மனிதா ! நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்
Author: S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
ஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலா பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது. இது ஓர் முக்கிய வரலாற்று விண்வெளிப் பயணமாகக் கருதப்படுகிறது. இம்முறை பயணிகள், 250 மைல் உயரத்தில் சுற்றும் அகில நாட்டு நிலையத்துக்குப் போகாமல், மூன்று நாட்கள் பூமியை 350 மைல் உயரத்தில் சுற்றி, விண்வெளி ஆய்வுகள் செய்து, பூஜிய ஈர்ப்பு அரங்கில் மிதந்து கடலில் இறங்க திட்டமிடப் பட்டது. ஸ்பேஸ் X விண்சிமிழ் மூன்று நாட்கள் பணியைச் முடித்து, பாராச்சூட் மூலம் கடலில் வந்து பாதுகாப்பாக இறங்கியது.
ஸ்பேஸ் X விண்சிமிழ் நான்கு பொதுநபருடன் பாதுகாப்பாய் கடல் மீது இறங்கியது.
Leadership: 38-year-old Jared Isaacman – Shift4 Payments founder and CEO
Hope: 29-year-old Hayley Arceneaux – physician assistant and pediatric cancer survivor who was treated at St. Jude
Generosity: 41-year-old Chris Sembroski – U.S. Air Force veteran and aerospace industry employee for Lockheed Martin
Prosperity: 51-year-old Dr. Sian Proctor – entrepreneur, educator, trained pilot and active voice in space exploration community
Leadership: 38-year-old Jared Isaacman – Shift4 Payments founder and CEOHope: 29-year-old Hayley Arceneaux – physician assistant and pediatric cancer survivor who was treated at St. JudeGenerosity: 41-year-old Chris Sembroski – U.S. Air Force veteran and aerospace industry employee for Lockheed MartinProsperity: 51-year-old Dr. Sian Proctor – entrepreneur, educator, trained pilot and active voice in space exploration communit
Space X Reusable Rocket Falcon -9 Launched on September 8, 2021
முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது.
Posted on
முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரைக் மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011 ஆண்டில் நாசாவின் விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு அமெரிக்க விண்வெளி நிபுணர் ரஷ்ய விண்வெளிக் கப்பல் மூலம், நிலையத்துக்குச் சென்றும், அதிலிருந்து திரும்பியும் வந்தார்.
Space X Landing back towards, the Earth, After two weeks.
ஸ்பேஸ் X இயல்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
ஸ்பேஸ் X விண்சிமிழ் வெற்றிகரமாக கடல் நீர் மீது இறங்கியதைப் பாராட்டி போது, திட்ட ஆளுநர் எலான் மாஸ்க் [Elon Musk] . “இந்த வெற்றி நாங்கள் நிலவுக்குப் போகும் திட்டத்தையும், நிலாக் குடிவசிப்பு திட்டத்தையும் மெய்ப்படுத்தி உள்ளது. நான் பெரிய மத நம்பிக்கை கொண்டவன் அல்லன். ஆனால் இது வெற்றி அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்” என்று கூறுகிறார் எலான் மஸ்க் விண்வெளித் தேடல் விஞ்ஞானி. ஸ்பேஸ்X விண்சிமிழ் பூமியில் இறங்குவதற்குத் தகுந்த சுற்றுப் பாதைக்கு நெருங்கி, காற்று மண்டலத்தைக் கடக்கும் போது, உராய்வு உஷ்ணம் 3500 டிகிரி F [1900 C], பயண வேகம் 17,500 mph [28,000 kph] . இறங்கும் போது இரண்டு பாராசூட் குடைகள் விண்சிமிழைத் தாங்கி, வேகத்தை 15 mph ஆகக் குறைத்தன.
அடுத்த ஸ்பேஸ்X திட்டம் செப்டம்பர் இறுதியில் நான்கு விண்வெளி விமானிகள் [மூன்று அமெரிக்கர் + ஒரு ஜப்பானியர்] அகில விண்வெளி நிலையத்துக்கு வந்து, ஆறு மாதம் ஆய்வுகள் செய்து, பூமிக்கு மீள்வர்.
SpaceX rocket returns to shore after historic astronaut launch
The first stage of the SpaceX Falcon 9 rocket that launched the Demo-2 mission on May 30, 2020, arrives in Florida’s Port Canaveral on June 2, 2020. (Image credit: SpaceX via Twitter)https://www.youtube.com/embed/mfyPS6eYJEQ?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=en&autohide=2&wmode=transparenthttps://www.youtube.com/embed/Rr8QFqfUYKw?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=en&autohide=2&wmode=transparenthttps://www.youtube.com/embed/pyNl87mXOkc?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=en&autohide=2&wmode=transparent
2020 மே மாதம் 30 ஆம் தேதி பிளாரிடா கனவரல் முனை ஏவு தளத்தி லிருந்து, முதன்முதல் இரு விமானிகளை ஏற்றிக்கொண்டு, ஸ்பேஸ்X பால்கன் 9 பூத ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகரமாக பூமிச் சுற்று வீதியில் சுற்றத் துவங்கியது. 2011 ஆண்டில் ஓய்வெடுத்த எல்லா விண்வெளி மீட்சிக் கப்பல்கள் [Space Shuttle] ஆட்சிக்குப் பிறகு, இப்போதுதான் நாசா தன் சொந்த நாட்டு ராக்கெட் ஸ்பேஸ்X விண்கப்பலை இரு விமானிகளை இயக்கப் பயிற்சி அளித்து முதன் முதல் ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் ஏவப்பட்டு, மே மாதம் 31 ஆம் தேதி அகிலநாட்டு விண்வெளி நிலையத்துடன் கப்பல் இணைப்பு நிகழ்ச்சியும் நடத்திக் காட்டியுள்ளது. இதுவே முடிவான சோதனை. இதற்குப் பிறகு ஸ்பேஸ்X கப்பல் சாதாரண மனிதரையும் அண்ட வெளிச் சுற்றுலா பயணத்துக்குத் தூக்கிச் செல்லும். அதற்குக் கட்டணம் ஒருவருக்கு 20 மில்லியன் டாலர். இருவிமானி களும் சில நாட்கள் நிலையத்தில் தங்கி 2020 ஆகஸ்டில் மறுபடியும் பூமிக்கு வந்து சேர்வார். அப்போது நான்கு பாராசூட் குடைகள் டிராகன் விண்சிமிழைத் தாங்கி அட்லாண்டிக் கடலில் இறங்கும். பில்லியனர் எலான் மஸ்க் [ELON MUSK] டிசைன் இது. 2022 இல் ஸ்பேஸ்X ஏற்பாடு நிலவுக்கும், 2024 இல் செவ்வாய்க் கோளுக்கும் பயணம் செய்யும் எதிர்காலத் திட்டங்களும் உள்ளன.
நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன் முதலில் நிலவில் தடம் வைத்தார். பூமியைச் சுற்றி வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தில் சிலநேரம் தங்கிச் சுற்றுலாப் பயணம் செய்ய நிற்கிறார் வரிசையில் புவி மனிதர் ! நவயுகத் தரை நபர்கள் இனிமேல் விண்கப்பல் புவிச் சுற்றில் சுற்றுலா வருவர் ! கனவில்லை இது ! மெய்யான நிகழ்ச்சி ! வருவாய் பெருக்கும் மகிழ்ச்சி.
நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் [பொதுநபர், இரு தனிநபர்] சேர்ந்து புரியும் விண்கப்பல் சுற்றுலா
இப்புது விண்வெளிச் சுற்றுலா திட்டம் ஈராண்டு தாமதமாகி 2020 இல் நிகழும் இப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளிச் சாதனைகளில் முன்னொடித் திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இதுவரை 20 பில்லியன் டாலர் நாசாவின் ஓரியன் விண்சிமிழ் [Orion], ஸ்பேஸ்-எக்ஸ் குரு டிராகன் [Crew Dragon] , போயிங் ஸ்டார்லைனர் [Starliner]] புதுச் சாதன விருத்திக்குப் பயன்படுத்தி உள்ளதாக நாசா தெரிவிக்கிறது. குறிப்பாக பூமியைச் சுற்றிவரும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் போக, மீள, சாதனங்கள் கொண்டு செல்ல, இதுவரை ரஷ்ய உதவியை நாட வேண்டி இருந்தது. அதனால் செலவு 70 மில்லியன் டாலர் ஒருமுறை செல்ல அல்லது ஒருவரைக் கொண்டு செல்ல. அத்தேவை இப்போது ஸ்பேஸ்-எக்ஸ் விண்கப்பல் பயணங்களால் நிறைவேறுகிறது. 2020 இல் மீண்டும் நிலவுக்குச் செல்ல, நாசா 2014 இல் 68 பில்லியன் டாலர் ஒதுக்கி இரு நிறுவகங்களைத் தேர்ந்தெடுத்தது. ஒன்று ஸ்பேஸ்-எக்ஸ் [2.6 பில்லியன் டாலர்] குரு டிராகன் விண்கப்பல் சிமிழுக்கு. அடுத்தது போயிங் [4.2 பில்லியன் டாலர்] அதன் ஸ்டார்லைனர் விண்கப்பல் சிமிழுக்கு. ஏற்கனவே ஓரியன் விண்சிமிழ் விருத்திக்கு லாக்கீடு நிறுவகம் [Lokheed] 12 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.
தற்போதைய சுற்றுலாப் பயணக் கட்டணம் ஒருவருக்கு 250,000 டாலர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் திட்டம் : 2020 இல் நிறைவேறப் போகும் மனிதர் செல்லும் விண்வெளிச் சுற்றுலா.
அடுத்த திட்டம் : 2024 மீண்டும் மனிதர் ஏகும் நிலவுப் பயணம்.
During the past 7 days, Mexico was shaken by 1 quake of magnitude 7.1, 3 quakes between 5.0 and 6.0, 44 quakes between 4.0 and 5.0, 172 quakes between 3.0 and 4.0, and 47 quakes between 2.0 and 3.0. There were also 50 quakes below magnitude 2.0 which people don’t normally feel.
பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! மாந்தர் மரித்தார் சிதைவு களில் சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர் ! கடற்தட்டு தடம்மாறிக் கால் உதைத்தால் உடனே சுனாமி எழும் ! பூகம்ப நர்த்தனம் நகர்த்திடும் பூகோள அச்சை ! காலம் மாறும் ! பருவம் மாறும் ! நாளின் நீட்சி குன்றும் ! கனல் திரவம் அழுத்தமாகிக் குப்பெனப் பொங்கும் எரிமலைகள் ! சூழ்வெளி பாழாய்ப் போக ஆழ்ந்த பூமிக் குள்ளும் ஊழல் தட்டுகள் சூழ்ந்துள்ள தப்பா ! எங்கெங்கு வாழினும் இன்ன லப்பா ! ஏழு பிறப்பிலும் மானிடர்க்கு தொல்லை யப்பா ! ஊழிக் கூத்தின் பிரளய அழிவு அடுத்தடுத்து அரங்கே றுதப்பா ! முடுக்கி விட்ட பூகோளம் நடுக்கம் தரும் ! ஊழியின் மேளம் !
+++++++++++++++++++
2021 செப்டம்பர் 7 இல் மெக்சிக்கோ நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அகபுல்கோவில் நேர்ந்த M 7.1 ஆற்றல் பூகம்பம் பேரளவு கோரச் சிதைவுகளை உண்டாக்க வில்லை. அது நடுமைத் தர விளைவுகள் தரும் ஒரு பூகம்பமாய்க் கருதப்படுகிறது. அந்த நில நடுக்கம் அமெரிக்கத் தட்டுகளும், கோகாஸ் தட்டுகளும், [American and Cocos Tectonic Plates] ஆண்டுக்கு 65 மில்லி மீடர் நகர்ச்சி வீதத்தில் மோதியதால் உண்டானது.
கடந்த நூறாண்டில் மெக்சிக்கோ தென்மேற்குப் பகுதியில் பல்வேறு ஆற்றல் பூகம்பங்கள் நேர்ந்துள்ளன. அவற்றில் 17 எண்ணிக்கை M 7 அல்லது அதற்கு மேற்பட்ட ஆற்றல் உள்ளவை.
2017 செப்டம்பர் மாதத்தில் மெக்சிக்கோ நாட்டில் அடுத்தடுத்து இருபெரும் பூகம்பங்கள் நேர்ந்து, மெக்சிக்கோ நகரிலும், சுற்றியுள்ள மற்ற நகரங்களில் உயிர்ச் சேதங்களும், பொருட் சேதங்களும் பேரளவில் விளைந்துள்ளன. முதலில் செப்டம்பர் 7 ஆம் தேதியில் 8.1 M அளவு அசுரப் பூகம்பம் சியாபாஸ் கடற் பகுதியைத் தாக்கியுள்ளது. 100 பேர் மாண்டனர். பன்மாடி அடுக்கு மாளிகைகள், வீடுகள் பற்பல நொறுங்கித் துண்டாக்கப் பட்டன. அது நேர்ந்து இரண்டு வாரத்திற்குள் [செப்டம்பர் 19 இல்] 400 மைல் தூரத்தில் [650 கி.மீ.] 7.1 M அளவில் அடுத்த பூகம்பம் தாக்கி 342 பேர் மாண்டனர். 6000 பேர் காயமுற்றனர்.
1985 ஆண்டில் மெக்சிக்கோவில் முன்பு நேர்ந்த பூதப்பெரும் பூகம்பத்தில் 10,000 பேர் உயிரிழந்தார். அது முதல் மெக்சிக்கோ அரசாங்கம் பூகம்ப எச்சரிக்கைப் பயிற்சி பொது மக்களுக்கு அளித்து வருகிறது. 2017 செப்டம்பர் 19 தேதிப் பூகம்ப எழுச்சிக்கு 2 மணிநேரத்துக்கு முன்னர்தான் விந்தையாக எச்சரிக்கைப் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கிறது.
தீக்கனல் வளையத்தில் [Ring of Fire] சிக்கியுள்ள உலக நாடுகளில், ஜப்பான், பெரு, மெக்சிக்கோ, இந்தோனேஷியா ஆகிய நான்கு நாடுகளிலே அடிக்கடி பூகம்ப நடுக்கங்கள் நேர்ந்து, உயிர்ச் சேதமும், பொருட் சேதங்களும் பேரளவு விளைந்து வருகின்றன. இவற்றில் மெக்சிக்கோ நாடு மட்டும் குறுக்கிடும் மிகவும் சிக்கலான பல்வேறு பிறழ்ச்சித் தட்டுகள் [Tectonic Plates] மீது அடிக்கடி நடுங்கிக் கொண்டிருக்கிறது.
பசிபிக் தட்டு, கோகோஸ் தட்டு, ரிவேரா தட்டு, கரீபியன் தட்டு, வட அமெரிக்கன் தட்டு ஆகிய ஐந்து பிறழ்ச்சித் தட்டுகள் அடிக்கடித் தாலாட்டும் மிதப்புப் பகுதியாக மெக்சிக்கோ நாடு பள்ளி கொண்டுள்ளது. இந்த ஐந்து கரத் தட்டுகள், வெவ்வேறு திசைகளில் இயங்கி, நில நடுக்கம் உண்டாக்கி நாள் ஒன்றுக்குச் சராசரி 40 பூகம்பங்கள் நேர்கின்றன !
மெக்சிக்கோ நகரம் மெதுமணல் [Soft Soil with Sand] கொண்ட காய்ந்த ஏரிப்படுகை மீது வீடுகள் நிறுவப்பட்டுள்ளது. ஆதலால் நில நடுக்க சமயங்களில் சேதாரம் பேரளவு உண்டாகிறது. பூகம்பம் ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு [செப்டம்பர் 28 இல்] குறைந்தது 333 பேர் உயிர் இழந்ததாகத் தெரிகிறது. சுமார் 5400 பேர் காயப் பட்டனர். ஆயினும் 38 நபர் இன்னும் காணப்பட வில்லை.
ஹர்ரிக்கேன் ‘ஐடா’ அதிவிரைவில் எப்படி அசுர வலுப்பெற்றது ?
2021 ஆகஸ்டு 31 இல் உருவாகி, லூசியானா மாநிலத்தைப் பேரளவில் சீரழித்து, பெருமழையில் நியூயார்க், நியூஜெர்சி, பென்சில்வேனியா, மேரிலாண்டு நகரங்களை வெள்ளத்தில் மூழ்க்கிய ஹர்ரிக்கேன் ஐடா, எப்படி மூர்க்கத்தில் முதல் நிலையில் இருந்தது, அதிவிரைவில் நான்காம் நிலைக்கு [Storm Category 1 to Category 4] மாறியது என்பது வியப்பாக உள்ளது ! சூறாவளி ஐடாவின் வேகம் 85 mph லிருந்து 150 mph ஆக ஒரே நாளில் விரைவு திரட்சி பெற்று ஏறியது எப்படி ? 24 மணி நேரத்தில் சூறாவளி வேகம் 30 knots [35 mph] மாறுவதற்கு ஆற்றல் எப்படி வந்தது ?
வேனிற் பரப்புத் தளங்களைத் தாக்கும் புயல்கள் நடுவண் அழுத்தம், 24 மணி நேரத்தில் 42 millibars [0.61 psi] குன்றினால், அவை “விரைவு ஆழ்வு நுழைவு” [Rapid Deepening] ஆற்றல் அடைவதாய்க் கூறப்படும். சூறாவளி ஐடாவின் மைய அழுத்தம், 24 மணி நேரத்தில் 56 millibar [0.81 psi] குன்றி உள்ளது. அதாவது உச்ச ஆற்றல் பெற்றுள்ளது.
இதுவரை 49 பேர் [2021 செப்டம்பர் 5] உயிரிழந்ததாக அறியப்படுகிறது.
வேனிற் கால வட அமெரிக்க மழைச் சூறாவளிகள் அசுர வலு எப்படிப் பெறுகின்றன ?
முதலில் கடல் மூலம் பேரளவு ஆற்றல் சேமிப்பு மேற்தள அடுக்கு வெப்ப நீர் வெள்ளம் மிஞ்சிய சேமிப்பாய்ச் சேர்கிறது.
இரண்டாவது தேவை கடலின் மேற்தள வெப்ப நீர்மை ஆவி [Water Vapour, Accumulated over Several Decades in the Oceans] . சூடாகும் நீர் வெள்ளம் பேரளவு நீர்மை ஆவியைக் காற்றில் ஏற்றுகிறது. மேலும் சூடான காற்று பேரளவு நீர்மை ஆவியைச் சேமித்துக் கொள்ள ஏதுவாகிறது. 1990 ஆண்டிலிருந்து, சூழ்வெளிக் காற்றில் சுமார் 4% நீர்மை ஆவி மிகையாகி உள்ளது.
மெக்சிகோ வளைகுடா பேய்மழைச் சூறாவளிகள் உருவாகி, அதிவிரைவில் திரட்சி பெற வெப்ப நீர்மையும், ஆவியும் நிரம்பிய சேமிப்புக் களஞ்சியமாக உள்ளது.
கடல் நீர் ஹிரீன்ஹௌஸ் வாயுக்கள் பெருக்கும் 90% சூடேற்றத்தை உறிஞ்சு கிறது. 500 அடி உயரக் கடல் நீரில் உள்ள வெப்பமே, ஹர்ரிக்கேன் அசுர வலு பெற ஆற்றல் அளிக்கிறது.
லெட் ஸெப்பெளின் இசைப்பாடல் [Led Zeppelin Lyrics (1929)]
பூகோளச் சூடேற்றத்தைக் கணிக்க உதவும் புவிச் சூழ்வெளி அறிகுறிகள்.
பூகோளச் சூழ்வெளியில் கரியமில வாயுவின் திணிவு மிகை ஆவதால் வாயு மண்டலமும், கடல் நீரும் சூடாகி, கிரீன்லாந்தின் பனிக்குன்றுகள், ஆர்டிக் பனி மதில்கள் உருகிக் கடலில் சேர்ந்து கடல்நீர் மட்டம் உயர்கிறது. பூகோளம் சூடேற்றத்தை அளக்க, முக்கியமாக புவிச் சூழ்வெளியில் வாயுவின் உஷ்ண ஏற்றம், கடல்நீர் மட்ட உயர்வு, கடல்நீர் வெப்பக் கொள்ளளவு ஆகிய மூன்று விளைவுகளின் அளவுகள் தேவைப்படும். கடல்நீர் மட்ட அளவு உயரும்போது, கடலின் வெப்பக் கொள்ளவு [Heat Content] மிகையாகிறது. அத்துடன் நீராவி எழும் கடல் பரப்பளவும் அதிக மாகி சூழ்வெளி வாயுவில் நீர்மைத் திணிவு [Moisture Density] சேர்கிறது. வேனிற் காலத்தில் பேரளவு நீராவி விரைவாகக் கடலில் உருவாகி முகிலில் கூடுகிறது.
கரியமில வாயுவையும், மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்களையும், எரிமலை வெடிப்புகள், மின்னல் தூண்டும் காட்டுத் தீக்கள் போன்ற இயற்கை நிகழ்ச்சிகளும், மனிதனின் செயற்கை முறைகளும் தொடர்ந்து வெளியாக்கிச் சூரியக் கதிர்கள் சூழ்வெளியைச் சூடாக்கி வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி ஏற்பட்டு, 21 ஆம் நூற்றாண்டில் பன்மடங்கு பெருகி புகை மூட்டம் உலகை இருண்ட கண்ட மாக்கி வருகிறது. எத்தனை விரைவில் சூடேற்றம் மிகையாகிறது என்பதை தொழில் நிபுணரும், விஞ்ஞானிகளும், பொது நபரும் கணித்துத் தீர்மானிக்க வேண்டியது. இப்போது சராசரிக் கடல்நீர்த் தள உஷ்ணக் கணிப்பே பூகோளச் சூடேற்றத்தைக் காண உதவுகிறது. புது முறைப்படி இன்னும் உயரிய வழிப்படிப் பூகோளச் சூடேற்றம் அறிய கடநீர் மட்ட உயர்வும், கடல்நீர் வெப்பக் கொள்ளளவு மாற்றமும் தெரிய வேண்டும். நவீன உலகில் இவற்றின் அளவுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருபவை :1. சைனா 2. அமெரிக்கா 3. பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகள்.
மனித செயற்கை நிகழ்ச்சிகளால் உண்டாகும், கரியமில வாயுவால் எழும் வெப்ப சேமிப்பில் 90% அளவு கடல்நீர் வெப்பம் ஏறச் சேர்கிறது. கிரீன்லாந்தின் பனிநீர்க் குன்றுகள் மட்டும் உருகி ஆண்டு தோறும் 250 கிகாடன் [250 பில்லியன் டன்] நீர் வெள்ளம் கடலில் சேர்கிறது. அப்போது கடல் மட்டம் உயர்ந்து கடற்கரை நகரங்கள் மூழ்கும். அசுரப் புயல் & பெருமழை ஹர்ரிகேன்கள் உருவாகி, கடற்கரை நகரங்கள் நீரில் மூழ்கும். 2005 ஆண்டில் நியூ ஆர்லின்ஸ் மூழ்க்கிய கேட்ரீனா ஹர்ரிக்கேன், 2012 ஆண்டில் நியூ யார்க்கை மூழ்க்கிய பூதப்புயல் ஸாண்டி, 2017 ஆண்டில் ஹூஸ்டன், டெக்ஸஸ் மூழ்க்கிய ஹர்ரிக்கேன் ஹார்வி குறிப்பிடத் தக்கவை.
பூகோளச் சூடேற்றத்துக்கும் சூறாவளிப் பெரு மழைக்கும் தொடர்பு உள்ளதா ?
2017 செப்டம்பரில் அமெரிக்காவைத் தாக்கிய ஹர்ரிக்கேன்கள் ஹார்வி, இர்மா, மரியா போன்றவை பேரளவு வலுமிக்க அசுரச் சூறாவளிப் பெருமழையாகக் கருதப் படுகின்றன. வேனிற் கால ஹர்ரிக்கேன்களின் வலுவும், வேகமும் தற்போது மிகுந்துள்ள தாக அறியப் படுகிறது. அவற்றின் கணிப்பு : சுமார் ஒரு டிகிரி செல்சியஸ் கடல் நீர் உஷ்ண உயர்வுக்கு & வினாடிக்கு 8 மீடர் [25 அடி] வேக அதிகரிப்பு [மணிக்கு 30 கி.மீ] உண்டாகுகிறது !
மேலும் கடற்தள உஷ்ண ஏற்றத்தால், நீர் ஆவியாகிச் சூழ்வெளி வாயுவில் நீர்மைத் திணிவு [Moisture Density] ஒவ்வோர் டிகிரி செல்சியஸ் ஏறும் போது 7% அதிகரிக்கிறது. சமீபத்தில் டெக்ஸசைத் தாக்கிய ஹர்ரிக்கேன் ஹார்வி இவ்விதமே அசுர வலுப் பெற்றுள்ளது.
ஆண்டுதோறும் அமெரிக்காவில் அடிக்கும் சூறாவளிப் பேய்மழைகள்.
ஹர்ரிக்கேன் எனப்படும் அசுரச் சூறாவளி பேய்மழை அடிப்புகள் பருவக் காலம் தவறாது, ஆண்டுதோறும் அமெரிக்கத் தென்னக மாநில நகரங்களைத் தாக்கி, நரகப் புழுதியாக்கி பேரளவு நிதிச் செலவை உண்டாக்கி வருகின்றன. அவற்றுக்கு விஞ்ஞானப் பின்புலமாய் உள்ள காரணங்கள் என்ன ? ஒவ்வோர் ஆண்டிலும் அவற்றின் தாக்குதல்கள் தவிர்க்க முடியாததாய், எதிர்பார்க்க முடியாததாய், தடுக்க இயலாததாய் மக்களுக்குத் துயர் அளிப்பதாய்த் தெரிகின்றன. மானிடர் வல்லவராய், அறிவுள்ளவராய், பொறிநுணுக்கத் திறமையாளராய் இருப்பினும், 21 ஆம் நூற்றாண்டில், சிறியவராய், அவற்றின் முன்னே ஆற்றலின்றிப் பின்வாங்கிப் போகும் மனித இயலாமை தெளிவாய்ப் புரிகின்றது. சரி நமக்குப் பருவக் காலப் பேரிடர்களான சூறாவளிப் பேய்மழைத் தடுப்புகள் பற்றி என்ன தெரியும் ?
2004 அக்டோபரில் கூடிய அமெரிக்க விஞ்ஞானிகள் ஹர்ரிக்கேன் இடர்களை எப்படித் தவிர்ப்பது, தடுப்பது என்று ஆய்வுகள் செய்ய முயன்ற போதிலும், 2017 இல் இதுவரை அந்தக் குறிக்கோள் நெருங்க முடியாதபடித் தூரமாய்ப் போய் விட்டது ! அடுத்த கேள்வி, எங்கே இருந்து இந்த ஹர்ரிக்கேன்கள் உருவாகின்றன ? 1851 ஆண்டுமுதல் 2012 வரைப் பதிவு செய்தவை ஆக்டபஸ்போல் சுழிவடிவில் உருவானவையே. 2016 ஜூன் வரை அறிந்த விளைவுகளின்படி அவற்றைத் தவிர்க்க முடியாது, தடுக்கவும் முடியாது, திசை மாற்றவும் இயலாது என்பதே ! 2016 அக்டோபரில் உருவான பூதச் சூறாவளிப் பேய்மழை “மாத்தியூ” அமெரிக்கத் தென்னக மாநிலங்களைத் [பிளாரிடா, அட்லாண்டா, தென் கரோலினா] தாக்கிப் பல நகரங்கள் நீரோடத்தில் மூழ்கின. ஐந்தாம் தகுதியில் [Category : 5] அடித்து ஹெய்தித் தீவில் பேரளவு சேதாரம் விளைவித்தது, மாத்தியூ ஹர்ரிக்கேன்.
+++++++++++++
‘ஹரிக்கேன் கேட்ரினா நியூ ஆர்லியன்ஸ் நகர்ப் புறங்களில் பேரளவு சூழ்நிலைச் சீர்கேட்டை விளைவிக்கப் போகிறது. நகர்ப் பாதுகாப்புக் கரைமதில் ஏற்பாடுகளைத் [The City Levee System] தகர்த்துக் கொண்டு நீர் வெள்ளம் கடல் கீழ்மட்டப் பகுதிகளை நிரப்பி, தெருக்களில் நீர்க்குளங்களை உண்டாகிக் குப்பை, நரகல் கழிவுகளுடன் சேர்ந்து, அபாய இரசாயனத் திரவங்களுடன் கலந்து மக்கள் தப்பி வெளியேற முடியாதபடி அடைத்து விடலாம். ‘
இவார் வான் ஹீர்டென் [Ivor Van Heerden, Marine Scientist, Louisiana State University]
‘பொஞ்சாட்ர்டிரைன் ஏரியுடன் [Lake Pontchartrain] இணைக்கப்பட்ட கால்வாய் கரை மதில்களில் ஏற்பட்டுள்ள இரண்டு உடைப்புகளைச் செம்மைப் படுத்த முயல்கிறோம். அதற்காக வேண்டிய கல், பாறைகள், மணல் போன்றவையும், கட்டுவதற்குத் தேவையான மணல் மூட்டைகள், தூக்கி யந்திரங்கள், டிரக்குகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறோம். ‘
வால்டர் பெளமி [Walter Baumy, Manager, Army Corps of Engineers (Aug 31, 2005)]
‘தேசீயப் பாதுகாப்பாளர் எண்ணற்ற மணற் சாக்குகளை இட்டு மதில் உடைப்பை மூட முயன்றார்கள். ஆனால் அவை யாவும் இருட்குழியில் விழுந்து மறைவன போல் காணாமல் போகின்றன. ‘
2300 ஆண்டுகளுக்கு முன்பு மலைப் பாம்புபோல் கற்களால் கட்டப்பட்ட, உலக விந்தைகளில் ஒன்றான சைனாவின் பெரும் நெட்டை மதில்சுவர் [The Great Wall of China] 1500 மைல் தூரம் நீண்டு செல்பவை. ஆனால் அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடாக் கரையில் இருக்கும் நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றிலும் எழுப்பியுள்ள குட்டைக் கரை மதில்கள் [Levees] 340 மைல் [560 மி.மீ] தூரம் கட்டப்பட்டு, கடல் மட்டத்துக்குத் கீழாக இருக்கும் பெரும்பான்மையான பகுதிகளை நீர் பாய்ந்து நிரப்பாமல் பாதுகாத்து வருகின்றன. நீளத்திலே சைனாவின் பெரு மதிலுக்கு குறைந்த தாயினும், உலகிலே குட்டை மதில்களில் மிக நீண்டதாக இந்த கரை மதில்களைக் கூறலாம். நியூ ஆர்லியன்ஸ் நகரத்தின் வடக்கே பொஞ்சார்ட்டிரைன் ஏரி [Lake Pontchartrain], கிழக்கே போர்ன் ஏரி [Lake Borgne], தெற்கில் ஊடே செல்லும் மிஸ்ஸிஸிப்பி நதி, பிறகு சிதறிக் கிடக்கும் மெக்ஸிகோ வளைகுடாப் பகுதிகளால் சூழப்பட்டது! கால மாறுபாட்டாலும், எப்போதும் ஹரிக்கேன் சூறாவளிகள் படையெடுக்கும் பாதையில் இருப்பதாலும், அந்த பகுதிகளின் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து நகரின் கீழ்த்தளப் பரப்புகளில் பாய்ந்து நிரப்பா வண்ணம் பாதுகாப்பு மதில்கள் கட்டப் பட்டிருக்கின்றன.
சென்ற நூற்றாண்டில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1965 செப்டம்பரில் தீவிரம்: 3-4 [Category: 3-4] கொண்ட ஹரிக்கேன் பெட்ஸி [Hurricane Betsy] கடைசியாக அடித்த சூறாவளிப் பேய்மழையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அதிர்ஷ்ட வசமாகப் பெருஞ் சேதத்திலிருந்து தப்பியது. ஆனால் பாதுகாப்பு மதில் தடுப்புகளிலும், சில உள்ளக நகராட்சிப் பகுதிகளிலும் [St. Charles, St. Bernard, Plaquemines Parishes] நீர் மட்டம் 23 அடி வரை உயர்ந்து விட்டது. மிகக் கடுமையான தீவிரம்: (4-5) கொண்டு நியூ ஆர்லியன்ஸ் நகரை மோதப் போகும் ஹரிக்கேன் கேட்ரினாவைப் பாதுகாப்பு மதில்கள் தாங்கிக் கொள்ள மாட்டா வென்று கேட்ரினா தாக்குவதற்கு முன்பே பல நிபுணர்கள் மீண்டும், மீண்டும் தமது எச்சரிக்கையை வெளிட்டனர். மதில்கள் சில மண் மேட்டாலும், சில இரும்புத் தட்டுகளாலும், சில காங்கிரீட் சுவர்களாலும் கட்டப் பட்டவை. ஆனால் அவை யாவும் தீவிரம்: 3 தாக்குதலுக்கே கட்டப் பட்டதால், கேட்ரினாவின் வேங்கை அடியைத் தடுத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவை என்று முன்னெச்சரிக்கை செய்தது மெய்யாகவே இம்முறை நிகழ்ந்து விட்டது! புகழ் பெற்ற நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கடல் வெள்ளமும், புயலும் அடித்துக் கடல் நீரால் மூழ்க்கிப் பேரளவு நாசத்தை விளைவித்து விட்டது!
நியூ ஆர்லியன்ஸ் கரைமதில்கள் சொல்லும் கதை
சூறாவளிக் காற்று அடித்த ஒருநாள் கழித்து, 2005 ஆகஸ்டு 30 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று இரண்டு மதில் அணைகள் உடைக்கப்பட்டு, நகரின் 80% கடல் மட்டம் தாழ்ந்த பகுதிகளில், கடல் வெள்ளம் நிரம்பியது. முதலில் பேய்க்காற்று மணிக்கு 150 மைல் உச்ச வேகத்தில் தாக்கிக் கடல் வெள்ளத்தால் அடித்து, கரைமதிலில் 200 அடி அகலத்தைப் பெயர்த்து கடலே நகருக்குள் நுழைந்தது! அடுத்து காற்றின் வேகம் மணிக்கு 100 மைலாகத் தணிந்தாலும், கடல் நீரின் வலுவில் மதில் உடைப்பு 500 அடியாக அகன்று கடல்நீர் திமுதிமுவென நகருக்குள் அலை அலையாய் நுழைந்து தெருவெல்லாம் 20 அடி உயரத்துக்கு மேலாக நீர் நிரம்பியது. நாகரீகப் புராண நகரமான நியூ ஆர்லியன்ஸில் உள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், வாணிபக் கட்டடங்கள், வீடுகள், குடில்கள் யாவும் ஒருநாளில் மூழ்கிப் போயின!
ஹரிக்கேன் மாத்தியூவின் போக்கு
2003 ஆண்டு முதல் ஈராக் போருக்குப் பிறகு கரைமதில் புதுப்பிப்பு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதித்தொகை [Federal Fund] குறைந்து கொண்டே வந்தது. அரசாங்க நிதிவளம் ஈராக் போரைத் தொடரவும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், வரிக் குறைப்பு ஈடுக்கும் பங்கிடவே பற்றாமல் குழி விழுந்தது. 2004 ஆம் ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிக் கரைமதில்களை மேம்படுத்த புஷ் அதிகார வர்க்கம் 20% குறைந்த அளவு தொகையைத் தருவதாகச் சொன்னது.
1. 2004 ஆண்டில் பொஞ்சார்டிரைன் ஏரிப் பகுதி ஹரிக்கேன் பாதுகாப்புக்கு ஒதுக்கிய நிதி யில்லாமையால் 20% [750 மில்லியன் டாலர்] மதிப்பளவே புஷ் அதிகார வர்க்கம் அளிப்பதாய் வாக்களித்தது.
2. 2005 ஆண்டில் மேற்கண்ட திட்டத்துக்கு 20 மில்லியன் டாலர் தேவைப்பட்ட போது, புஷ் அரசாங்கம், பட்ஜெட்டில் 3.9 மில்லியன் டாலரே ஒதுக்க முன்வந்தது.
3. காத்திருக்கும் காலம் நீடிக்க நீடிக்க, பிரச்சனைகள் பெருகி நிதிச் செலவை மிகையாக்கும். சில கரைமதில் செப்பனிடும் திட்டங்களை முடித்த கான்டிராக்டருக்கு, இன்னும் 5 மில்லியன் டாலர் தொகை கொடுக்கப் படாமலே இருக்கிறது.
நிரம்பிய வெள்ளத்தை வெளியேற்றுவதில் பிரச்சனைகள்
அமெரிக்க இராணுவப் படையினர் கரைமதில்களில் உடைபட்ட பகுதிகளைச் செப்பனிட அரும்பாடு பட்டனர். இரட்டைச் சுழலிகள் சுழலும் CH-53 ஹெலிகாப்டர்களில் பறந்து கொண்டு 1360 கிலோ கிராம் சாக்கு மண் பைகளைத் தொப்பென இறக்கி உடைப்பை அடைக்க முயன்றார்கள். அது பலன் அளிக்க வில்லை! அடுத்து பெரும் இரும்புத் தொட்டிகளில் கற்களை நிரப்பி இடைவெளியை மூட முற்பட்டார்கள். அம்முறையும் பலன் தரவில்லை! நகரின் கடல்மட்டத் தணிவுப் பகுதிகளின் தேக்கு வெள்ளத்தை வெளியேற்ற ஆற்றல் மிக்க 22 பூத பம்பு நிலையங்கள் இருந்தாலும், அவை யாவும் நீரில் மூழ்கிப் போனதால் அவற்றை நீர்ப் பாதிப்பிலிருந்து முதலில் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போது மூன்று பம்பு நிலையங்கள் செம்மை யாக்கப்பட்டு நீரை வெளியேற்றி வருகின்றன. அத்துடன் அபாய கால தற்காலிய பம்புகளை நிறுவி, நீர் நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடல் மட்டத்துக்குத் தணிவான பூதத் தொட்டி போல் நீர் கட்டிக் கிடக்கும் நியூ ஆர்லியன்ஸ் வெள்ளத்தையும், மற்றுமுள்ள சுற்றுப்புறப் பகுதிகளின் தேக்க நீரையும் வெளியேற்ற 24 முதல் 80 நாட்கள் ஆகலாம் என்று ஊகிப்படுகிறது.
கரைமதில்களைச் செப்பனிடும் பணிகள்
நியூ ஆர்லியன்ஸ் நகரின் பெரும்பகுதிகள் கடல் மட்டத்திற்குச் சராசரி 6 அடித் தணிவாக உள்ளன. எல்லாவற்றிலும் கீழான தளம் 20 அடி தணிவாகவும், மேலான தளம் ஓரடி தணிவாகவும் இருப்பதாக அறியப்படுகிறது. ஏறக்குறைய நகரின் பாதிப்பகுதி [907 சதுர கி.மீடர்] நீர் மயமாகவும், மீதிப் பாகம் மட்டுமே நில மயமாகவும் இருக்கின்றது. இயற்கையாகவே உண்டாகும் நீர் வெள்ளத் தாக்குதலை நியூ ஆர்லியன்ஸ் தவிர்க்க முடியாததால், எஞ்சினியர்கள், கால்வாய்கள், கரை மதில்கள், நீர் வெளியேற்றுப் பம்புகள் கொண்ட மிகவும் சிக்கலான சில முறைகளை அமைத்து, நகரின் வெள்ளத் தேக்கங்களைக் கையாள கட்டி யுள்ளனர். குறைந்த அளவு [2.5 செ.மீ] மழைகூட சில பகுதிகளில் சிறிது நீர்த் தேக்கத்தை உண்டாக்கித் தொல்லை கொடுத்து விடும். நகரின் சராசரி ஆண்டு மழைப் பொழிவு 90 செ.மீ.
நியூ ஆர்லியன்ஸ் நகரை உருவாக்கிய பிரெஞ்ச் நிபுணர்கள் 1718 ஆம் ஆண்டு முதல் கரை மதில்களைக் கட்டி நகரின் கடல் மட்டத் தணிவுப் பகுதிகளைப் பாதுகாத்தனர். அதுமுதல் பிற்காலச் சந்ததிகளும் நகரின் கரை மதில்களைச் செம்மைப் படுத்தி அவற்றின் நீளம், உயரம், வலு போன்றவற்றைத் தொடர்ந்து விருத்தி செய்து வந்துள்ளனர். 1965 இல் ஹரிக்கேன் பெட்ஸி நியூ ஆர்லியன்ஸ் கடற்கரைப் பகுதியைத் தாக்கி நீர் வெள்ளம் தேங்கிப் பாதகம் விளைந்த போது, கரைமதில்களின் உயரம் பல மீடர்கள் அதிகமாக்கப் பட்டன. ஆயினும் தீவிரம்: (4-5) கொண்ட ஹரிக்கேன்களின் அடியைத் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் அம்மதில்களுக்கு அறவே இல்லை. நியூ ஆர்லியன்ஸ் நகரைச் சுற்றியுள்ள குட்டைக் கரைமதிகள், நாளுக்கு நாள் புதைந்து போய் அவற்றின் உயரங்கள் குன்றி வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து எஞ்சினியர்கள் செம்மைப் படுத்தினாலும், எடுத்த பணிகள் முழுவதும் இதுவரை முடிவடைய வில்லை.
பெருநகரைப் பெருநரக மாக்கிய ஹரிக்கேன் கேட்ரினா
நியூ ஆர்லியன்ஸ் நகரம் சுமார் 480,000 பேர் வாழ்வதற்குரிய இல்லங்களைக் கொண்டது. ஆனால் அதன் வாணிபத் தொழில் துறைகளுக்கு வந்து போகும் மக்கள் தொகையையும் சேர்த்தால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்டது என்று யூகிக்கப் படுகிறது. இப்போது ( செப் 7, 2005) அடித்த கேட்ரினாவில் 10,000 பேருக்கு மேலாக இறந்திருக்கலாம் என்று அறியப் படுகிறது. ஆரம்பத்தில் 80% பரப்பாக இருந்து ஒரு வாரம் கழித்து நீர் மட்டம் குறைந்து தற்போது நகரின் 60% பரப்பில் மாசுகள் படிந்த வெள்ளம் சூழ்ந்து, விஷப் பண்டங்கள் கலந்து, பாக்டாரியா பெருகிப் பாதுகாப்புக்குப் மேல் 45,000 மடங்கு கூடி விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. நீர் வெளியேற்றிப் பம்புகள் நகரின் அசுத்த வெள்ளத்தை நீக்க இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்று எஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.
நியூ ஆர்லியன்ஸ் நகர் முழுவதும் நாசமாகிப் பெரும்பான்மையான நகர மக்கள் வெளியேறி விட்டதால், 400,000 பேர்கள் உழைப்பும், ஊதியமும் இழந்து, மாநில அரசாங்கத்தின் வருமானம் பெருத்த அளவில் சிறுத்து விட்டது. நீர்த் தேக்கங்களை வெளியேற்றி, கழிவு நீர் ஏற்பாடுகளைச் சீராக்கி, நகரத்தைச் சுத்தீகரித்துப் புத்துயிர் உண்டாக்கவும் குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, தகவல், வசதிகளைச் செப்பனிடவும் நிதித்தொகை (50-60) பில்லியன் டாலர் ஆகலாம் என்று தற்போது எதிர்பார்க்கப் படுகிறது. இனிவரும் அடுத்த 10 ஆண்டுகளில் எஞ்சினியர்கள் [Army Corps of Engineers] ஸேலா நீர் தேக்கக் கட்டுப்பாடுத் [Southeast Louisiana Urban Flood Control Unit (SELA)] திட்டத்தில் 430 மில்லியன் டாலர் செலவு செய்து, கரைமதில்களின் உயரம், ஆற்றலை அதிகரிக்கவும், புது பம்பு நிலையங்கள் கட்டவும் நகராட்சியில் வழிகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆயினும் உயிரில்லாத நியூ ஆர்லியன்ஸ் நகரம், நகர நடப்பு உள்ளமைப்புகளை [Infrastructure] மீண்டும் உருவாக்கி ஓரளவு இயங்க மூன்று அல்லது ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்.
2021 ஆகஸ்டு 24 ஆம் தேதி இந்திய பிரமாஸ் வான்வெளி நிறுவகம், [BrahMos Aerospace] 300 கோடி ரூபாய்ச் செலவில் லக்னோவில் ஒரு பெரும் எறிகணை உற்பத்தி தொழிற் சாலை நிறுவப் போவதாய் அறிவித்துள்ளது. பிரமாஸ் வான்வெளி நிறுவகம் ஈரிணைப்பு தொழில் முயற்சி [Defence Research & Development Organization and Russia’s NPO Mashinostroyenia which produces the world’s fastest supersonic Cruse Missiles] (BrahMos) .
பிரமாஸ் ஆளுநர் சுதீர் மிஸ்ரா உத்தர் பிரதேச முதல் மந்திரியை அணுகித் தன் திட்டங்களைக் கூறித் தலைநகரில் 200 ஏக்கர் பரப்பு நிலம் ஒதுக்கும்படி வேண்டினார். அடுத்து மூன்று மாதங்களில் திட்டம் ஆரம்பம் ஆகும் என்றும் கூறினார். அத்திட்டம் 5500 உயர் தொழில் நுணுக்க வாதிகளுக்கும், 10,000 பொதுத் தொழிலாளிகளுக்கும் வேலை தரும் என்றும் அறிவித்தார்.
பிரமாஸ் கட்டளை எறிகணை
+++++++++++++++++++++++++++++
ஈர்த்துக் கொள் என்னை உன்னிதயத் துக்கு. பூர்வப் புதிர்களை வெளிப்படுத் தெனக்கு விடை தேடுகிறேன் நானொரு வினாவுக்கு எங்கோ உள்ளது என்னுள்ளே ஆழத்தில் எனக்குத் தெரியும் இங்கு காணேன் என்று ஏற்கனவே இருக்கிற தெந்தன் மனதில் என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான், எங்கெலாம் எனை யிழுத்துச் சென்றாலும் என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான், எப்போது நான் அழைக்கப் பட்டாலும் என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான், ஈதோ என்னிதயம் இல்லம் நோக்கி ஏகுது ஓம், ஓம், ஒம்.
ஜான் லெனன், பீட்டில்ஸ் பாடகர்.
[இந்திய கீதம்] [John Lennon, Song India (1940-1980)]
பிரமாஸ் தாக்குகணை -1 BrahMos Missile -1
“பிரமாஸ் ராணுவ ஏவுகணை குறிப்பிட்ட தளப்பகுதியைத் திட்டமிட்டபடித் தாக்கியது. மேலும் ஒலிமிஞ்சிய வேகத்தில் ஏவுகணையை முடுக்கு வளைவுகளில் [Sharp Manoeuvers] செலுத்த முடியுமா வென்னும் சோதனையும் நடத்தப் பட்டது. ஏவுகணை அப்பணிகளைச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு அதன் அசாத்திய போர்த்திறன் உறுதியானது.”
சிவதாணு பிள்ளை தலைவர், பிரமாஸ் வான்வெளி லிமிடெட்.
“விண்ணை நோக்கு! நாம் மட்டும் ஏகாந்தமாக இல்லை. மாபெருமிந்த பிரபஞ்சம் நம்முடன் நட்புடன் உள்ளது. கனவு கண்டு உழைப்போருக்கு மட்டும் உன்னத வெகுமதி அளிக்கிறது.”
டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி
“என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”
டாக்டர் அப்துல் கலாம்.
“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”
டாக்டர் அப்துல் கலாம் (இளைஞருக்குக் கூறியது )
பலேஷ்வர், ஒரிசா [Balasore, Odisha]
“இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து வலுவோடு நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை! இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை! வல்லமையே வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் ஒருங்கே பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.”
டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி
இந்தியாவுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திப்பீர். இந்தியா மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்திப்பீர், அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள மேம்பாடு களை நாமும் பெற வேண்டுமானால்!
டாக்டர் அப்துல் கலாம்.
இந்தியக் கட்டளை எறிகணைகள்
“3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா? அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையானவற்றைக் கைப்பற்றினார். நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை. எந்த நாட்டையும் கைபற்ற வில்லை. யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”
டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி
ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்! ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்! …… வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்! சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!
மகாகவி பாரதியார் (பாரத தேசம்)
“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”
டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).
பிரமாஸ் தாக்குகணைத் திட்டம், டாக்டர் அப்துல் கலாம் பார்வை
பிரமாஸ் தொலைநீட்சி எறிகணைச் சோதிப்பில் நாங்கள் வெற்றி பெற்றது, 248 மைலுக்கு அப்பால் உள்ள எதிர்ப்புப் பகைவரைத் தாக்கி வீழ்த்தும், அரிய படைப்பலத்தை இந்திய இராணுவ வீரருக்கு அளித்துள்ளது. பிரமாஸ் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சி எறிகணை உலகிலே சிறந்த ஓர் தயாரிப்பு என்று நிரூபித்திருக்கிறது.
டாக்டர் சுதீர் மிஸ்ரா [CEO, BrahMos Aerospace]
இந்தியா சோதித்த ஒலிவேகம் மிஞ்சிய பிரமாஸ் தாக்குகணை
இந்தியா இதுவரைச் சோதித்த பிரிதிவி, அக்கினி, சூரியா போன்ற கட்டளை எறிகணைகளில், ரஷ்யக் கூட்டுறவில் ஆக்கிய பிரமாஸ் தாக்கு கணையே [BrahMos Supersonic Cruise Missile] ஒலிவேகம் மிஞ்சிய [மாக் -2.8 (Mach -2.8)] அதிவேகத்தில் தற்போதைய நீட்சி 180 மைலுக்கு மிஞ்சி, முதன்முதல் 248 மைல் தூரத்தைத் தாண்டிச் சென்றுள்ளது. இதில் ஈடுபட்டுப் பங்கு பெற்றவர் இரு குழுவினர் : இந்தியாவின் படைத்துறை ஆய்வு & விருத்தி ஆணையகம் [Defense Research & Development Organization (DRDO) & Russia – Owned NPO] ரஷ்யாவைச் சேர்ந்த பொறிநுணுக்கரோடு இணைந்து செய்தது. இந்திய படைத்துறை ஆய்வாளர் பிரமாஸ் ஒலிமிஞ்சிய எறிகணையைச் சோதித்து வெற்றி பெற்றது மாபெரும் வரலாற்றுச் சாதனையாய், வாஷிங்டனைச் சேர்ந்த ரயான் மாஸ் 2017 மார்ச் 14 இல் அறிவித்துள்ளார். இது ஏவப்பட்ட ஏவுதளம் : பலேஷ்வர், ஒரிசா [Balasore, Odisha]
பாரதத்தில் எழுந்த விண்வெளி ஏவுகணைப் புரட்சி
2007 ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று, அக்கினி-III ஏவுகணையின் முதல் தோல்விப் போக்கிற்குப் பிறகு 9 மாதங்கள் கழித்து, ராணுவ ஆராய்ச்சி விருத்தி துறையகத்தின் [The Defence Research & Development Organization (DRDO)] வெற்றிகரமாக ஏவுகணைப் பயிற்சி நிகழ்ந்தேறியது. அதுவே பாரதத்தின் நீள் பயண ராணுவ ஏவுகணைப் படைப்பலப் படைப்புக்கு [Long Range Missile Capability] அடித்தள மிட்டது. அக்கினி-III இரண்டாம் ஏவுகணை முயற்சி எவ்விதப் பழுதின்றி எளிதாக நிறைவேறிற்று. முதல் முயற்சி தோல்வி அடைந்ததற்கு மிகச் சிறிய பழுதே காரணம் என்று அறியப் படுகிறது. அக்கினி-III ஏவுகணையின் பயண நீள்போக்கு 3500 கி.மீடர் [2100 மைல்] தூரம். ஒருகட்ட அக்கினி-I ஏவுகணை [Single Stage Missile] செல்லக் கூடிய பயணத் தொலைவு: 700 கி.மீடர் [420 மைல்], இருகட்ட அக்கினி-II ஏவுகணையின் [Two Stage Missile] தூரம்: 2500 கி.மீடர் [1500 மைல்].
BrahMos Weapon Missiles
மூர்க்க ஆற்றல் படைத்த இருகட்ட ஏவுகணை அக்கினி-III முதல் கட்டத்தின் விட்டம் இரட்டையான SLV-3 ராக்கெட்டைக் கொண்டு புதுவித திடச்சக்தி உந்து நுணுக்கத்தில் DRDO துறைக்குழுவினரால் படைக்கப் பட்டது. திடச்சக்தி உந்து ராக்கெட்டுகள், திரவச்சக்தி உந்து ராக்கெட்டுகளை விட எளிதாகவும், விரைவாகவும், யந்திரக் கருவி உதவி குறைவான சாதனங்களால் ஏவிட வசதியாக உள்ளன. 1980 ஆம் ஆண்டில் திட எரிசக்தியில் இயங்கும் நான்கு கட்ட SLV-3 ராக்கெட் [Solid Propellant Four Stage Rocket] முதன்முதலாக வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு, அதற்கும் மிஞ்சிய உந்தாற்றல் கொண்ட ராக்கெட்டுகளும், கட்டளை ராணுவ ஏவுகணைகளும் [Ballistic Military Missiles] பாரதத்தில் படைக்கப்பட்டன. 1994 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வுத் துறையகம் [Indian Space Research Organization (ISRO)], திட எரிசக்தியில் ஏவப்படும் மாபெரும் துருவத் துணைக்கோள் ஏவு ராக்கெட்டை [Polar Satellite Lauch Vehicle (PSLV)] வெற்றிகரமாக ஏவியது. பாரதத்தின் SLV-3 ஏவுகணையின் முதற் கட்ட ராக்கெட்டே பிறகு அக்கினி ராணுவக் கணைகளின் அடிப்படை ஆனது.
BrahMos Truck Missiles
சைனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்தித் திடச்சக்தியால் உந்தும் ராக்கெட்டுகளைக் கொண்டுள்ளன. சைனா 13000 கி.மீடர் [7800 மைல்] தூரம் ஏகும் பேராற்றல் வாய்ந்த திரவச்சக்தி உந்தும் DF-5 ராக்கெட்டை விருத்தி செய்துள்ளது. மேலும் பல்வேறு அணு ஆயுதக் குண்டுகளைத் தூக்கிச் செல்லும் உன்னத வலுவுடைய திடச்சக்தி உந்தும் ஒற்றை ராக்கெட்டைச் சைனா விருத்தி செய்து வருவதாக அறியப்படுகிறது. ஆழ்கடல் கப்பல் மூலமாக [Submarine-borne Missile] ஏவப்படும் JL-2 ராக்கெட் சைனாவிடம் உள்ளது. பாகிஸ்தானும் அதுபோல் திடச்சக்தி உந்து ராக்கெட் துறையில் முன்னேறி யுள்ளது. சைனாவின் M-11 ராக்கெட்டை ஒத்த நுணுக்கத்தில் பாகிஸ்தானின் கஸ்னாவி [Ghaznavi] ஏவுகணை தயாரிக்கப் பட்டுள்ளது. ஒற்றைக் கட்ட ஷாஹீன்-I, [Shaheen-I] இருகட்ட ஷாஹீன்-II [Shaheen-II] ராக்கெட்டுகளைப் பாகிஸ்தானே உள்நாட்டில் தயாரிக்க முடியும். 2004 ஆம் ஆண்டில் பயிற்சிப் பயணம் செய்த ஷாஹீன்-II 1100 கி.மீடர் [660 மைல்] தூரம் செல்லக் கூடியது.
ரஷ்யாவும், பாரதமும் சேர்ந்து படைத்த பிரம்மாஸ்திரம்
2007 பிப்ரவரி 4 ஆம் தேதி தரைப் படைக்கு உதவும் “ஒலி மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய பிரமாஸ்” ஏவுகணை [A Supersonic Russian-Indian Built BrahMos Missile] ஒரிஸா ஏவு தளத்தில் தூண்டப்பட்டு வெற்றிகரமாகத் தன் முதல் பயிற்சிப் பயணத்தைச் செய்தது. எட்டு மீடர் நீளமுள்ள [27 அடி] இரு கட்ட ஏவுகணை மூன்று டன் எடைக்கு மேற்பட்ட பளுவைச் சுமந்து 290 கி.மீடர் [180 மைல்] தூரம் செல்லக்கூடியது! தளத்திலிருந்து தளத்தைத் தாக்கும் [Ground-to-ground Missile] அந்த அசுர பிரம்மாஸ்திரம் 2.8 மடங்கு ஒலி வேகத்தில் [2.8 Mac Speed] << S >> வளைவில் வங்காள விரிகுடா மீது பாய்ந்து சென்றது! பிரமாஸ் ராணுவக் கணைத் திட்டத்தின் தலைவர் [Head, BrahMos Air Space Ltd.] சிவதாணு பிள்ளை, ஏவுகணை குறிப்பிட்ட தளப்பகுதியைத் துல்லியமாக அடித்த திறமையைப் பெருமையாக வெளியிட்டார். “மேலும் ஏவுகணை ஒலிமிஞ்சிய வேகத்தில் முடுக்கு வளைவுகளில் [Sharp Manoeuvers] செலுத்த முடியுமா வென்னும் சோதனையும் நடத்தப் பட்டது. ஏவுகணை அப்பணிகளைச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப் பட்டு அதன் அசாத்திய போர்த்திறன் உறுதியானது,” என்றும் கூறினார்.
ரஷ்ய-இந்திய பிரமாஸ் கணை கூட்டுத் திட்டம், ராணுவப் பயனுக்காக 1998 பிப்ரவரி மாதம் இரண்டு அரசாங்களிடையே ஒப்பந்தமானது. முதலில் முடிவான பிரமாஸ் திட்டம் கப்பலைத் தாக்கும் கடற்-பீடத்து ஏவுகணையாக [Sea-Based Anti-Ship Missile] ஆக்கத் திட்டமிடப் பட்டது. தற்போது மூழ்கப்பல், ஆகாயக் கப்பல் மூலமாக [Submarine, Air Launch Versions] ஏவப்படும் ஏவுகணைகளாகப் படைக்கப் படுகின்றன. பிரமாஸ் தளப்-பீடத்து ஏவுகணை, வான்-பீடத்து ஏவுகணைகள் [Surface-Based & Air-Based] 10 மீடர் [30 அடி] உயரத்திலிருந்து 2.8 மடங்கு ஒலி வேகத்தில் பாய்ந்து தாக்குபவை. வான் பீடத்துக் கணை 300 கி. கிராம் பளுவைத் தூக்கும் வலுவுடையது. தளப் பீடத்துக் கணை 200 கி.கிராம் பளுவைத் தூக்கும் தகுதி உடையது. பிரமாஸ் ஏவுகணைகளைச் செங்குத்தாகவோ, சாய்வாகவோ, 360 டிகிரி வட்டத் திருப்பத்தில் நகர்த்தி ஏவிட முடியும்.
பிரமாஸ் அசுரத் தாக்குகணைகள்
BrahMos Large Missiles
பிரமாஸ் ஏவுகணை பல்வேறு திசைமாற்றுப் போக்குகளில் மேலும், கீழும் ஏறி யிறங்கித் தாக்கும் பொருளின் தூரத்துக்குத் தகுந்து செம்மைப் படுத்திச் செல்லக் கூடியது! ரேடாரின் கழுகுக் கண்களின் பிடிக்குத் தப்பி விடுபவை! தாக்கப்படும் பகைக் குறிச் சாதனங்களுக்கு ஒரு பெரும் சவாலாய்ப் பாய்கிறது, விரைவாகப் போகும் பிரமாஸ் கணை! தற்போது பிரமாஸை எதிர்த்தடிக்கும் ரஷ்யாவின் மாஸ்கிட் [Russia’s Moskit] போன்ற தடுப்புக் கணைகளும் [Counter Missiles] தயாராகி வருகின்றன. ஆயினும் வேகத் தாக்குக் கணைகள் ஒலி மிஞ்சிய விரைவில் பாய்ந்து செல்வதால், குறியிடத்தின் இருப்பை அறிந்து கொள்வதற்குக் போதிய காலம் கிடைப்பதில்லை! மேலும் அத்தகைய அசுர வேகத்தில் செல்லும் ஏவுகணையின் திசை மாற்றலோ, மேல் கீழிறக்குதலோ, வேகக் குறைப்போ புரிவது அத்தனை எளிய கட்டுப்பாடல்ல!
2001 முதல் 2003 வரை கப்பல் மீதும், வாகனம் மீதும், கரை மீதும் சாய்வாகவும், செங்குத்தாகவும் அமைக்கப்பட்டு ஆறு பிரமாஸ் ஏவுகணைகள் பயிற்சி செய்யப் பட்டன. 2004 ஆண்டு டிசம்பரில் இரு பிரமாஸ் கப்பல்-தாக்கு ஏவுகணையும், தளப்-பீடத்து ஏவுகணையும், கடல்-பீடத்து [Sea-to-Sea] ஏவுகணையும் பயிற்சி செய்யப்பட்டு, கடற்படைக் கப்பல்களில் அமைக்கப் பட்டன. விமானப்படை ஊர்தியில் [Su-30] அமைக்க வேண்டிய வானப்-பீடத்து பிரமாஸ் ஏவுகணைகளின் பயிற்சிகள் 2007 ஆண்டில் முடிவு பெறும்.
இந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்
1974 மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும் இராணுவ முற்பாடுகளில் முனைந்தது. கடந்த மத்திய ஆசிய கல்ஃப் நாட்டுப் போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன. எதிர்காலத்தில் எழும் போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப் போகின்றன. சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத் தயாரிப்பில் ழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித் தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்தது.
டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்
1982 ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது. அத்திட்டமே இந்திய இராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின. அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ரம்பமாயின. அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
1. நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG – An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.
2. பிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியன் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.
பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ரம்பமாயின. பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.
3. ஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile). எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது. அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது. நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது. ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.
4. திரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) – A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை. அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)
5. அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest), அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்]. உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது. 1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..
பாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா
இந்தியாவின் முதல் “அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை” சூரியா [Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள் ரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது. தனிப் பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப் பட்டுள்ளது. 2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு 20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்). சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம் [130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும் மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது. முதல் அடுக்கு ராக்கெட் திரவ எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும் பயன்படுத்தும். ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2, துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.
(தொடரும்)
+++++++++++++++++++
தகவல்:
1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007] 2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad 3. Indian Space Program By: Subhajit Ghosh 4 Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007] 5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007] 6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm] 7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science] 8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer] 9. Indian Space Program By: Wikipedia 10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html] 11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717] 12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp 13 Dr. Abdul Kalam : India’s Missile Program http://www.geocities.com/siafdu/kalam.html 14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive] 15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007] 16 Missile Test By India [February 5, 2007] 17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006] 18 Defense Update, New Pissile Program at Aero India (2007) 19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense 20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]
21 A Perennial Dream By: Dr. Abdul Kalam [http://sindhu.nomadlikfe.org/] 22 AllIndidianSite.com – Dr. Abdul Kalam-It’s All About People. 23 History of Indian Space Program -1 [www.bharat-rakshak.com/SPACE/space-history1.html] 24 History The Tiger of Mysore & His Rocket Barrages By: Rajivlochan, Dept of History, Punjab University. 25 India Successfully Tests Trisul Missile [www.spacewar.com/reports/India_Successfully_Tests_Trisul_Missile.html] 26 India’s Missile Program By: John Cherian [www.hinduonnet.com/fline/] 27 Indian ICBM Surya Missiles – India Defence Weapon Systems.
28. Missiles in Indian History. (Agni, Prithvi, Akash, Trishul, Nag, Astra, Surya,
India’s nuclear power generation capacity is expected to touch 22,480 MW by 2031 from the present 6,780 MW with 22 reactors.
சி. ஜெயபாரதன், B.E.(Hons), P. Eng. [Nuclear], Canada
இந்திய அணுமின் நிலையங்களின் பத்தாண்டுப் பெருக்கம்
2021 ஜூலை 31 தேதிக் கணக்குப்படி இந்தியாவில் இயங்கிவந்த அணுமின் நிலையங்களின் எண்ணிக்கை : 22 அவற்றில் தாராபூர், கொதிநீர் உலைகள் : 2, கனநீர் அணுமின் நிலையங்கள் : 18, கூடங்குளத்தில் அழுத்த நீர் ரஷ்யன் மாடல் : 2. இவை அனைத்தும் உற்பத்தி செய்யும் மின்சக்தி மொத்தம் : 6780 MW ஆற்றல். இவற்றின் உற்பத்தி அளவு 100 MW முதல், 500 MW , 700 MW 1100 MW வரை. தற்போது இந்தியத் தொழில்துறைகள் பெருகி, மின்சாரப் பற்றாக் குறைப் பிரச்சனை விளைந்து வருகிறது. ஆகவே இந்திய நடுவண் அரசு 2031 ஆண்டுக்குள் புதிய அணுமின் நிலையங்கள் நிறுவி, ஆற்றல் திறத்தை 22,480 MW உற்பத்தி செய்யப் போவதாய் அறிவித்துள்ளது. அவற்றில் சில கனநீர் மாடல். சில அழுத்த நீர் மாடல். இவற்றைக் கட்டி இயக்க நிதித்தொகை 18,000 கோடி தேவைப்படும் என்று கணிக்கப்படுகிறது.
The New Shepard Rocket Lifts off the Launching Site near Van Horn, Texas, USA
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng [Nuclear], Canada
From left: Mark Bezos, Jeff Bezos, Oliver Daemen, Ms Wally Funk
2021 ஜூலை 20 ஆம் தேதி அமெரிக்கக் கோடீஸ்வரக் கோமான், அமேஸான் தொழில் அதிபர் : ஜெஃப்ரி பெஸாஸ் [Jeffry Bezos] முதன்முதல் தன்னுடன் மூன்று பொது நபரைச், சுய இயங்கு ராக்கெட் விண்சிமிழில் ஏற்றிக் கொண்டு, விண்வெளியில் 62 மைல் [100 கி.மீ] உயரம் ஏறி, பூஜிய ஈர்ப்பு [Zero Gravity] மிதப்பு நிலை உணர்ந்து, பாதுகாப்பாக மீண்டு, பூமியில் வந்திறங்கினர்.விண்வெளிச்சிமிழ், பூமியைச் சுற்றாது, உயரத்தை எட்டியதும் இறங்க ஆரம்பித்தது. அப்போது பளு தூக்கிய ராக்கெட் பிரிந்து, தானாக முன்குறித்த இடத்தில் செங்குத்தாகக் கீழே இறங்கியது.முன்பு இவ்வாறு இறங்கிய இந்த ராக்கெட், இப்போது மூன்றாம் தடவை மீண்டும் பயன்படுகிறது.
விண்வெளி விமானிகள் விண்சிமிழில் நுழைகிறார் The New Shepard Rocket Reaches The Zero Gravity Limit 62 miles (100 km) [The Karman Line]
The New Shepard booster performed an autonomous landing, the third consecutive landing for this booster.
ஜெஃரி பெஸாஸ் பயணத் தலைவர், வயது : 57 , சகோதரர் மார்க் பெஸாஸ் வயது :52 முன்னாள் நாசா விண்வெளி விமானி மிஸ் வாலி ஃபன்க் வயது : 82, வாலிபன் ஆலிவர் தேமன் வயது : 18. அந்த மூவரையும் தன்னுடன் சேர்த்து விண்சிமிழில் ஏற்றிக் கொண்டு, வான் ஹார்ன், டெக்ஸஸ் பாலைவனத்தில் [Van Horn, TX, USA] ஜூலை 20 ஆம் தேதி புதிய சுய இயங்கு செப்பெர்டு ராக்கெட், காலை 9 : 11 மணிக்கு ஏவப் பட்டது. எந்த சிக்கலும் நேராமல், ராக்கெட் செங்குத்தாக ஏறி, 250,000 அடி [75 km ] உயரத்தில் விண்சிமிழ் பிரிந்து, [கார்மன் எல்லை ] [Karman Line Zero Gravity Limit] 62 மைல் [100 கி.மீ.], பூஜிய ஈர்ப்பு [Zero Gravity] அரங்கில் சில நிமிடங்கள் உடல் மிதப்பு நிலையை விமானிகள் உணர்ந்தனர். பிறகுசுய இயங்கு ராக்கெட் தானாகக் குறிப்பிட்ட வட்டத்துள் கீழே இறங்கியது. விண்சிமிழ் பூமியைச் சுற்றுப் பாதையில் சுற்றாமல் புவிக்குப் பாராசூட் குடைகள் மூலம் மீண்டது. ராக்கெட் இறங்கிய தளத்துக்கு இரண்டு மைல் தூரத்தில் விண்சிமிழ் தானாக பாதுகாப்பாக நான்கு விமானிகளை இறக்கியது.வியக்கத் தக்க இந்த விண்வெளிக் காட்சி அனைத்தும் சுமார் 10 நிமிடங்கள்தான் நீடித்தன.
முதன்முதல் அப்பொல்லோ 11 ராக்கெட் 1969 ஜூலையில் நிலவை நோக்கிச் சென்று, நீல் ஆர்ம்ஸ்டிராங் சந்திரனில் கால் வைத்த நினைவு நாளில், ஜெஃரி பெஸாஸ் குழுவினர் நால்வர் 2021 ஜூலை 20 இல் பூஜிய ஈர்ப்பு விண்வெளி எல்லைக்குப் பயணம் செய்து பாதுகாப்பாக மீண்டார்.
ராக்கெட் விமானத்தில் முதன்முதல் விண்வெளி விளிம்பில் பயணம் செய்து மீண்ட தீரர் ரிச்செர்டு பிரான்ஸன்
சி. ஜெயபாரதன், B.E (Hons), P. Eng, Nuclear, கனடா
Virgin Galactic’s Richard Branson has reached space aboard his own winged rocket ship, vaulting the nearly 71-year-old founder past fellow billionaire and rival Jeff Bezos, who will fly to space in a craft of his own nine days from now. (July 11, 2021)
முதன்முதல் ராக்கெட் விமானத்தில் வெற்றிப் பயணம்
2021 ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடத்திய முன்னோடிச் சோதனைப் பயிர்ச்சியில், ரிச்சர்டு பிரான்ஸன் [வயது 71, பிரிட்டனைச் சேர்ந்தவர்] முதன்முதல் தான் 15 ஆண்டுகள் டிசைன் செய்து விருத்தி அடைந்த ராக்கெட் விமானத்தில் [பெயர் : ஐக்கியம் (UNITY)] பயணம் செய்து விண்வெளி விளிம்பில் பறந்து காட்டினார். அவருடன் மற்றும் இரண்டு துணை நிபுணர்கள் பறந்து பாதுகாப்பாக ராக்கெட் விமானம் தரையில் மீண்டது. இது செல்வந்தக் கோமான்கள், மற்றும் பொதுநபர் விண்வெளியில் சுற்றுலா பயணம் செய்யப் பாதை இட்டது. இந்த ராக்கெட் வாகனத் தயாரிப்பைச் செய்து முடிக்க பிரான்ஸன் 17 ஆண்டுகள் எடுத்துள்ளார்.
ராக்கெட் விமானத்தை இருபுறமும் ஒரு சாதா விமானம் 8.5 மைல் [13 கி.மீ.] உயரத்துக்குத் தூக்கிப் பறந்தது. பிறகு அந்த உயரத்தில் ராக்கெட் விமானம் பிரிந்து, கீழாகத் தணிந்து, மாக் 3 [MACH 3] [மூன்று ஒலி வேகம் [Sound Velocity] தாண்டி, 53.5 மைல் [86 கி.மீடர்] உயரத்தில் பறந்து, பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டு, [Zero Gravity] மிதப்பு நிலையை உணர்த்தியது. ராக்கெட் விமானப் பிரிவு, பயணம், இறங்கல் அனைத்து இயக்கங்களும் 15 நிமிடங்களில் முடிந்தன. ராக்கெட் விமானத்தை இயக்கியவர் ; ரிச்சர்டு பிரான்ஸன். உதவிக்குச் சென்றவர் ; ஷிரிஷ பாண்டுலா & காலின் பென்னெட். இதை பிரான்ஸன் அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோவில் நடத்திக் காட்டினார்.
இந்த அரிய காட்சி உலகில் விண்வெளி சுர்றுலாப் பயணத்தை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதற்குக் கட்டணம் நபருக்கு ; 250,000 டாலர். பிரான்ஸனுக்குப் போட்டி, ஏலான் மஸ்க் & பெஸாஸ் [Elon Musk & Bezos]
Richard Branson, right, answers questions while crewmates Sirisha Bandla and Colin Bennett listen during a news conference at Spaceport America near Truth or Consequences, N.M., on Sunday, July 11, 2021. Branson and the crew from his Virgin Galactic space tourism company reached an altitude of about 53 miles (88 kilometers) over the New Mexico desert before safely gliding back home to a runway landing at Spaceport America. (AP Photo/Susan Montoya Bryan)The rocket plane carrying Virgin Galactic founder Richard Branson and other crew members takes off from Spaceport America near Truth or Consequences, New Mexico, Sunday, July 11, 2021. (AP Photo/Andres Leighton)ராக்கெட் விமானம் பிரிந்து விண்வெளி விளிம்புக்குப் பயணம்This May 29, 2018 photo made available by Virgin Galactic shows the company’s VSS Unity on its second supersonic flight. After reaching nearly 50,000 feet (15,000 meters), Unity will be released from the specially designed aircraft Mothership Eve, and drop for a moment or two before its rocket motor ignites to send the craft on a steep climb toward space. (Virgin Galactic via AP)The Virgin Galactic rocket plane, with founder Richard Branson and other crew members on board, lands back in Spaceport America near Truth or Consequences, N.M., Sunday, July 11, 2021. (AP Photo/Andres Leighton)ராக்கெட் விமானத்தை தூக்கிப் பறந்த துணை விமானங்கள்In this photo provided by Virgin Galactic, lead operations engineer Colin Bennett, top, shows a message for @England from space as he and other crew members experience zero gravity while aboard Virgin Galactic’s winged rocket ship on Sunday, July 11, 2021. Entrepreneur Richard Branson and five crewmates from his Virgin Galactic space-tourism company reached an altitude of about 53 miles (88 kilometers) over the New Mexico desert, enough to experience three to four minutes of weightlessness and see the curvature of the Earth. (Virgin Galactic via AP)
Virgin Galactic’s Richard Branson has reached space aboard his own winged rocket ship, vaulting the nearly 71-year-old founder past fellow billionaire and rival Jeff Bezos, who will fly to space in a craft of his own nine days from now. (July 11, 2021)
GE Renewable Energy announced today it has produced its 44,444th wind turbine blade at LM Wind Power’s wind turbine blade manufacturing sites in India. These blades have been manufactured in the two factories located near Bangalore, Karnataka and in Vadodara, Gujarat.
தற்போதைய இந்தியாவின் குறிக்கோள் திட்டங்களில் முதன்மையானது மின்சக்தி உற்பத்தி பெருக்க பசுமை எரிசக்தி பயன்பாடு, மீள்புதிப்பு முறைப்பாடு [Green Energy & Renewable Systems] அமைப்புகள் ஏற்படுத்துவது. பொதுவாக சூரியக் கதிர்ச்சக்தி மூலமும், காற்றாடிச் சுழலிகள் மூலமும் இந்தியாவில் பசுமை எரிசக்தி மின்சக்தி ஏற்பாடுகள் “ஏறி இறங்கும்” [Swing Loads] தேவைக்கும், அடிப்படை நிலைமைக்கு [Baseload] நீரூட்டு மின்சக்தி, நிலக்கரி வெப்ப மின்சக்தி நிலையங்கள், அணுமின்சக்தி நிலையங்கள், [Hydro Electric, Thermal Coal Power, Nuclear Power Stations] தற்போது இயங்கி வருகின்றன.
இக்கட்டுரை காற்றாடிச் சுழலி மின்சக்திக்கு தேவையான சுழற்தட்டுகள் [Rotating Blades] தயாரிக்க ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி கர்நாடகா பெங்களூரு, குஜராத் வடோதரா, நகரங்களில் தமது யந்திர ஆலைகள் அமைத்துள்ளதைப் பற்றி விபரம் தருகிறது.
Renewable energy producer Boralex and Vestas have entered a 15-years full scope service contract in France that includes 280 MW from Boralex’s portfolio of Vestas wind parks in France.
Vestas now provides O&M service to over 50,000 wind turbines and around 9,500 dedicated service colleagues across 73 countries work committedly to maintain and support the biggest wind turbine fleet in the world.
2021 ஜூனில் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி தமது 44,444 ஆவது சுழற்தட்டு தயாரிப்பை இந்தியாவில் செய்துள்ளதாகப் பெருமைப் பட்டுக் கொண்டது. தணிவாற்ற மின்சக்தி ஏற்பாடுகள் [LM Wind Power Operations] பெங்களூருவில் 1994 துவங்கின. அப்போது 11 கிகா வாட்ஸ் [11 Gega Watts] திறம் கொண்ட, காற்றாடி மின்சக்தி நிலையம் சுமார் 6 மில்லியன் இல்லங்களுக்கு மின்சாரம் அனுப்பியது.
Development of wind power in India began in December 1952, when Maneklal Sankalchand Thacker, a distinguished power engineer, initiated a project with the Indian Council of Scientific and Industrial Research (CSIR) to explore the possibilities of harnessing wind power in the country. The CSIR established a Wind Power Sub-Committee under P. Nilakantan, which was assigned the task
Iberdrola will build its next wind farm in Spain, the Herrera Complex, with the most powerful onshore wind turbine, after awarding Siemens Gamesa the contract to supply the first SG 4.5-145 wind turbines, with a 4.5 MW power unit; which is almost seven times more powerful than the first wind turbines installed in Spain more than two decades ago.
இந்தியாவில் காற்றாடி மின்சார உற்பத்தி பேரளவு என்று அறியப்படுகிறது. ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி 55 செட்ஸ் கடற்கரை காற்றாடிச் சுழலி [2.7 – 132 மெகா வாட்] மின்சக்தித் தூண்கள் இந்தியாவில் கட்டுவதாக உடன்பாடு செய்துள்ளது. GE 148.5 மெகா வாட் திறமுள்ள யூனிட் 125,000 இல்லங்களுக்கு மின்சாரம் பரிமாறும்.
GE Renewable Energy And Continuum Green Energy Sign Large Wind Power Project In India. With more than 117 GW of turbines under service, Vestas helps remove over a hundred million tonnes of CO2 every year from the atmosphere by providing reliable, sustainable and cost-effective renewable energy, meeting global energy demand.
With more than 117 GW of turbines under service, Vestas helps remove over a hundred million tonnes of CO2 every year from the atmosphere by providing reliable, sustainable and cost-effective renewable energy, meeting global energy demand.
The increasing investment in wind energy is predicted to boost market growth over the forecast period. The growing environment protection regulations fuel the power generation industry for shifting to environment-friendly and cleaner energy resources. Different countries across the globe are focusing on the development of renewable energy power generation for reducing their dependence on conventional sources for power generation. Recently, it has been observed that investments in solar, wind, and other renewable energy sources are increasing continuously.The Nordex Group has closed the second quarter of 2021 with an order intake of 1,534.1 MW (Q2 2020: 888 MW). The intake of firm orders in the Projects segment (excluding the service business) reached a volume of 2,781.6 MW in the first half of 2021 (H1 2020: 2,531.9 MW). From April to June 2021, […]
Vestas has received a 92 MW order to power an undisclosed wind project in the U.S. The project consists of 22 V150-4.2 MW turbines.
Vestas has received a 92 MW order to power an undisclosed wind project in the U.S. The project consists of 22 V150-4.2 MW turbines. The order includes supply, transport, and commissioning of the turbines, as well as a multi-year Active Output Management 5000 (AOM 5000) service agreement, designed to ensure optimised performance of the asset
GE Renewable Energy to supply, install and commission 55 sets of its 2.7-132 onshore wind turbines The 148.5 MW wind farm to power the equivalent of 125,000* households in India
CHINA / SOCIETY‘Divine vessel’ launched successfully; three astronauts aboard to reach China’s space station core moduleBy Deng XiaociPublished: Jun 17, 2021 09:23 AM
Riding atop the Long March-2F Y12 carrier rocket, the Shenzhou-12 manned spacecraft was successfully launched into preset orbit on Thursday morning from the Jiuquan Satellite Launch Center in the Gobi Desert in Southwest China’s Gansu Province, signifying that China’s Tianhe space station core cabin module is now only hours away from receiving its first batch of astronauts for their three-month stay.
With the aim of ferrying a three-strong crew consisting of veteran astronaut Nie Haisheng, who visited space twice in October 2005 and June 2013, Liu Boming, who had flew to space and participated the country’s first spacewalk together with Zhai Zhigang during the Shenzhou-7 mission in 2008 and one new face Tang Hongbo to the orbiting space module of Tianhe, Shenzhou-12 or the “Divine Vessel” entered its designated orbit after separating with the rocket 573 seconds after its launch, declaring full success for the launch mission, Global Times learned from China’s Manned Space Agency.
The three astronauts of the Shenzhou-12 mission, who were selected from China’s first and second batch of astronauts, will stay in space for three months, during which they will carry out tasks including repair and maintenance, appliance switch and scientific operation of payloads.
It was the first time in nearly five years that China has sent astronauts into space, and is the first crewed flight mission and third leg of the country’s total 11 space launch missions of the intensive space station construction phase.
China previously sent the space station’s Tianhe core cabin module via Long March-5B carrier rocket on April 29, and the Tianzhou-2 cargo spacecraft via Long March-7 on May 29.
Shenzhou-12 successfully launched for manned mission to space on June 17, 2021 Graphic: GT
Vessel of life
According to Gao Xu, the deputy director designer of the Shenzhou-12 with the project prime contractor China Academy of Space Technology (CAST), the development of the manned spacecraft followed the highest standards in the country’s space industry.
The Shenzhou-12 is made up of three sections—an orbiter module, a return module and a propelling module, and has 14 sub-systems onboard. Gao referred to the spacecraft with a term of affection: “Vessel of life”, as it will not only ferry three astronauts to the orbiting Tianhe core module, but is also expected to carry them home to Earth in approximately 90 days.
Making the safety of astronauts a priority, the research team of the Shenzhou-12 mission has also developed a new emergency response system to ensure that the astronauts can be rescued both in space and at the launch site.
According to CAST, two Shenzhou vessels have been transported to the launch site, which means that Shenzhou-12 has a back-up that will stand by in the event of an emergency. The latter has the capability of being launched in eight and a half days to carry out space rescue work after the launch of the former.
Compared to its crewed mission predecessor from five years ago, whose exterior was dull grey color, the Shenzhou-12 has a new shining silver look, due to the application of a new type of heat-resistant coating.
The Shenzhou-12 will spend longer in orbit than previous Shenzhou spacecraft, meaning it will face with a harsher space environment. For example, it Sun-exposed side will reach 90 degree Celsius on the surface and minus 30 degree Celsius on the far side from the Sun, according to CAST.
The new coating that uses new materials will help protect the inside of the craft from this harsh environment, and prevent it from affecting the living conditions of astronauts and working conditions for multiple precision appliances on board, said the coating designers.
The new coating will also provide protection against a range of radiation in space around the clock, they said.
As the only manned space launch vehicle, Long March-2F is 58.3 meters in height with four 2.25-diameter-boosters and a 3.35-meter-diameter core stage.
The rocket is the go-to type for China’s manned space program, and with Thursday’s successful launch, it has scored a perfect launch rate in all 14 deployments including seven manned flight missions, five uncrewed spacecraft flight missions and the launch of two space labs (Tiangong-1 and -2.)
The development of the rocket type was approved by state authorities in 1992, the same year the country’s manned space project was approved. Long March-2F made its successful maiden flight in 1999.
According to developers of the rocket from the China Academy of Launch Vehicle Technology (CALT), the escape tower – the lightning rod-like device atop the rocket body – will enable astronauts to get out of the rocket from 15 minutes before launch to 120 seconds after take-off in emergency situations.
To make the flight safer, the Long March-12 developers have further enhanced the rocket’s escape mechanism, adding a new ignition function to the launch safety system.
CALT designers said that once an emergency occurs, the escape system will be activated, pulling off the return module of the spacecraft from the malfunctioning rocket. The module will then open its parachute before landing on the ground.
However, the parachute system can be easily affected by the wind near the ground.
To address that issue, the new ignition system will enable the escaping craft to fly in a direction perpendicular to the wind direction, so as to make the process safer and more flexible.
This improvement has enhanced the rocket security assessment value to a world-leading 0.99996. “That’s to say, there would be four failed escapes in 100,000 launches,” disclosed Chang Wuquan, one of the system’s designers.
Shenzhou-12 astronauts’ lives in space Infographic: Wu Tiantong/GT
Breakthroughs to accomplish
According to CAST, Shenzhou-12 will attempt a fast and automated rendezvous and docking with the Tianhe core cabin for crewed spacecraft, a first in the country’s history which can take place only 6.5 hours after the launch.
During the mission of the Tianzhou-2 cargo spacecraft, China managed to pull off a fast but smooth automatic docking of the cargo ship with the Tianhe module within only eight hours after launch.
Pang Zhihao, a Beijing-based senior space expert, hailed the breakthrough technology, saying it would tremendously benefit crewed missions, as it would save astronauts from longer stays in the narrow space onboard the spacecraft, making their space travel more comfortable.
Also, the spacecraft will conduct an experiment of fly-around and radial approach of rendezvous and docking with the orbiting space station core module.
Following that, the Shenzhou-12 will stay in-orbit and fly with the Tianhe core module for three months, marking another first in China’s space history.
Unlike China’s previous Shenzhou craft, which returned to Earth from an orbit of fixed altitude, Shenzhou-12 will be able to return from a range of orbital locations, a design that is aimed to enhance the craft’s adaptability and reliability for its journey back to Earth.
The Shenzhou-12 crewed flight is believed by insiders to set a solid foundation for following space station construction missions which started in late April with the Tianhe core cabin launch and will last through 2022.
Next, the Tianzhou-3 cargo craft will be launched in September, and the Shenzhou-13 crewed spaceship will follow in October, according to CMSA director Hao Chun.
As the first manned space station mission, the Shenzhou-12 flight is of utmost significance due to its crucial role in connecting the previous 2 missions and the following legs in the 11 intensive construction schedule.
Arctic sea ice may be thinning twice as fast as previously thought, scientists say
The discovery raises concerns that parts of the region could be ice-free by 2040
It would cause global temperatures to rise and increase risk of extreme weather
Previous snow data was outdated and relied on Soviet expedition measurements
Concerning: Sea ice in much of the Arctic may be thinning twice as fast as previously thought, scientists fear. The research vessel Polarstern is pictured drifting in Arctic sea ice
Arctic seas: Researchers studied sea ice thickness in all seven Arctic coastal seas (pictured). In Laptev, Kara and Chukchi, waters increased by 70 per cent, 98 per cent and 110 per cent respectively, when compared with earlier calculations
Calculations: Researchers used new computer models to produce detailed snow cover estimates from 2002 to 2018 (pictured in red). These are more accurate than previous data from Soviet expeditions between 1954 and 1991 (green) and a modified version of these recordings which account for changes in sea ice throughout the year (blue)
SEA LEVELS COULD RISE BY UP TO 4 FEET BY THE YEAR 2300
பூகோளச் சூடேற்றத்தால் மாறும் கடல் மட்ட உயர்ச்சி, தாழ்ச்சி நிகழ்வுகள்
பூகோளக் காலநிலை மாற்றங்கள் புவியின்பனிதட்டுகளைத் தொடர்ந்து பலவீனப் படுத்தி, கடல்நீர் உஷ்ணத்தை உயர்த்தி, பனித்தட்டுகளும், க்டலும் ஒன்றை ஒன்று பாதித்து, உலக மாந்தருக்கு, காலநிலைச் சுழல்வீக்க விளைவை [Climate Domino Effect] உண்டாக்கியுள்ளன. இந்த புதிய காட்சிகளைப் புவித்தளக் கொந்தளிப்பு விளைவு [Earth System Dynamic] என்னும் புத்தகம் வெளியிட்டுள்ளது.
2300 ஆண்டு காலத்தில் கடல்நீர் மட்டம் 4 அடி [1.2 மீடர்] உயர்ந்து விடும் என்று அச்சம் ஊட்டுகிறது புது வெளியீடு.
2020 ஆகஸ்டு மாதம் ஜெர்மெனி நிபுணர், கீரீன்லாந்து 532 கிகா டன் [giga ton (1 gega ton = 1 X10^9 ton] பனிப் பளுவை இழந்துள்ளது என்று அறிவித் துள்ளார். இதுபோல் பேரளவு பனிப்பளு உருகி இழக்கப் படவில்லை என்றும் கூறியுள்ளார்.
மெலிந்து போகும் வடதுருவக் கடற்பனித் தட்டுகள் காலநிலைச் சூடேற்றச் சுழல்வீக்க விளைவினை உண்டாக்கும்.
ஆய்வாளர் மேற்கு அண்டார்க்டிகா, கிரீன்லாந்து, சூடான அட்லாண்டிக் வெப்ப ஓட்டப் பகுதி,, அமேசான் பெருமழைக் காடுகளை எடுத்துக்கொண்டார்.
ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி, 2 டிகிரி செல்சியஸ் உஷ்ண உயர்ச்சிக்கு, மூன்று மில்லியன் கணனிப் போலிக் கணிப்புகள் [Computer Simulations] சூடேற்ற சுழல்வீக்கத்தை உறுதிப் படுத்தின.
2017 ஆண்டு முடிவு வரை, சுமார் 40% உலக ஜனத்தொகை கடற்கரை ஓரத்தில்தான் வாழ்ந்து பாதிக்கப் பட்டுளார்.