மெக்சிக்கோ தென்மேற்கு கடற்கரை அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம்.

https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us7000f93v/map

https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us7000f93v/executive

During the past 7 days, Mexico was shaken by 1 quake of magnitude 7.1, 3 quakes between 5.0 and 6.0, 44 quakes between 4.0 and 5.0, 172 quakes between 3.0 and 4.0, and 47 quakes between 2.0 and 3.0. There were also 50 quakes below magnitude 2.0 which people don’t normally feel.

Damages in Acapulco, Mexico September 7, 2021


Biggest quake: 7.1 quake North Pacific Ocean, 8 km south of Acapulco de Juarez, Guerrero, Mexico, Sep 7, 2021 8:47 pm (GMT -5) 4 days ago
Biggest quake today: 4.4 quake North Pacific Ocean, 156 km southwest of Mapastepec, Chiapas, Mexico, Sep 12, 2021 3:32 am (GMT -6) 2 hours 22 minutes ago

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

+++++++++++++++++

பூமகள் சற்று தோளசைத்தாள் !
தாமாக வீழ்ந்தன
மாளிகைகள் !
மாந்தர் மரித்தார்
சிதைவு களில்
சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் !
கடற்தட்டு
தடம்மாறிக் கால் உதைத்தால்
உடனே சுனாமி எழும் !
பூகம்ப நர்த்தனம் நகர்த்திடும்
பூகோள அச்சை !
காலம் மாறும் ! பருவம் மாறும் !
நாளின் நீட்சி குன்றும் !
கனல் திரவம் அழுத்தமாகிக்
குப்பெனப் பொங்கும் எரிமலைகள் !
சூழ்வெளி
பாழாய்ப் போக
ஆழ்ந்த பூமிக் குள்ளும்
ஊழல் தட்டுகள்
சூழ்ந்துள்ள தப்பா !
எங்கெங்கு வாழினும்
இன்ன லப்பா !
ஏழு பிறப்பிலும் மானிடர்க்கு
தொல்லை யப்பா !
ஊழிக் கூத்தின்
பிரளய அழிவு அடுத்தடுத்து
அரங்கே றுதப்பா !
முடுக்கி விட்ட  பூகோளம்
நடுக்கம் தரும் !
ஊழியின் மேளம் !

+++++++++++++++++++

2021 செப்டம்பர் 7 இல் மெக்சிக்கோ நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம் பேரளவு கோரச் சிதைவுகளை உண்டாக்க வில்லை. அது நடுமைத் தர விளைவுகள் தரும் ஒரு பூகம்பமாய்க் கருதப்படுகிறது. அந்த நில நடுக்கம் அமெரிக்கத் தட்டுகளும், கோகாஸ் தட்டுகளும், [American and Cocos Tectonic Plates] ஆண்டுக்கு 65 மில்லி மீடர் நகர்ச்சி வீதத்தில் மோதியதால் உண்டானது.

கடந்த நூறாண்டில் மெக்சிக்கோ தென்மேற்குப் பகுதியில் பல்வேறு ஆற்றல் பூகம்பங்கள் நேர்ந்துள்ளன. அவற்றில் 17 எண்ணிக்கை M 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆற்றல் உள்ளவை.

2017 Central Mexico earthquake in México City.webm

 https://youtu.be/Z8JF2PthRkg

2021 செப்டம்பர் 7

https://www.msn.com/en-ca/news/other/dogs-used-in-quake-search-in-mexico-city/vp-AAsmEfJ

2017 செப்டம்பர் மாதத்தில் மெக்சிக்கோ நாட்டில் அடுத்தடுத்து இருபெரும் பூகம்பங்கள் நேர்ந்து, மெக்சிக்கோ நகரிலும், சுற்றியுள்ள மற்ற நகரங்களில் உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் பேரளவில் விளைந்துள்ளன.  முதலில் செப்டம்பர் 7 ஆம் தேதியில் 8.1 M அளவு அசுரப் பூகம்பம் சியாபாஸ் கடற் பகுதியைத் தாக்கியுள்ளது.  100 பேர் மாண்டனர்.  பன்மாடி அடுக்கு மாளிகைகள், வீடுகள் பற்பல நொறுங்கித் துண்டாக்கப் பட்டன. அது நேர்ந்து இரண்டு வாரத்திற்குள் [செப்டம்பர் 19 இல்] 400 மைல்  தூரத்தில் [650 கி.மீ.] 7.1 M அளவில் அடுத்த பூகம்பம் தாக்கி 342 பேர் மாண்டனர். 6000 பேர் காயமுற்றனர்.

1985 ஆண்டில் மெக்சிக்கோவில் முன்பு நேர்ந்த பூதப்பெரும் பூகம்பத்தில் 10,000 பேர் உயிரிழந்தார்.  அது முதல் மெக்சிக்கோ அரசாங்கம் பூகம்ப எச்சரிக்கைப் பயிற்சி பொது மக்களுக்கு அளித்து வருகிறது. 2017 செப்டம்பர் 19 தேதிப் பூகம்ப எழுச்சிக்கு 2 மணிநேரத்துக்கு முன்னர்தான் விந்தையாக எச்சரிக்கைப் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கிறது.

தீக்கனல் வளையத்தில் [Ring of Fire] சிக்கியுள்ள உலக நாடுகளில், ஜப்பான், பெரு, மெக்சிக்கோ, இந்தோனேஷியா ஆகிய நான்கு நாடுகளிலே அடிக்கடி பூகம்ப நடுக்கங்கள் நேர்ந்து, உயிர்ச் சேதமும், பொருட் சேதங்களும் பேரளவு விளைந்து வருகின்றன. இவற்றில் மெக்சிக்கோ நாடு மட்டும் குறுக்கிடும்  மிகவும் சிக்கலான பல்வேறு பிறழ்ச்சித் தட்டுகள் [Tectonic Plates] மீது அடிக்கடி நடுங்கிக் கொண்டிருக்கிறது.

Earthquake 5 km ENE of Raboso, Mexico, 2017.jpg
Image result for North American and Pacific Tectonic Plates

பசிபிக் தட்டு, கோகோஸ் தட்டு, ரிவேரா தட்டு, கரீபியன் தட்டு, வட அமெரிக்கன் தட்டு ஆகிய ஐந்து பிறழ்ச்சித் தட்டுகள் அடிக்கடித் தாலாட்டும் மிதப்புப் பகுதியாக மெக்சிக்கோ நாடு பள்ளி கொண்டுள்ளது.  இந்த ஐந்து கரத் தட்டுகள், வெவ்வேறு திசைகளில் இயங்கி, நில நடுக்கம் உண்டாக்கி நாள் ஒன்றுக்குச் சராசரி 40 பூகம்பங்கள் நேர்கின்றன !

மெக்சிக்கோ நகரம் மெதுமணல் [Soft Soil with Sand] கொண்ட காய்ந்த ஏரிப்படுகை மீது  வீடுகள் நிறுவப்பட்டுள்ளது.  ஆதலால் நில நடுக்க சமயங்களில் சேதாரம் பேரளவு உண்டாகிறது.   பூகம்பம் ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு [செப்டம்பர் 28 இல்] குறைந்தது 333 பேர் உயிர் இழந்ததாகத் தெரிகிறது.  சுமார் 5400  பேர் காயப் பட்டனர்.  ஆயினும் 38 நபர் இன்னும் காணப்பட வில்லை.

Image result for mexico tectonic plates
Image result for mexico earthquake damage

++++++++++++++++++++++++++++++

S. Jayabarathan [September 12, 2021] [R-1]

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.