மனிதா ! நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலாத்தள தட வைப்பு போட்டியில் லூனா-25 விண்சிமிழை ஏவியுள்ளது
Left: Russia’s Luna-25 spacecraft, seen here during prelaunch preparations, is the country’s first moon landing attempt since 1976. Right: The Indian Space Research Organisation’s Chandrayaan 3 moon lander and rover are prepared for a July 14, 2023 launch to the moon. (Image credit: Roscosmos & ISRO)
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் தென்துருவ நிலவுத் தடவைப்புப் போட்டி
சி. ஜெயபாரதன், கனடா
ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுத் தட வைப்பு தென்துருவப் போட்டியில் சந்திரயான் -3 இந்திய விண்சிமிழை முந்திச் செல்ல, ரஷ்யா லூனா -25 [LUNA -25] நிலவுத் தளவுளவியை 2023 ஆகஸ்டு 8 ஆம் ஏவியுள்ளது. நிலவு நோக்கிப் பயணம் செய்யும் ரஷ்யாவின் நிலாத் தளவுளவி ஆகஸ்டு 23 ஆம் தேதி நிலவை நெருங்கும் என்று ஏவப்பட்டுள்ளது. வேகமாய் இயங்கும் ரஷ்ய விண்சிமிழ் ஏவுகணை நிலவை 5 அல்லது 6 நாட்களில் நெருங்கும். அடுத்து அது 3 அல்லது 7 நாட்களில் 100 கி.மீ [60 மைல்] உயரத்தில் நிலவைச் சுற்றி, தரையில் இறங்கும்.
இதுவரை நிலவில் இறங்கித் தளவூர்தி தவழ்ந்த முப்பெரும் வல்லரசுகள் அமெரிக்கா, ரஷ்யா, சைனா ஆகியவையே. ஆனால் எந்த நாடும் துணிந்து நிலவின் தென்துருவத்தில், இதுவரை இறங்கிய தில்லை. தென் துருவத்தின் இருண்ட குழிப் பிரதேசத்தில் நீர்ப்பனி இருப்பு பலவித உலோகங்கள் இருப்பு இந்த நாடுகளை ஈர்த்துள்ளன. பனிக் குன்றுகளின் நீரிலிருந்து எரிசக்தி ஹைடிரஜன், ஆக்சிஜென் வாயுக்கள் பிரித்தெடுத்து பிற்காலத்தில் ராக்கெட் ஏவு எரிசக்தி தயாரிக்கலாம். இந்த தொழில் நுணுக்கப் பந்தயத்தில், வெற்றி பெறுவது ரஷ்யாவா அல்லது இந்தியாவா என்று காணப்போவது ஒரு வரலாற்று சாதனை யாகக் கருதப்படும்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
One thought on “ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலாத்தள தட வைப்பு போட்டியில் லூனா-25 விண்சிமிழை ஏவியுள்ளது”
One thought on “ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலாத்தள தட வைப்பு போட்டியில் லூனா-25 விண்சிமிழை ஏவியுள்ளது”