சி. ஜெயபாரதன், கனடா
பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டி நின்றோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
மும்மூர்த்தி யானது !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டிகளுக்கு !
ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
பூரண சுதந்திரம் ஒரு போர்க்களம் !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுப் புடவையைப்
பலர்முன் இழுப்பான்
துச்சாதனன் !
பூரண சுதந்திரம் ஒரு குருச்சேத்திரம் !
விட்டு விடுதலை ஆகும் சுதந்திரம் !
விலங்கு போட்டுக் கொள்ளும்
சுதந்திரம் !
மொட்டு அவிழும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுட்ட கனியா சுதந்திரம் ?
சுடாத கனியா ?
எட்டித் தொடாத
உச்சியில்
ஓங்கி உயரும் சுதந்திரம் !
முழு விடுதலை பெற்றவர்
மோகன்தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலை வேண்டித் தவமிருக்கிறார்
போலிச் சாமியார் !
++++++++











