2 thoughts on “சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட் விண்சிமிழில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் மிதந்த நான்கு விண்வெளித் தீரர்கள்.”